search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்பத்தி"

    • பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல்.
    • 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளுக்கு கிராம சபையில் தீர்மானம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) தண்ணீர் தினத்தன்று கிராமசபா கூட்டம் 241 கிராம ஊராட்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.

    இக்கிராமசபா கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவினம், 2022-23 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம் குறித்து விவாதித்தல், சுத்தமான் குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், ஊரக பகுதிகளில் விரிவான கிராம சுகாதாரம் பற்றி எடுத்துரைத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளுக்கு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து இக்கிராமசபையில் விவாதிக்கப்பட உள்ளது.

    எனவே, இக்கிராமசபா கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விபரங்களை விவாதித்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் மானாவாரி நிலத்தில் அமோகம்
    • நல்ல வியாபாரம் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

    கரூர்,

    பழையஜெயங்கொண்டம் பகுதியில், நாட்டு துவரம் பருப்பு உற்பத்தி பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, சேங்கல், புதுப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் மானாவாரி நிலத்தில் துவரை சாகுபடி செய்திருந்தனர். கடந்த மாதம் துவரை செடிகள் அறுவடை செய்து, செடிகளில் இருந்து துவரை தரம் பிரிக்கப்பட்டது. தரம் பிரிக்கப்பட்ட துவரையை, நாட்டு துவரம் பருப்பு உருவாக்குவதற்கான பணிக ளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டு துவரம்பருப்பு உற்பத்தி செம்மண் கொண்டு தண்ணீர் கலவையில் கலந்து கலர் சேர்க்கப்படுகிறது. பின்னர் வெயிலில் உலர்த்தப்படுகி றது. உலர்த்தப்பட்ட துவரை அரவை மிஷினில் அரைக்கப்படுகிறது. இதில் நாட்டு துவரம்பருப்பு தனியாக பிரிக் கப்படுகிறது. இந்த துவரம்பருப்பு நல்ல தரமான சுவையுடன் இருக்கும். இந்த துவரம் பருப்பு கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


    • ஆலைகளில் விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய மாணவர்கள் தீர்வு காண வேண்டும் என ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.
    • சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 18-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரியின் செயலர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி கலந்து கொண்டார்.

    பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பலர் அறக்கட்டளைகள் தொடங்கி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு முன்னாள் முதல்வர் காமராஜரே முன்னோடியாக திகழ்கிறார். பட்டம் பெற்ற நீங்கள் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    நீங்களும் தொழில்முனைவோராக மாறி சிவகாசியின் பெயரை உலக அளவில் உச்சரிக்க உதவியாக இருக்கவேண்டும். இந்தியாவில் உள்ள பணிகளை செய்ய அதிகமானவர்கள் தேவைப்படும் நிலையில் பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வதை தவிர்க்கவேண்டும்.

    தமிழகத்தில் போதிய ஆட்கள் இல்லாத நிலையில் தான் வடமாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் தமிழகத்துக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் நீர்நிலைகளை உருவாக்கி, பாதுகாக்க வேண்டும்.

    பட்டாசு ஆலைகளில் விபத்து இல்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய தேவையான வழிமுறைகளையும், நிரந்தர தீர்வுகளையும் மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் 1,057 மாண-மாணவிகளுக்கு பட்டங்களை நீதிபதி ஸ்ரீமதி வழங்கினார். காளீஸ்வரி கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிருஷ்ண மூர்த்தி, காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் வளர்மதி, மாணவர்களின் பெற்றோர்கள், உறவி னர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை துணை முதல்வர் முத்துலட்சுமி செய்திருந்தார்.

    • அட்மா திட்டத்தின் கீழ் அசோலா தீவனம் மற்றும் பசுந்தீவனம் உற்பத்தி குறித்த பயிற்சி, தளிகை கிராம கால்நடைகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • தளிகை கிராம கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் ஜெயந்தி கால்நடைகளுக்குத் தேவையான சத்து மிகுந்த பசுந்தீவனம் குறித்து பயிற்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் வட்டாரம் வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் கீழ் அசோலா தீவனம் மற்றும் பசுந்தீவனம் உற்பத்தி குறித்த பயிற்சி, தளிகை கிராம கால்நடைகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    சிறப்பு பயிற்றுநரான குமாரப்பாளையம், ரிட்டிக்ஷா சுற்றுசூழல் பண்ணை மற்றும் வர்த்தக மேலாளர் மதன்ராஜ், அசோலா உற்பத்தியும் அதன் பயன்பாடுகளும், அசோலாவின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள், பாத்திகளில் அசோலா உற்பத்தி, பராமரிப்பு, அறுவடை போன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு செயல் விளக்கத்துடன் பயிற்சி வழங்கினார்.

