search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்கம்"

    • சேலம் கோட்ட போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 30-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சேலம் கோட்ட போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை (27-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் வழிதடப் பஸ்கள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.

    மேலும் பெங்களுருவில் இருந்து சேலம், திருவண்ணா மலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுரு வுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்தி டும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    குழுமூர் கிராமத்தில் உள்ள மறைந்த மாணவி அனிதா திடலில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவச ங்கர் கலந்து கொண்டார். அனிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், நீட் விலக்கை வலியுறுத்திகையெ ழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், தி.மு.க. சட்டத்திட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அ.பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.பாலசுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.ராமராஜன், மருத்துவர் அணி அமைப்பாளர் சஞ்சய் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி நிர்வாகி கள் பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

    • சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்த மாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
    • நாளை (6-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்த மாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    150 சிறப்பு பஸ்கள்

    இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்க ளில் நாளை (6-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூ ருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது. மேலும் முன்பதிவு பஸ்கள் பெங்க ளுருவில் இருந்து சேலம், திருவண்ணா மலைக்கும், திருவண்ணா மலையில் இருந்து பெங்களு ருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூ ருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சி புரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்க ளூருவுக்கும் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் அனை வரும் பயண நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து பனை நடுவதை மக்கள் இயக்கமாக செய்யப்படும்.
    • ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு நடப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் படி, பனை விதைகள் சேகரிப்பு பணியை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து பாலம் செந்தில்குமார், முசிறி விதையோகநாதன் ஆகியோர் கூறுகையில்:-

    அனைத்து அரசுத்துறைகள், சேவை அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து பனை நடுவதை மக்கள் இயக்கமாக செய்யப்படும். இன்னும் ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு அங்கேயே நடப்படும் என்றார்.

    • சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை 15-ந் தேதி முதல் 19 -ந் தேதி வரை பயணிகள் தேவைக்கேற்ப 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
    • பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்யும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    சேலம்:

    வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை 15-ந் தேதி முதல் 19 -ந் தேதி வரை பயணிகள் தேவைக்கேற்ப 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி சேலம் புறநகர் பஸ் நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை திருப்பூர் திருவண்ணாமலை சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூர், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மற்றும் மதுரை, நாமக்கலில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூர், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு, ஓசூரில் இருந்து சேலம் புதுச்சேரி கடலூர், சேலத்தில் இருந்து சிதம்பரம் காஞ்சிபுரம், ஈரோட்டில் இருந்து பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்யும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இது தவிர அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும் இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    • நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது.

    நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், வயதில் மூத்தவர்களுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியை தொடங்கினர்.வாழப்பாடி அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை ஷபிராபானு, தன்னார்வலர்கள் ஈஸ்வரி, சந்தியா ஆகியோருக்கு சான்றிதழ்களையும், வயதில் மூத்தவர்களுக்கு பயிற்சி ஏடுகளையும் வழங்கினார். வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து மையங்களிலும் பயிற்சியில் கலந்து கொண்ட வயதில் மூத்தோர்களுக்கு, எழுது பொருட்கள், பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது.

    • சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கத்தை நேற்று நடத்தினர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இந்த கையெழுத்து இயக்கத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். ரத்த கையெழுத்து இயக்கத்தை மாவட்ட இணை செயலாளர் மீனா கோரிக்கைகளை வலியுறுத்தி படிவத்தில் ரத்தத்தில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

    10 அம்ச கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ரத்தத்தால் கையெழுத்திட்டும், கைரேகை வைத்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    ரத்த கையெழுத்து இயக்க படிவத்தை வருகிற 30-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மூலமாக தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடும், கோரிக்கைகளை வென்றெடுக்க சென்னை சமூக நல ஆணையர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் (செப்டம்பர்) 28-ந்தேதி முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் தெரிவித்தனர்.

    தொடர் விடுமுறை நாள்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    கோவை,

    தொடர் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக கோவையில் இருந்து 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்ட மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்தின் சார்பாக வார இறுதி நாள்களான நாளை (12-ந் தேதி), மற்றும் ஞாயிறு (13-ந் தேதி), சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி ஆகிய தொடர் விடுமுறை நாள்களை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டி போன்ற ஊர்களுக்கு சென்று மீண்டும் ஊர் திரும்பும் விதமாக ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன் கூடுத லாக 50 சிறப்பு பஸ்கள் வருகிற இன்று முதல் இயக்கப்பட உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • அரசு விரைவு போக்கு வரத்து முன்பதிவு மையங்க ளிலும் இணையதளம் வழியா கவும் முன்பதிவு நடக்கிறது.

