கோவையில் இருந்து 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தொடர் விடுமுறை நாள்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கோவையில் இருந்து 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

கோவை,

தொடர் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக கோவையில் இருந்து 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்ட மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்தின் சார்பாக வார இறுதி நாள்களான நாளை (12-ந் தேதி), மற்றும் ஞாயிறு (13-ந் தேதி), சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி ஆகிய தொடர் விடுமுறை நாள்களை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டி போன்ற ஊர்களுக்கு சென்று மீண்டும் ஊர் திரும்பும் விதமாக ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன் கூடுத லாக 50 சிறப்பு பஸ்கள் வருகிற இன்று முதல் இயக்கப்பட உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com