என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை ஓணம் பண்டிகை- பூக்கள் விலை அதிகரிப்பு
    X

    நாளை ஓணம் பண்டிகை- பூக்கள் விலை அதிகரிப்பு

    • ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.
    • கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும் மல்லி-ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    போரூர்:

    ஓணம் பண்டிகை நாளை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூக்கள் விலை சற்று அதிகரித்து உள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், சேலம் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இன்று 40 வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு குவிந்து இருந்தன.

    ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்ந்து உள்ளது. கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும் மல்லி-ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-

    சாமந்தி- ரூ.100வரை, பன்னீர் ரோஸ்-ரூ.70, சாக்லேட் ரோஸ்-ரூ.120, அரளி- ரூ.200, மல்லி-ரூ.300, முல்லை-ரூ.180, ஜாதி-ரூ.240, சம்பங்கி-ரூ.150, கனகாம்பரம் -ரூ.400.

    இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூ விற்பனை விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிகாலை முதலே மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பூ கடைக்காரர்களின் வரத்து குறைந்து இருந்தது. பூ விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது என்றனர்.

    Next Story
    ×