search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new"

    • நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வருகிற ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
    • வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன

    கொரியன் நிறுவனமான 'சாம்சங்' செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது புதிதாக சாம்சங் 'கேலக்ஸி ரிங்'  என்ற மிக இலகுவான கை விரல்களில் அணிய வசதியாக உள்ள மோதிர வடிவில் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், இந்த மோதிரத்தில் மேம்பட்ட ஆரோக்கியம், செயல்பாடு மற்றும் தூக்கத்தை கண்காணிக்கும் வசதிகள் அமைந்து உள்ளன.




     

    நவீன ஸ்மார்ட் வாட்சுகளை விட, கேலக்ஸி ரிங் ஒரு ஆரோக்கிய சாதனம் என்று அழைக்கப்படும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை நீடிக்கும். புதிய ஆரோக்கிய சாதனமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த மோதிரத்தின் விலை ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வருகிற ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன.

    • நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது.

    நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், வயதில் மூத்தவர்களுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியை தொடங்கினர்.வாழப்பாடி அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை ஷபிராபானு, தன்னார்வலர்கள் ஈஸ்வரி, சந்தியா ஆகியோருக்கு சான்றிதழ்களையும், வயதில் மூத்தவர்களுக்கு பயிற்சி ஏடுகளையும் வழங்கினார். வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து மையங்களிலும் பயிற்சியில் கலந்து கொண்ட வயதில் மூத்தோர்களுக்கு, எழுது பொருட்கள், பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது.

    • வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நீண்ட வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
    • தற்போது, பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத் திற்கு சொந்த கட்டிடம் கட்டு வதற்காக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தியில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நீண்ட வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    புதிய வாகன பதிவு மற்றும் தரச் சான்றிதழ் பெற வரும் கனரக வாகனங்களை பரமத்தியில் இருந்து வேலூர் செல்லும் பிரதான சாலையில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும் விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இங்கே தினசரி வாகன ஓட்டுனர் உரிமம் பெற மற்றும் பழகுனர் உரிமை பெற வருகின்றனர். தற்போது, பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத் திற்கு சொந்த கட்டிடம் கட்டு வதற்காக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.

    பரமத்தியில் பெரும் பாலான அரசு அலுவலகங்கள் பரமத்தி மெயின் சாலையிலேயே உள்ளதால், இப்பகுதியில் போக்கு வரத்து நெரிசலும் வாகன விபத்தும் ஏற்படுகிறது. இந்த அரசு அலுவலகங்க ளுக்கு வேலை நாட்களில் தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் வந்து செல்கின்றனர்.

    மேலும் திருச்செங்கோடு செல்லும் பிரதான சாலை மற்றும் கபிலர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையாக பரமத்தி உள்ளதால் மக்கள் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

    இதனால் சேலம், கரூர் செல்லும் தனியார் பஸ்கள், பரமத்தி நகருக்குள் நுழைவதை தவிர்த்து பைபாஸ் சாலையிலே சென்று விடுகின்றன.

    தற்போது வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் போக்குவரத்து மிகுந்த பரமத்திக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் புதிய கட்டடம் கட்டினால், மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    அதனால் மக்களின் நலன் கருதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பரமத்தி வேலூரில் அமைய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பரமத்தி வேலூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் முருகனிடம் கேட்டபோது, தற்போதுள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள் வதற்கு என தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளதால் சாலை ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.

    சொந்த கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதல் பெறப் பட்டுள்ள நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு, அப்பகுதியில் ஆய்வுக்கான தனி இடம் அமைக்கப்படும். அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள் ளப்படும் என கூறினார்.

    • சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ நிலையங் களில் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் திட்டப் பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
    • தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டம் இலவசமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ நிலையங் களில் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் திட்டப் பணிகள் செயலாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தேசிய செயற்கை முறை கருவூட்டல் அபிவிருத்தித்திட்டம் இலவசமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.