    தளிகை கிராம கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் ஜெயந்தி கால்நடைகளுக்குத் தேவையான சத்து மிகுந்த பசுந்தீவனம் குறித்து பயிற்சியளித்தார். நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, அசோலா மற்றும் பசுந்தீவன உற்பத்தியின் அவசியம் குறித்து பயிற்சி வழங்கினார்.

    வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா, உதவி வேளாண்மை அலுவலர் திலீப்குமார், தோட்டக்கலைத்துறை உதவி தோட்டக்கலை அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துறை சார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினர்.

    அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவேற்றம் செய்து, பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    • ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி ஆய்வு.
    • ரூ.68.80 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணி.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கடினல்வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும், ஆயக்காரன்புலம்-2 ஊராட்சி பாப்பிரெட்டி குத்தகை கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் முதல் மருதூர் தெற்கு வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 255.21 லட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் தெற்கு முட்டகம் வரை ரூ. 23.50 லட்சம் மதிப்பீட்டிலும், தென்னடார் ஊராட்சியில் மேலக்காடு சாலை ரூ. 49.80 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் புஷ்பவனம் ஊராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், வாய்மேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15-வது மான்ய நிதியின் கீழ் ரூ. 42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டிடம் கட்டும் பணிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது நிதிக்குழு சுகாதார மானியத்தில் ரூ.68.80 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜீ, பாஸ்கர் குஜாரத் கெமிக்கல் லிமிடெட் மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.

    • பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    • மழைநீர் வடிந்து மீண்டும் 2-வது முறையாக உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிந்து, பாத்திகளில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது.

    உப்பு உற்பத்திக்கு தயாரான நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    மீண்டும் 2-வது முறையாக இந்த ஆண்டு உப்பு பாத்திகளை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தாண்டு உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் மழையால் பாதித்தது.

    உப்பு எடுக்கும் தருவாயில் திடீரென பெய்த கனமழையால் உப்பு பாத்திகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.

    பாத்திகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து மீண்டும் 2-வது முறையாக உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளது.

    எனவே மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் உப்பு உற்பத்தியாளர்களுக்கும், உப்பள தொழிலாளர்களுக்கும் மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலத்தில் செவ்வாய்பேட்டை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளிப் பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
    • பொங்கலையொட்டி ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், சேலம் வெள்ளி மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது.தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலத்தில் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, மணியனூர், தாதகாப்பட்டி, லைன்மேடு, கொண்டலாம்பட்டி, பள்ளப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகத்தான்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளிப் பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் கால் கொலுசுகள், அரைஞாண் கயிறு, சந்தன கிண்ணம், குங்குமச் சிமிழ், தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறிப்பாக வட மாநிலங்களில் சேலம் வெள்ளிப் பொருட்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. ஏனென்றால் சேலத்தில் தயார் செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் சீக்கிரம் கருக்காது என்று அந்த பகுதியில் உள்ள மக்கள் மனதில் தனி நம்பிக்கை உள்ளது.

    பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெள்ளி வியாபாரிகள்,சேலம் வெள்ளி வியாபாரிகளிடம் கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களுக்கு ஆர்டர்கள் தந்து வருகின்றனர்.

    பொங்கலையொட்டி ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், சேலம் வெள்ளி மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது.தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.

    இது குறித்து வெள்ளி வியாபாரிகள் கூறுகையில், "ஒவ்வோர் வருடமும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா மாநில வெள்ளி வியாபாரிகளும் சேலம் வெள்ளிவியாபாரிகளிடம் ஆர்டர்கள் தருவது வழக்கம் ஆகும். இந்த வருடம் பொங்கல் பண்டிகை, தை, மாசி மாதங்களில் அடுத்தடுத்து திருமண முகூர்த்த தினங்கள் வருவதால், கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக 'லைட் வெயிட்' எனப்படும் எடை குறைவாக உள்ள கொலுசுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அந்த மாடல் கொலுசுகளை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறோம். கால்கொலுசுகளுக்கு அடுத்தப்படியாக அரைஞாண் கயிறு, டம்ளர்கள் உள்ளிட்டவை அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளிக்கட்டி ரூ.66 ஆயிரத்துக்கு விற்றது. கடந்த ஓராண்டாக தங்கம் , வெள்ளி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

