search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்வில் ஓரி விழா,  ஆடிப்பெருக்கு பண்டிகை நாளை முதல்  200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    வல்வில் ஓரி விழா, ஆடிப்பெருக்கு பண்டிகை நாளை முதல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழா ‌ நாளை மறுநாள் 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • இதை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம் மற்றும் ராசிபுரம் பஸ் நிலையங்களில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சேலம்:

    ஆடி மாத பவுர்ணமியையொட்டி இன்று அதிகாலை முதல் திரு வண்ணாமலையில் கிரிவல ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று இரவு முதல் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆடிப்பெருக்கு விழா

    மேலும் கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழா நாளை மறுநாள் 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம் மற்றும் ராசிபுரம் பஸ் நிலையங்களில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் ஆடிப்பெருக்கு பண்டிகைையயொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து நாளை முதல் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மேட்டூர், பவானி கூடுதுறை, கொடுமுடி, மோகனூர், பூலாம்பட்டி, கல்வடங்கம், ஓகேனக்கல், அம்மாப்பேட்டை நீர்ப்பத்

    துறை, கே.ஆர்.பி. அணைக் கட்டு ஆகிய பகுதிகளுக்கும் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விடுப்புக்கு தடை

    மேலும் சிறப்பு பஸ்கள் தங்கு தடையின்று இயங்கும் வகையில் அனைத்து டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியா ளர்கள் ,அலுவலக பணியாளர்களுக்கு வார விடுப்பு உள்பட அனைத்து விடுப்புகளும் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே விடுப்பில் சென்றவர்கள் உடனடியாக பணியில் இணையும்படி அந்தந்த கிளை மேலாளர்கள் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அனைத்து தொழிலா ளர்க ளும் நேற்று முதல் 6-ந் தேதி வரை பணியில் தொடரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×