    அனைத்து நிலையங்களிலும் பிரதி சனிக்கிழமை தோறும் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, தேசிய நோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் பசு மற்றும் எருமை இனங்களுக்கு கோமாரிநோய் தடுப்பூசி, அஸ்காட் திட்டத்தின்கீழ் ஆடுகளுக்கு ஆட்டம்மை மற்றும் துள்ளுமாரி நோய் தடுப்பூசி, ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் நோய் கிளர்ச்சிக்குள்ளான பகுதிகளில் ஆட்டுக்கொல்லிநோய் தடுப்பூசி போடப்படுகிறது.

    மாவட்டத்தில் கால்நடை கிளை நிலையங்கள் - 9, கால்நடை மருந்தகங்கள் - 149, நடமாடும் கால்நடை மருந்தகங்கள் - 6, கால்நடை மருத்துவமனைகள் - 7, கால்நடை பன்முக மருத்துவமனை- 1, கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு-1 ஆகியவை உள்ளன.

    விவசாயிகளால் 6 லட்சத்து 11 ஆயிரத்து 161 பசுக்கள், 46 ஆயிரத்து 420 எருமைகள், 3 லட்சத்து 37 ஆயிரத்து 733- செம்மறி ஆடுகள், 5 லட்சத்து 57 ஆயிரத்து 541 வெள்ளாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நாடு முழுவதும் கால்நடைகளின் நலனை மேம்படுத்துவதற்காக நேற்று என்.ஏ.என்.டி.ஐ. (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளத்தை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.

    கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மத்திய மருந்து தரக்கட்டுப் பாட்டு அமைப்பின் சுகம் ஆகியவை இந்த இணையதளத்துடன் ஒருங்கிணைந்து கால்நடை உற்பத்திப் பொருட்களை மதிப்பீடு செய்வதற்கும், வெளிப்படை த்தன்மை யுடன் ஒழுங்குமுறை ஒப்புதல் அளிப்பதற்கும் தடையின்றி வழிவகுக்கும் என அவர் கூறினார்.

    இந்த முன்னெடுப்பு டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்தவும், கால்நடைகள் நலன் மற்றும் கால்நடைகள் தொழில்துறையை மேம்படுத்தவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • நாமக்கல் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோமதி பணியாற்றி வந்தார்.
    • இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோமதி பணியாற்றி வந்தார். இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதையடுத்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த சரவணன், பணிஇட மாறுதல் பெற்று வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    அவருக்கு தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் அனைத்து தீயணைப்பு வீரர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • குமாரபாளையம் அடுத்த காடையாம்பட்டி பகுதியில் புதிய மோட்டார் சைக்கிள் வாங்க 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்கள்.
    • 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அடுத்த காடையாம்பட்டி பகுதியை சார்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பு முடித்து தற்போது விளையாட்டு இயக்குனருக்கான மேல்படிப்பை கோவையில் தங்கி படித்து வருகிறார் வீட்டில் இருந்து வரும் காலகட்டத்தில் பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர் பந்தயப் புறாக்கள், மற்றும் லவ் பேர்ட்ஸ் பறவைகள் வளர்ப்புக்கான கூண்டுகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் விடுமுறை நாட்களில் பறவைகளுக்கான கூண்டு தயாரிப்பிலேயே ஈடுபட்டு வருகிறார் அதிகமான வெளிவட்டார பழக்க வழக்கங்களை தவிர்த்து கிடைக்கும் நேரங்களில் பறவைகளோடு மகிழ்ந்து விளையாடுவது அவருக்கு வாடிக்கையாகும்

    இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார் இந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தொட்டதை தொடர்ந்து அந்த முழு தொகையையும் கொண்டு ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக 775 கிலோ கொண்ட 10 ரூபாய் நாணயங்களை தனது நண்பர்கள் மூலம் இரண்டு காரில் ஏற்றிக்கொண்டு கடைக்குச் சென்று புதிய மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார்

