search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுத்தறிவு"

    • நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது.

    நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், வயதில் மூத்தவர்களுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியை தொடங்கினர்.வாழப்பாடி அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை ஷபிராபானு, தன்னார்வலர்கள் ஈஸ்வரி, சந்தியா ஆகியோருக்கு சான்றிதழ்களையும், வயதில் மூத்தவர்களுக்கு பயிற்சி ஏடுகளையும் வழங்கினார். வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து மையங்களிலும் பயிற்சியில் கலந்து கொண்ட வயதில் மூத்தோர்களுக்கு, எழுது பொருட்கள், பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது.

    • ராமநாதபுரம் அருகே எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட விழிப்புணர்வு பேரணி திருப்புலாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் சண்முநாதன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார்.

    திருப்புல்லாணி கோவில், பஸ் நிறுத்தம், கடைவீதி வழியாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, இணைவோம் புதிய பாரத திட்டத்தில் என்று கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டாரக் கல்வி அலுவவர்கள் உஷாராணி, ஜெயா ஆகியோர் பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டியராசு, செந்தில்குமார், ரமேஷ், செல்வகுமார், சந்திரசேகர், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சித்ராதேவி ஏற்பாடுகளை செய்தார்.

    • வயது வந்தோர் கல்வி திட்டத்தின் மூலம் எழுத்தறிவு பெற்ற 1 லட்சம் பேர் பெற்றனர்.
    • தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர், தியாக ராசா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற 3-ம் கட்ட அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடந்தது. இதனை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பார்வை யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் படிக்க மற்றும் எழுதத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கிட வேண்டும் என்பதே வயது வந்தோர் கல்வி திட்டத்தின் முதன்மையான இலக்காகும்.

    இதனை கருத்தில் கொண்டு "வளர்ச்சியில் முன்னுரிமை பெறும்" விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்ட 3-ம் கட்டத்தின் கீழ் பயின்று வரும் அனைத்து கற்போர்களும் அடிப்படை எழுத்தறிவு தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் இத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 25 ஆயிரத்து 15 பேரும், 2-ம் கட்டமாக 45 ஆயிரத்து 792 பேரும் எழுத்தறிவு பெற்றனர்.

    தற்போது 3-ம் கட்டமாக ஜூன் 2022 முதல் நவம்பர் 2022 வரை 6 மாதங்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் 749 மையங்க ளில் 29 ஆயிரத்து 941 பயனாளிகளுக்கு படிக்க எழுத கற்று தரப்பட்டு இத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த 3 கட்ட எழுத்தறிவுத் திட்டத்திற்காக அரசு ரூ.3 கோடியே 29 லட்சத்து 39 ஆயிரத்து 959 செலவு செய்துள்ளது.

    தேர்வு விடைத்தாள்கள் வட்டார வளமையத்தில் பாது காப்பாக வைக்கப்பட்டு, ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களால் டிசம்பர் 6-ந் தேதி முதல் 10 ம் தேதி வரை மதிப்பீடு செய்யப்படும். மதிப்பெண்கள் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படை யில் 60 சதவீதத்திற்கு மேல் எனில் நன்று என 'ஏ' கிரேடும், 40-60 சதவீதம் எனில் திருப்திகரம் என 'பி' கிரேடும், 40 சதவீதத்திற்கு கீழ் எனில் முன்னேற்றம் தேவை என 'சி' கிரேடும் சான்றிதழ் வழங்கப்படும்.

    மாவட்டத்தில் இத் திட்டத் தின் கீழ் 1 லட்சத்து 748 பேருக்கு எழுத்தறிவு கற்றுத்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது இலக்கை விட கூடுதலாக 1 லட்சத்து 798 பேருக்கு எழுத்தறிவு கற்றுத்தரப்பட்டுள்ளது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவின்படி மாவட்டத்தில் 749 மையங்களிலும் இத் தேர்வு மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மையங்களின் தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாகிர் உசேன் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு தின கருத்தரங்கம் நடந்தது.
    • ‘‘வாசிப்பின் அவசியம்’’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சர்வதேச எழுத்தறிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்துறைத்தலைவர் இப்ராஹிம் தலைமை தாங்கி "கற்றலின் சிறப்பு" என்ற தலைப்பில் பேசினார். நூலகர் நைனார் முஹம்மது "நாளும் பழகுவோம் நூல்களுடன்" என்ற தலைப்பில் பேசினார். ''வாசிப்பின் அவசியம்'' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது.

    இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல்வர் அப்பாஸ் மந்திரி ரொக்கப்பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் 180 பேர் கலந்து கொண்டனர்.

    ×