    விலை உயர்வு இருந்த போதிலும், பொங்கல் பண்டிகை ஆர்டர்கள் அதிகளவில் வருவதன் காரணமாக, வெள்ளிப் பட்டறைகளில் உற்பத்தி மற்றும் வேலை நேரத்தை அதிகப்படுத்தி உள்ளோம். உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்களை அந்தந்த பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். பொங்கலுக்கு முந்தைய நாள் வரை இந்த வேலைகள் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
    • செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்த னர்.

    அன்னதானப்பட்டி:

    சிறிய கட்டிடங்கள், பெரிய கட்டிடங்கள், மாட மாளிகை, கோவில்கள் போன்ற எந்தவொரு கட்டிடமும் கட்டுவதற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது செங்கல் தான். தற்போது 'ஹாலோ பிரிக்ஸ்' கற்கள் பயன்பாட்டுக்கு வந்து வர்த்தக ரீதியாக கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தாலும் செங்கலின் பயன்பாடும், மவுசும் இன்னமும் குறையாமல் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

    ஒரு செங்கல் சூளை அமைக்க 1 ஏக்கர் பரப்பளவுக்கு இடம் தேவை. சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ஓமலூர், மேச்சேரி, மல்லூர், அத்தனூர், கிழக்குவலசு, குருசாமிபாளையம், வடுகம், சங்ககிரி, திருச்செங்கோடு, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், பேளுக்கு றிச்சி, குமாரபாளையம், அரூர், தொப்பூர் உள்பட பல இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.

    இந்த தொழிலில் மறைமுக மாகவும், நேரிடையாகவும் ஏறக்குறைய 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மாதந்தோறும் சுமார் 1 கோடி அளவுக்கு செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் நல்ல தரமான மண் கொண்டு தயாரிக்கப்படுவதால் செங்கலின் தரமும் உயர்ந்து காணப்படுகிறது. 

    மேலும் இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் கோவை மாவட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கலை விட தரமானதாக இருப்ப தாலும், விலை சற்று குறைந்து விற்கப்படுவதாலும் திருப்பூர், திருச்சி, அரியலூர், சென்னை, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வந்து வாங்கி செல்கின்றனர்.

    ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்த னர். செங்கல் சூளை களில் வேலை செய்யும் தொழி லாளர்க ளுக்கு 6, 7 மாதங்கள் மட்டும் தான் வேலையும், வருமானமும் கிடைக்கிறது. அதேபோல் உரிமையாளர்களுக்கும் அதே நிலைதான். மழை இல்லாத காலங்களில் தான் செங்கல் உற்பத்தியும், விற்பனையும் நடக்கிறது.

    இது குறித்து செங்கல் உற்பத்தி யாளர்கள் கூறுகையில், " தமிழகத்தி லேயே சேலத்தில் தான் செங்கல் உற்பத்தி அதிகளவில் நடைபெறு கிறது. ஏனெனில் இங்கு தரமான செங்கல்கள் உற்பத்தி செய்யப்ப ட்டு வருகி ன்றன. ஆயி ரக்க ணக்கான தொழி லாளர்கள் இத்தொ ழிலை நம்பி உள்ளனர். கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் செங்கல் உற்பத்தி 60 சதவீதம் வரை சரிந்தது. தற்போது நல்ல வெயில் அடித்து வருவதால், செங்கல் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளோம்.  

    வருகிற ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரை செங்கல் உற்பத்தி நல்ல முறையில் நடைபெறும். தற்போது உற்பத்தி பணிகள் சூடு பிடித்துள்ளதால் கட்டுமானப் பணிகளுக்கு உடனுக்குடன் செங்கல்கள் அனுப்பி வைத்து வருகிறோம்.". இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புதிய தொழில் முனைவோர்கள் வாயிலாக, அக்சசரீஸ் உற்பத்தி தொழிலை தமிழகத்திலேயே துவக்க மத்திய அரசு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
    • மத்திய, மாநில அரசுகளின் மானிய தொழிற்கடன் திட்டங்கள் வாயிலாக, அக்சசரீஸ் உற்பத்திக்கான புதிய தொழில் முனைவோரை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    ஜவுளி உற்பத்தியில் முன்னோடியாக இருந்தாலும் கூட ஜவுளி உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களுக்கு (அக்சசரீஸ்) சீனாவிடம் இருந்து வாங்க வேண்டிய நிலை இன்றும் தொடர்கிறது. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தியில் பட்டன், ஜிப், லேஸ், ரோப், ஸ்டோன்ஸ், லேபிள் ஆகிய உதிரி பாகங்கள் பங்களிப்பு அவசியம்.அதற்காகவே ஏற்றுமதி ஆடைகள் மட்டுமல்ல, உள்நாட்டு விற்பனை ஆடைகளிலும் உதிரி பாகங்கள் பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர், தொழில் கட்டமைப்பு வசதிகளை பெற்றிருந்தும் கூட, திருப்பூரில் ஜவுளி உற்பத்திக்கான அக்சசரீஸ் உற்பத்தி செய்வதில்லை.

