search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா"

    • ஆஸ்திரேலியா அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
    • இந்தியா 148 ரன்களில் ஆட்டமிழந்தது.

    இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இந்த இரு அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட்- அலிசா ஹீலி களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர்.

     


    50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளையும், அமன்ஜோத் கௌர் 2 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா மற்றும் பூஜா வஸ்த்ராக்கர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

    கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் துவக்க வீராங்கனையான யாஸ்திகா பாட்டியா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 29 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் 19 ரன்களிலும், ஹர்மன்பிரீத் கௌர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

     


    அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதன் காரணமாக இந்திய அணி 32.4 ஓவர்களில் 148 ரன்களை மட்டும் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஜார்ஜியா வார்ஹெம் 3 விக்கெட்டுகளையும், அலானா கிங், அனபெல் சதர்லாந்து மற்றும் மேகன் ஸ்கட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஷ்லெய்க் கார்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

    • ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 261 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து 2-வது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா 75 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    மும்பை:

    ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் முதலாவதாக டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 219 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. தஹிலா மெக்ரத் அரை சதம் அடித்தார்.

    இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ஸ்நே ரானா 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.


    தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 406 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 4 வீராங்கனைகள் அரை சதம் கடந்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் கார்ட்னர் 4 விக்கெட்டும், கிம் கார்த், சதர்லெண்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 187 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 261 ரன்களில் ஆல் அவுட்டானது. தஹிலா மெக்ராத் 73 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் ஸ்நே ரானா 4 விக்கெட்டும், ஹர்மன்பிரீத் கவுர், கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    75 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
    • ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், தொடரின் மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது.

    இரு அணிகளிடையேயான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இவர் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்தார். திலக் வர்மா சிறப்பாக ஆடி 31 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    உலகக் கோப்பை 2023 தொடரை தொர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

    அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியை போன்ற இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்திய அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இன்றும் களம் கண்டனர். ஆஸ்திரேலிய அணியில் பெரன்டோர்ஃப்க்கு மாற்றாக ஆடம் ஜாம்பாவும், ஹார்டிக்கு மாற்றாக மேக்ஸ்வெல் களமிறங்கினர்.

    முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    தொடரந்து, ருத்துராஜ்- இஷான் கிஷான் ஜோடி களத்தில் இருந்தது. இதில், இஷான் கிஷான் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட்டானார்.

    தொடர்ந்து, சூர்ய குமார் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    18 ஓவரில் ருத்துராஜூடன் ரிங்கு சிங் களத்தில் இருந்தார். இதில், ருத்துராஜ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, ரங்கு சிங்குடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இதில், ரிங்கு சிங் 31 ரன்களும், திலக் வர்மா 7 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    இதன்மூலம், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    இதில், முதலாவதாக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் தலா 19 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, ஜோஷ் இங்லீஸ் 2 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களிலும், டிம் டேவிட் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    14 ஓவரில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மேத்யூ வாடே களத்தில் விளையாடினர்.

    இதில், மார்கஸ் 45 ரன்களில் அவுட்டானதை அடுத்து, மேத்யூ வாடேவுடன் சியோன் அபாட் விளையாடி ஒரு ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, நாதன் எல்லிஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

    16 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 155 ரன்கள் எடுத்திருந்தது.

    20 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.

    17வது ஓவரில் ஆடம் சம்பாவும் ஒரு ரன்னில் அவுட்டானதை அடுத்து தன்வீர் சங்கா களமிறங்கினார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்து டி20 தொடரில் 2வது ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

    • 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    உலகக் கோப்பை 2023 தொடரை தொர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

    அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியை போன்ற இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்திய அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இன்றும் களம் கண்டனர். ஆஸ்திரேலிய அணியில் பெரன்டோர்ஃப்க்கு மாற்றாக ஆடம் ஜாம்பாவும், ஹார்டிக்கு மாற்றாக மேக்ஸ்வெல் களமிறங்கினர்.

    முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    தொடரந்து, ருத்துராஜ்- இஷான் கிஷான் ஜோடி களத்தில் இருந்தது. இதில், இஷான் கிஷான் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, சூர்ய குமார் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    18 ஓவரில் ருத்துராஜூடன் ரிங்கு சிங் களத்தில் இருந்தார். இதில், ருத்துராஜ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, ரங்கு சிங்குடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இதில், ரிங்கு சிங் 31 ரன்களும், திலக் வர்மா 7 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    இதன்மூலம், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

    • இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன.
    • இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    உலகக் கோப்பை 2023 தொடரை தொர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

    அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியை போன்ற இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. 

