search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை, போத்தனூர் வழித்தடத்தில் 3 வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம்
    X

    கோவை, போத்தனூர் வழித்தடத்தில் 3 வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம்

    • ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் சிறப்பு ரெயில்(எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
    • மங்களூர்- சென்னை சிறப்பு ரெயில்(எண்.06042) மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை சென்றடையும்.

    கோவை,

    கோவை- போத்தனூர் வழித்தடங்களில் 3 வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம்-சென்னை சிறப்பு ரெயில்(எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

    ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரெயில்(எண்.06045) மறுநாள் காலை 3 மணிக்கு எர்ணாகுளத்தைச் சென்றடையும்.

    இந்த ரெயிலானது, ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 5ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் தாம்பரம்-மங்களூர் சிறப்பு ரெயில்(எண்.06041) மறுநாள் காலை 6.45 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

    ஆகஸ்ட் 23ந் தேதி முதல் செப்டம்பர் 6ந் தேதி வரை, மங்களூரில் இருந்து புதன்கிழமைகளில் காலை 10 மணிக்குப் புறப்படும் மங்களூர்- சென்னை சிறப்பு ரெயில்(எண்.06042) மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை சென்றடையும்.

    இந்த ரெயிலானது, காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், குட்டிபுரம், ஷொரனூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 5ந் தேதி வரை, செவ்வாய்க்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 6.05 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி-பெங்களூர் சிறப்பு ரெயில்(எண்.06083) மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.

    ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6ந் தேதி வரை புதன்கிழமைகளில் நண்பகல் 12.45 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் பெங்களூர்-கொச்சுவேலி சிறப்பு ரெயில்(எண்.06084) மறுநாள் காலை 6 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

    இந்த ரெயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    Next Story
    ×