    அக்சசரீஸ்களை வாங்க சீனாவிடம் இருந்தும், டெல்லியில் உள்ள சில நிறுவனங்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.புதிய தொழில் முனைவோர்கள் வாயிலாக, அக்சசரீஸ் உற்பத்தி தொழிலை தமிழகத்திலேயே துவக்க மத்திய அரசு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

    இது குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வாரியம் சார்பில் இம்போர்ட் சப்ஸ்டிடியூட் என்ற திட்டத்தை செயல்படுத்த தீவிர ஆலோசனையில் இருக்கிறது. இது குறித்து தேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வாரிய உறுப்பினர் மோகன சுந்தரம் கூறியதாவது:- பனியன் தொழிலில் அக்சசரீஸ் என்பது மிக முக்கியமானது. உள்ளூரில் உற்பத்தி இல்லாததால், டெல்லி அல்லது சீனாவில் இருந்து பெறப்படுகிறது. உற்பத்தியாளர் நிர்ணயிப்பதே விலையாக இருக்கிறது.வெகு தொலைவில் இருந்து வாங்கிவர போக்குவரத்து செலவும் அதிகம் ஏற்படுகிறது.

    இறக்குமதி செய்யவதற்கு பதிலாக மாற்று பொருட்களை நாமே உற்பத்தி செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்காக மத்திய, மாநில அரசுகளின் மானிய தொழிற்கடன் திட்டங்கள் வாயிலாக, அக்சசரீஸ் உற்பத்திக்கான புதிய தொழில் முனைவோரை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பின்தங்கிய கிராமங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், அக்சசரீஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உதவி செய்யப்படும். லகு உத்யோக் பாரதி அமைப்பு வாயிலாகவும் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டம் தொடர்பாக அரசிடம் பேசி வருகிறோம். இதன்மூலமாக சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகம் உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் அல்லது திட்ட அறிக்கையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தாங்களாக வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கு வருவாய் பெருக்கும் வகையில் உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடி செய்து வரும் விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்யும் வகையில் உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைத்துக் கொள்ளலாம்.இதில் விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் அல்லது திட்ட அறிக்கையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் 10 அச்சு வெல்லம் தயாரிக்கும் மையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    எனவே அச்சு வெல்லம் உற்பத்தி மையம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான ஆவணங்கள், போட்டோ, ஆதார் அட்டை, நிலச்சிட்டா மற்றும் கரும்பு சாகுபடி செய்வதற்கான இடப் பற்றிய விவரம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பெறப்பட்ட கடன், ஒப்படைப்பு கடிதம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 75488 16636, 86875 40709, 99979 45711, 8610 752985 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பருத்தி நூலிழை ஆடைகளை விட பாலிெயஸ்டர் ஆடைகளின் உற்பத்தி செலவு பல மடங்கு குறைவு.
    • பாலிெயஸ்டர் துணி மற்றும் ஆடை ரகங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிதாக பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூரை சேர்ந்த வால்ரஸ் நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக பாலியஸ்டர் துணிகளை விற்பனை செய்து வருவதுடன், தற்போது குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கான பாலிெயஸ்டர் ரெடிமேட் ஆடைகளை தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை திருப்பூர் வால்ரஸ் நிறுவனம் முன்வைத்துள்ளது.

