search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கோட்டத்தில்வார விடுமுறையை முன்னிட்டு கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    சேலம் கோட்டத்தில்வார விடுமுறையை முன்னிட்டு கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்த மாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
    • நாளை (6-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்த மாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    150 சிறப்பு பஸ்கள்

    இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்க ளில் நாளை (6-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூ ருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது. மேலும் முன்பதிவு பஸ்கள் பெங்க ளுருவில் இருந்து சேலம், திருவண்ணா மலைக்கும், திருவண்ணா மலையில் இருந்து பெங்களு ருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூ ருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சி புரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்க ளூருவுக்கும் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் அனை வரும் பயண நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×