search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வதேச எழுத்தறிவு தின கருத்தரங்கம்
    X

    சர்வதேச எழுத்தறிவு தின கருத்தரங்கம்

    • சாகிர் உசேன் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு தின கருத்தரங்கம் நடந்தது.
    • ‘‘வாசிப்பின் அவசியம்’’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சர்வதேச எழுத்தறிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்துறைத்தலைவர் இப்ராஹிம் தலைமை தாங்கி "கற்றலின் சிறப்பு" என்ற தலைப்பில் பேசினார். நூலகர் நைனார் முஹம்மது "நாளும் பழகுவோம் நூல்களுடன்" என்ற தலைப்பில் பேசினார். ''வாசிப்பின் அவசியம்'' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது.

    இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல்வர் அப்பாஸ் மந்திரி ரொக்கப்பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் 180 பேர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×