search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
    X

    அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து ஆயக்காட்டு பாசனத்திற்காக ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தண்ணீர் திறந்து வைத்த போது எடுத்த படம்.

    அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

    • பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் இன்று திறக்கப்பட்டது.
    • விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பெரிய ஏரியில் இருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. இன்றிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மொத்தம் 120 நாட்களுக்கு 32 மில்லியன் கன அடி நீர் பாசனத்திற்கு திறந்து விடபடுகிறது.

    இதன் காரணமாக பெரிய ஏரியின் ஆயக்கட்டு பகுதிகளான பச்சாம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

    இதில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள், உதவி பொறியாளர் தமிழ் பாரத், பச்சாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசந்திரன் பானுமதி, துணைத்தலைவர் பூபதி, விவசாய சங்கத்தலைவர் கண்ணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர்.

    திறந்த விடப்பட்ட தண்ணீர் மதகுகள் வழியே சீறிப்பாய்ந்து வெளியேறியது. அப்போது ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    இந்த திறக்கப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெறுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதில் தகவல் தொழில் நுட்ப அணி ஈரோடு வடக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், திருமாவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×