search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தியையொட்டிசேலம் கோட்டத்தில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    விநாயகர் சதுர்த்தியையொட்டிசேலம் கோட்டத்தில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை 15-ந் தேதி முதல் 19 -ந் தேதி வரை பயணிகள் தேவைக்கேற்ப 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
    • பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்யும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    சேலம்:

    வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை 15-ந் தேதி முதல் 19 -ந் தேதி வரை பயணிகள் தேவைக்கேற்ப 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி சேலம் புறநகர் பஸ் நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை திருப்பூர் திருவண்ணாமலை சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூர், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மற்றும் மதுரை, நாமக்கலில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூர், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு, ஓசூரில் இருந்து சேலம் புதுச்சேரி கடலூர், சேலத்தில் இருந்து சிதம்பரம் காஞ்சிபுரம், ஈரோட்டில் இருந்து பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்யும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இது தவிர அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும் இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×