    சேலம்:

    சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வார இறுதி நாள் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சேலம் புறநகர், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    16-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம், தர்மபுரியில் இருந்து மேட்டூர் மாதேஸ்வரன் மலை, சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தர் கோவில் ஆகிய ஊர்களுக்கு பயணியர் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அரசு விரைவு போக்கு வரத்து முன்பதிவு மையங்க ளிலும் இணையதளம் வழியா கவும் முன்பதிவு நடக்கிறது.

    இந்த சேவையை பயன்ப டுத்தி சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், ஓசூரில் இருந்து தர்மபுரி, மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூர், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, நாமக்கல்லில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூருக்கும் பயணிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை வழியாக தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • முக்கிய ரெயில் நிலையங்க–ளில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    விடுமுறை கூட்ட நெரி–சலை சமாளிக்க தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவ–தாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    வருகின்ற 11-ந்தேதி துவங்கி 15-ந்தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில்களில் கூட்ட நெரி–சல் ஏற்படும். இதனை தவிர்க்கும் விதமாக தெற்கு ரெயில்வேயின் சார்பில் தாம்பரம்-திருநெல்வேலி தாம்பரம் சிறப்பு விரைவு ரெயில் இயக்க இருப்பதாக ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி வருகின்ற 11-ந்தேதி (06051) தாம்பரத்திலிருந்து சிறப்பு விரைவு ரெயில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணியளவில் திருநெல் ேவலியை சென்றடையும். அதேபோல (06052) திருநெல்வேலியில் இருந்து 12-ந்தேதி மாலை 5.50 மணி அளவில் புறப்படும் ரெயில் மறுநாள் காலை 4.10 மணி–யளவில் தாம்பரம் சென்றடையும்.

    இதில் இரண்டு முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், 9 படுக்கை வசதி உடைய பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்ப்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண் டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் சிறப்பு ரெயில்(எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
    • மங்களூர்- சென்னை சிறப்பு ரெயில்(எண்.06042) மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை சென்றடையும்.

    கோவை,

    கோவை- போத்தனூர் வழித்தடங்களில் 3 வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம்-சென்னை சிறப்பு ரெயில்(எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

    ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரெயில்(எண்.06045) மறுநாள் காலை 3 மணிக்கு எர்ணாகுளத்தைச் சென்றடையும்.

    இந்த ரெயிலானது, ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 5ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் தாம்பரம்-மங்களூர் சிறப்பு ரெயில்(எண்.06041) மறுநாள் காலை 6.45 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

    ஆகஸ்ட் 23ந் தேதி முதல் செப்டம்பர் 6ந் தேதி வரை, மங்களூரில் இருந்து புதன்கிழமைகளில் காலை 10 மணிக்குப் புறப்படும் மங்களூர்- சென்னை சிறப்பு ரெயில்(எண்.06042) மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை சென்றடையும்.

    இந்த ரெயிலானது, காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், குட்டிபுரம், ஷொரனூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 5ந் தேதி வரை, செவ்வாய்க்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 6.05 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி-பெங்களூர் சிறப்பு ரெயில்(எண்.06083) மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.

    ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6ந் தேதி வரை புதன்கிழமைகளில் நண்பகல் 12.45 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் பெங்களூர்-கொச்சுவேலி சிறப்பு ரெயில்(எண்.06084) மறுநாள் காலை 6 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

    இந்த ரெயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    • கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழா ‌ நாளை மறுநாள் 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • இதை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம் மற்றும் ராசிபுரம் பஸ் நிலையங்களில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சேலம்:

    ஆடி மாத பவுர்ணமியையொட்டி இன்று அதிகாலை முதல் திரு வண்ணாமலையில் கிரிவல ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று இரவு முதல் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆடிப்பெருக்கு விழா

    மேலும் கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழா நாளை மறுநாள் 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம் மற்றும் ராசிபுரம் பஸ் நிலையங்களில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் ஆடிப்பெருக்கு பண்டிகைையயொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து நாளை முதல் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மேட்டூர், பவானி கூடுதுறை, கொடுமுடி, மோகனூர், பூலாம்பட்டி, கல்வடங்கம், ஓகேனக்கல், அம்மாப்பேட்டை நீர்ப்பத்

    துறை, கே.ஆர்.பி. அணைக் கட்டு ஆகிய பகுதிகளுக்கும் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விடுப்புக்கு தடை

    மேலும் சிறப்பு பஸ்கள் தங்கு தடையின்று இயங்கும் வகையில் அனைத்து டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியா ளர்கள் ,அலுவலக பணியாளர்களுக்கு வார விடுப்பு உள்பட அனைத்து விடுப்புகளும் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே விடுப்பில் சென்றவர்கள் உடனடியாக பணியில் இணையும்படி அந்தந்த கிளை மேலாளர்கள் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அனைத்து தொழிலா ளர்க ளும் நேற்று முதல் 6-ந் தேதி வரை பணியில் தொடரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×