    இதுதொடர்பாக திருப்பூர் தொழில்துறை சார்பில் வால்ரஸ் நிறுவனத்தலைவர் ஜிபிஎஸ். டேவிட் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அப்போது தி.மு.க.பகுதி செயலாளர்கள் போலார் சம்பத்குமார், உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆயத்த ஆடை தொழிலுக்கு தமிழகத்தில் செயற்கை இழை துணி வகை (பாலிெயஸ்டர் பேப்ரிக்) முன்னேற்றத்திற்கு தனி வாரியம் என்று இதுவரை அரசால் ஏற்படுத்தப்படவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருப்பூர் தொழில்துறையினர் சார்பில் வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் சார்பில் முன் வைக்கிறோம்.

    பருத்தி நூலிழை ஆடைகளை விட பாலிெயஸ்டர் ஆடைகளின் உற்பத்தி செலவு பல மடங்கு குறைவு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பூரில் பாலிெயஸ்டர் ஆடைகளின் பங்களிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது உலக அளவில் பாலிெயஸ்டர் ஆடைகளின் தேவைகள் அதிகரித்துள்ளது. எனவேதான் தற்போது தொழில்துறையினரில் பெரும்பாலானோர் பாலிெயஸ்டரில் இறங்கி உள்ளனர். வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் நிறுவனம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தி புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறது.

    அதுமட்டுமின்றி பாலிெயஸ்டர் துணி மற்றும் ஆடை ரகங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிதாக பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றவும், திருப்பூரை தமிழகத்தின் முதன்மை நகரமாக மாற்றவும் பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் எம்.பி. சுப்பராயன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோரிடமும் மனு கொடுக்க இருப்பதாக வால்ரஸ் டேவிட் தெரிவித்தார்.

    • மாவட்டத்தை சேர்ந்த உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
    • மக்காத குப்பையை தனியே சேகரித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் 500 மெட்ரிக் டன் அளவு குப்பை கழிவுகள் சேகரமாகிறது. மாநகராட்சி பகுதியில் 16 இடங்களில் காய்கறி கழிவுகள் மூலம் நுண் உரம் உற்பத்தி செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    காய்கறி கழிவு உள்ளிட்ட மக்கும் கழிவுகளை மாற்று சக்தியாக மாற்றி பயன்படுத்த 12 ஆண்டுக்கு முன் தென்னம்பாளையம் சந்தை வளாகத்தில் காய்கறி கழிவுகளை கொண்டு மின் உற்பத்தி செய்யும் வகையில் திட்டம் துவங்கியது. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அது வெற்றி பெறுவதில் சிக்கல் இருந்த நிலையில், கைவிடப்பட்டது.

    இதனால் பயோ- கியாஸ் உற்பத்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக 1.60 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்றது.மேலும் சில மாறுதல்கள் செய்து, இங்கு உற்பத்தியாகும் பயோ கியாசை சிலிண்டர்களில் நிரப்பி, அம்மா உணவகம் மற்றும் மாநகராட்சி சத்துணவு மையங்களில் பயன்படுத்த முடிவானது. ஆனாலும் மையம் முழுமையாக இயக்கப்படாமல் வீணானது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் சத்தமின்றி விலகியது.

    இவ்வாறு பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இம்மையம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறுகையில், நவீன தொழில்நுட்பத்தில் புதிய கருவிகள் பொருத்தி சி.என்.ஜி., கியாஸ் உற்பத்தி துவங்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட அளவிலான வாகனங்கள் இந்த கியாஸ் மூலம் இயக்கப்படும். இதனால் கிடப்பில் உள்ள மையம் செயல்படுவதோடு கணிசமான அளவு வாகன எரிபொருள் மீதமாகும் என்றார்.

    தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பசுமை ஆலயம் திட்டம் தயாரித்துள்ளது. கோவில்களில் சேகரமாகும் மக்கும் குப்பையை உரமாக்கி நந்தவனங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கோவில்களில் உள்ள கோசாலை மாடுகளின் கழிவுகள், அன்னதான கூட கழிவு, பூமாலை, துளசி, தோட்ட கழிவு, காய்கறி மற்றும் கால்நடை கழிவுகளை கொண்டு, மக்கும் உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பையை தனியே சேகரித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் பசுமை ஆலயம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இணை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இணை கமிஷனர் குமாரதுரை தலைமை வகித்தார். மாவட்டத்தை சேர்ந்த உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

    ஐ.டி.சி., நிறுவனம், ஆர்.டி.ஓ., டிரஸ்ட், எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் நிறுவனத்தினர் பங்கேற்று பசுமை ஆலய திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினர். திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில், பசுமை ஆலயம் திட்டம் செயல்படுத்தப்படுமென இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

    ×