search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhiur"

    • பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் இன்று திறக்கப்பட்டது.
    • விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பெரிய ஏரியில் இருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. இன்றிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மொத்தம் 120 நாட்களுக்கு 32 மில்லியன் கன அடி நீர் பாசனத்திற்கு திறந்து விடபடுகிறது.

    இதன் காரணமாக பெரிய ஏரியின் ஆயக்கட்டு பகுதிகளான பச்சாம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

    இதில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள், உதவி பொறியாளர் தமிழ் பாரத், பச்சாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசந்திரன் பானுமதி, துணைத்தலைவர் பூபதி, விவசாய சங்கத்தலைவர் கண்ணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர்.

    திறந்த விடப்பட்ட தண்ணீர் மதகுகள் வழியே சீறிப்பாய்ந்து வெளியேறியது. அப்போது ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    இந்த திறக்கப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெறுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதில் தகவல் தொழில் நுட்ப அணி ஈரோடு வடக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், திருமாவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் காலிக்குடங்களுடன் இன்று காலை அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டுக்கு 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தங்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க கோரி வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விசுவநாதன் தலைமையில் பெண்கள் காலிக்குடங்க ளுடன் இன்று காலை அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டனர்.

    இது குறித்து தகவலறித்த அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மற்றும் அந்தியூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் முற்றுகை யிட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தட்டுப்பாடுயின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் சுப்பராயன் எம்.பி. முன்னிலையில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, தலைமை டாக்டர் விஸ்வேஸ்வரன், டாக்டர்கள் செல்வம், சுரேந்திரன், விஜயா, கலைவாணி, ஆத்மாதன், ராம்குமார், தலைமை செவிலியர் மலர்விழி, அல்ட்ரா தொண்டு நிறுவன நிறுவனர் தண்டாயுதபாணி, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் நாகராஜா, வட்டாரத் தலைவர் பழனிமுத்து, நகர தலைவர் ஜலாலுதீன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் கவிதா அனைவரையும் வரவேற்றார்.

    ×