    இதுகுறித்து இளைஞர் சந்தோஷ் குமார் நிருபர்களிடம் தெரிவித்த போது, பத்து ரூபாய் நாணயங்களை சில கடைக்காரர்கள் வாங்க மறுப்பதை தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வாகனம் பெற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் சந்தோஷ் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • 3 புதிய மின்மாகந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு 3-வது கூடுதல் மின் மாற்றியால் மின் மாற்றிகளின் பளுவை குறைக்கவும், கோடைகாலத்தில் அதிகமான மின் பளுவை சமாளிக்கவும், சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யவும் முடியும்.
    • சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பாலசுப்பரமணி தெரிவித்து உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட கந்தம்பட்டி, புத்திர கவுண்டபாளையம், ஆத்தூர் பகுதிகளுக்கு சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி கந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு 3-வது கூடுதல் மின் மாற்றியும், ஆத்தூர் துணை மின்நிலையத்திற்கு 3-வது கூடுதல் மின்மாற்றியும், புத்திர கவுண்டபாளையம் துணை மின் நிலையத்திற்கு மின் பகிர்மான திறன் 10 மெகா வாட்டில் இருந்து 16 மெகாவாட் ஆக அதிகரித்து மின்மாற்றிகள் நிறுவப்பட்டு உள்ளன.

    அவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த மின்மாற்றிகளின் மூலம் அதிகமான பளுவை ஏற்றுக்கொண்டு மின் வினியோகம் செய்து வரும் மின் மாற்றிகளின் பளுவை குறைக்கவும், கோடைகாலத்தில் அதிகமான மின் பளுவை சமாளிக்கவும், சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யவும் முடியும்.

    மேலும் கந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சர்கார் கொல்லப்பட்டி, பெருமாம்பட்டி, கணவாய்காடு, தும்பாதூளிப்பட்டி, பால் பண்ணை மற்றும் ஆத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பழனியாபுரி, செல்லியம்பாளையம், அக்கி செட்டிபாளையம், கொத்தாம்பாடி மற்றும் புத்திரகவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம், தளவாய்ப்பட்டி, ஆரியம்பாளையம். பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

    இந்த தகவலை சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பாலசுப்பரமணி தெரிவித்து உள்ளார்.

    • தமிழக அரசு கொரோனா நிவாரண திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2 பகுதிகளைக் கொண்டுள்ளது.
    • இந்த உதவி பெற பயனாளி 55 வயதிற்கு மேற்படாதவராகவும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் வகையில் தமிழக அரசு கொரோனா நிவாரண திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2 பகுதிகளைக் கொண்டுள்ளது.

    பகுதி 1-ன் கீழ் கொரோனா பரவலால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தனி நபர்கள், தனியுரிமை அல்லது பங்குதாரர் நிறுவனங்கள் தங்கள் பழைய நிறுவனத்தை மறு உருவாக்கம் அல்லது ஒரு புதிய நிறுவனத்தினை தாமாகவோ அல்லது தமது சட்டபூர்வ வாரிசுகள் மூலமாகவோ தொடங்குவதற்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 கோடி வரை இருக்கலாம். இதில் நிறுவப்படும் எந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

    இந்த உதவி பெற பயனாளி 55 வயதிற்கு மேற்படாதவராகவும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

    பகுதி 2-ன் கீழ் மாநிலத்தின் எந்த பகுதியிலும் இயங்கி வந்த கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலை மேற்கொள்ள நிறுவப்படும் எந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

    ஆர்வமும், தகுதியும் கொண்ட தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மானிய உதவி பெறுமாறு கேட்டுக்–கொள்ளப்படுகிறார்கள்.

    இதற்கான விண்ணப்–பத்தினை இணையவழியாக msmeonline.tn.gov.in –ல் பதிவிடலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சேலம் ஐந்து ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தினை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் பல திட்டங்கள் நிறை வேற்றுவதற்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டு ள்ளது. அதனை சிறப்பாக செயல்படுத்துகின்ற சூழ்நிலையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்படுத்தி கொடுத்து ள்ளார்கள்.
    • தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பொதுமக்களிடமிருந்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்க ளுக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி ரூ.3.23 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய வளர்ச்சி திட்டப்பணியினை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி நிருப ர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் பல திட்டங்கள் நிறை வேற்றுவதற்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டு ள்ளது. அதனை சிறப்பாக செயல்படுத்துகின்ற சூழ்நிலையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்படுத்தி கொடுத்து ள்ளார்கள்.

