என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
- பெண்கள் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்
- புத்தாடைகளை அணிந்து பெண்கள் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
நாகர்கோவில் :
கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
நாகர்கோவிலில் வடசேரி பகுதிகளில் பொதுமக்கள் ஓண ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகளை அணிந்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் அவர்கள் ஓண ஊஞ்சலாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளிலும் ஓண ஊஞ்சல் வீடுகள் முன்பு கட்டப்பட்டிருந்தது. அதில் குடும்பத்தோடு ஆடி மகிழ்ந்தனர். வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமும் போடப்பட்டிருந்தது. பல்வேறு கலரிலான பூக்களில் பெண்கள் கோலமிட்டு மகிழ்ந்தனர். வடசேரி கிருஷ்ணன்கோவில் வடிவீஸ்வரம், பார்வதிபுரம் வெட்டூர்ணிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளும் முன்பு அத்தபூக்கோலம் போடப்பட்டிருந்தது. கேரளாவை ஒட்டியுள்ள களியக்காவிளை, மார்த்தாண்டம், மேல்புறம், குழித்துறை, தக்கலை பகுதிகளிலும் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதிகளில் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலம் போடப்பட்டுள்ளது. புத்தாடைகளை அணிந்து பெண்கள் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
ஓணம் பண்டிகையைடுத்து இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டிலும் வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் ஓணம் பண்டிகையையொட்டி விடிய விடிய பூக்கள் வியாபாரம் நடந்தது.
ராயக்கோட்டை, பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, திண்டுக்கல், சங்கரன்கோவில் பகுதியில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வந்து இருந்தது.
பிச்சிப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டது. மற்ற பூக்கள் குறைவான அளவில் விற்பனையானதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்