search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கோட்டத்தில் நாளை முதல் 16-ந் தேதி வரை 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    சேலம் கோட்டத்தில் நாளை முதல் 16-ந் தேதி வரை 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • அரசு விரைவு போக்கு வரத்து முன்பதிவு மையங்க ளிலும் இணையதளம் வழியா கவும் முன்பதிவு நடக்கிறது.

    சேலம்:

    சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வார இறுதி நாள் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சேலம் புறநகர், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    16-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம், தர்மபுரியில் இருந்து மேட்டூர் மாதேஸ்வரன் மலை, சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தர் கோவில் ஆகிய ஊர்களுக்கு பயணியர் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அரசு விரைவு போக்கு வரத்து முன்பதிவு மையங்க ளிலும் இணையதளம் வழியா கவும் முன்பதிவு நடக்கிறது.

    இந்த சேவையை பயன்ப டுத்தி சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், ஓசூரில் இருந்து தர்மபுரி, மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூர், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, நாமக்கல்லில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூருக்கும் பயணிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×