search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துவரம் பருப்பு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள்
    X

    துவரம் பருப்பு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள்

    • பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் மானாவாரி நிலத்தில் அமோகம்
    • நல்ல வியாபாரம் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

    கரூர்,

    பழையஜெயங்கொண்டம் பகுதியில், நாட்டு துவரம் பருப்பு உற்பத்தி பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, சேங்கல், புதுப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் மானாவாரி நிலத்தில் துவரை சாகுபடி செய்திருந்தனர். கடந்த மாதம் துவரை செடிகள் அறுவடை செய்து, செடிகளில் இருந்து துவரை தரம் பிரிக்கப்பட்டது. தரம் பிரிக்கப்பட்ட துவரையை, நாட்டு துவரம் பருப்பு உருவாக்குவதற்கான பணிக ளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டு துவரம்பருப்பு உற்பத்தி செம்மண் கொண்டு தண்ணீர் கலவையில் கலந்து கலர் சேர்க்கப்படுகிறது. பின்னர் வெயிலில் உலர்த்தப்படுகி றது. உலர்த்தப்பட்ட துவரை அரவை மிஷினில் அரைக்கப்படுகிறது. இதில் நாட்டு துவரம்பருப்பு தனியாக பிரிக் கப்படுகிறது. இந்த துவரம்பருப்பு நல்ல தரமான சுவையுடன் இருக்கும். இந்த துவரம் பருப்பு கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


    Next Story
    ×