search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education Program"

    • வயது வந்தோர் கல்வி திட்டத்தின் மூலம் எழுத்தறிவு பெற்ற 1 லட்சம் பேர் பெற்றனர்.
    • தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர், தியாக ராசா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற 3-ம் கட்ட அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடந்தது. இதனை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பார்வை யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் படிக்க மற்றும் எழுதத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கிட வேண்டும் என்பதே வயது வந்தோர் கல்வி திட்டத்தின் முதன்மையான இலக்காகும்.

    இதனை கருத்தில் கொண்டு "வளர்ச்சியில் முன்னுரிமை பெறும்" விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்ட 3-ம் கட்டத்தின் கீழ் பயின்று வரும் அனைத்து கற்போர்களும் அடிப்படை எழுத்தறிவு தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் இத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 25 ஆயிரத்து 15 பேரும், 2-ம் கட்டமாக 45 ஆயிரத்து 792 பேரும் எழுத்தறிவு பெற்றனர்.

    தற்போது 3-ம் கட்டமாக ஜூன் 2022 முதல் நவம்பர் 2022 வரை 6 மாதங்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் 749 மையங்க ளில் 29 ஆயிரத்து 941 பயனாளிகளுக்கு படிக்க எழுத கற்று தரப்பட்டு இத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த 3 கட்ட எழுத்தறிவுத் திட்டத்திற்காக அரசு ரூ.3 கோடியே 29 லட்சத்து 39 ஆயிரத்து 959 செலவு செய்துள்ளது.

    தேர்வு விடைத்தாள்கள் வட்டார வளமையத்தில் பாது காப்பாக வைக்கப்பட்டு, ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களால் டிசம்பர் 6-ந் தேதி முதல் 10 ம் தேதி வரை மதிப்பீடு செய்யப்படும். மதிப்பெண்கள் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படை யில் 60 சதவீதத்திற்கு மேல் எனில் நன்று என 'ஏ' கிரேடும், 40-60 சதவீதம் எனில் திருப்திகரம் என 'பி' கிரேடும், 40 சதவீதத்திற்கு கீழ் எனில் முன்னேற்றம் தேவை என 'சி' கிரேடும் சான்றிதழ் வழங்கப்படும்.

    மாவட்டத்தில் இத் திட்டத் தின் கீழ் 1 லட்சத்து 748 பேருக்கு எழுத்தறிவு கற்றுத்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது இலக்கை விட கூடுதலாக 1 லட்சத்து 798 பேருக்கு எழுத்தறிவு கற்றுத்தரப்பட்டுள்ளது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவின்படி மாவட்டத்தில் 749 மையங்களிலும் இத் தேர்வு மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மையங்களின் தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×