    இந்த ஓராண்டு காலகட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அத்திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மணியகாரன்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப்ப ள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ரூ.36.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகம் மற்றும் நூலக கட்டிடம்,

    சிறுவலூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியாக ரூ.10.75 லட்சம் என ரூ.70.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம்,

    கொளப்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.8 நம்பியூர் சாலை பகுதியில் 15-வது நிதிக்குழுமானியத் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் கோபிசெட்டி பாளையம் நகராட்சி வார்டு எண்.2 ராமர்விரிவாக்க பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா என மொத்தம் ரூ.1.66 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், கூச்சிக்கல்லூர் குறிச்சிபிரிவு அருகில் தனியார் இடத்தில் புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்கி வைக்க ப்பட்டுள்ளது. மேலும், பூனாச்சி ஊராட்சி செம்படாம் பாளையம் சாலை முதல் நத்தமேடு சாலை வரை சித்தார் ஓடைபள்ளம் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் மேல்மட்ட பாலம் அமைக்கும் பணியினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பொதுமக்களிடமிருந்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில்,கோபி செட்டிபாளையம் நகர்மன்றதலைவர் நாகராஜ், கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு, கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சுந்தரமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சுப்பிரமணி, கொளப்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சுநாத், தாசில்தார்கள் ஆயிஷா (கோபிசெட்டிபாளையம்), விஜயகுமார் (அந்தியூர்), முத்துகிருஷ்ணன் (பவானி) மற்றும் கோபிசெட்டி பாளையம் மற்றும் அம்மா பேட்டைவட்டார வளர்ச்சி அலவலர்கள் உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தொடர்புடையதுறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் சுப்பராயன் எம்.பி. முன்னிலையில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, தலைமை டாக்டர் விஸ்வேஸ்வரன், டாக்டர்கள் செல்வம், சுரேந்திரன், விஜயா, கலைவாணி, ஆத்மாதன், ராம்குமார், தலைமை செவிலியர் மலர்விழி, அல்ட்ரா தொண்டு நிறுவன நிறுவனர் தண்டாயுதபாணி, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் நாகராஜா, வட்டாரத் தலைவர் பழனிமுத்து, நகர தலைவர் ஜலாலுதீன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் கவிதா அனைவரையும் வரவேற்றார்.

    • குமாரபாளையத்தில் புதிதாக பரவி வரும் கால்நடை நோயால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு ஏற்பட்டு, அது அனைத்து கால்நடைகளுக்கும் பரவி வருகிறது. கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், கால்நடை உதவி டாக்டர்கள் ரமேஸ்குமார், சதீஷ், செந்தில்குமார் ஆகியோர் நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, இது சாதாரண வைரஸ் நோய், இதற்காக அச்சப்பட வேண்டியதில்லை என்று கூறினர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், கால்நடை டாக்டர்கள் அச்சப்படா தீர்கள் என்றாலும், கால்நடைகளின் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து விவசாயிகளும் மருத்துவமனைக்கு தங்கள் கால்நடைகளை அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்வதென்பது சாத்தியமில்லை.

    ஆகவே ஒவ்வொரு கிராமத்தின் முக்கிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு தடுப்பூசி போட்டால், விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதோடு பல கால்நடைகளை நோய் பாதிப்பு, நோய் பரவலில் இருந்து காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரூ.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடம் திறக்கப்பட்டது.
    • அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் புதிதாக ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளை தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர்.

    இதில் இந்து அறநிலையத்துறை ஈரோடு மாவட்ட ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் அருள்குமார், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வம், சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்திரி இளங்கோ, சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செங்கோட்டையன், சென்னிமலை பேரூர் செயலாளர் ராமசாமி, சென்னிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நேற்று மதியம் முதல் புதிய அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×