    இந்திய அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இன்றும் களம் காண்கின்றனர். ஆஸ்திரேலிய அணியில் பெரன்டோர்ஃப்க்கு மாற்றாக ஆடம் ஜாம்பாவும், ஹார்டிக்கு மாற்றாக மேக்ஸ்வெல் களமிறங்குகின்றனர்.

    • ஆடுகளங்களின் தன்மையை முன்கூட்டியே சரி பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
    • பொதுவாக பந்து வீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள்.

    இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.

    இதற்கிடையே உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பலர் கண்டனம், அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறியதாவது:-

    உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் தனது கால்களை வைத்திருந்தது என் மனதை காயப்படுத்தியது.

    உலகில் உள்ள அனைத்து அணிகளும் வெல்ல போராடும் கோப்பை, உங்கள் தலைக்கு மேல் நீங்கள் தூக்க விரும்பும் கோப்பை மீது கால் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை.

    ஆடுகளங்களின் தன்மையை முன்கூட்டியே சரி பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொதுவாக பந்து வீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள்.

    நான் ஆடுகளம் அருகில் செல்வதில்லை. ஏனென்றால் நீங்கள் பந்து வீசும் போதுதான் அது எப்படி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். பிறகு ஏன் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை எளிமையாக வைத்திருப்பது நல்லது. உங்களை நிதானமாக வைத்திருங்கள். அப்போது தான் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
    • இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 52 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

    போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. 209 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 21 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

    அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். தொர்ந்து, திலக் வர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், சூர்யகுமார் 80 ரன்களை குவித்து அவுட்டானார்.

    18 ஓவர் முடிவில், ரங்கு சிங்- அசார் பட்டேல் ஜோடி களத்தில் இருந்தது. இதில், ரங்கு சிங் 21 ரன்களும், அசார் பட்டேல் 2 ரன்களும் எடுத்தனர். ரவி பிஷ்னோய் ரன் அவுட் ஆனார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் டன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஷார்ட் மற்றும் ஜாசன், சியான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முன்னணியில் உள்ளது.

    • ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
    • இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 52 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

    போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் இங்லிஸ் 110 ரன்களை குவித்தார். இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

    • டி20 தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்.
    • பந்துவீச்சில் அர்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார். இவர் தவிர ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்று உள்ளனர்.

    • துணை பிரதமர் ரிச்சர்டு-க்கு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை.
    • தேசிய போர் நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (நவம்பர் 19) நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த போட்டியை காண ஆஸ்திரேலிய துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ரிச்சர்டு மார்லஸ் இந்தியா வந்திருந்தார்.

    நேற்றைய போட்டியை கண்டுகளித்த நிலையில் ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு-க்கு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை இன்று அளிக்கப்பட்டது. பிறகு டெல்லி தேசிய போர் நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள கடையில் எலுமிச்சை பழச்சாறு வாங்கி பருகினார். பிறகு தெருவோர கடையில் லட்டு ஒன்றை வாங்கி சாப்பிட்ட துணை பிரதமர் ரிச்சர்ட் அதற்கான பணத்தை யு.பி.ஐ. மூலம் செலுத்தினார். 

    • உலகக் கோப்பையை 6-வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா.
    • ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் வென்று அசத்தியது. இன்றைய போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 240 ரன்களை மட்டுமே குவித்தது.

    அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை துரத்தியது. துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தணறிய ஆஸ்திரேலியா அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    22.1 ஓவரில் 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 28-வது ஓவரின் 5-வது பந்தை பும்ரா வீசினார். லபுஷேன் எதிர்கொண்ட இந்த பந்து, அவரின் பேட்-ஐ தாக்கியது. விக்கெட் கிடைத்த உற்சாகத்தில் பும்ரா மற்றும் இந்திய வீரர்கள் விக்கெட் கேட்டு அம்பயரிடம் முறையிட்டனர். எனினும், அவர் செவி கொடுக்காமல் விக்கெட்டை மறுத்தார்.

    உடனே இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரிவ்யூ கேட்டார். மூன்றாவது நடுவர், இந்த பந்தை ரி-பிளே செய்து பார்த்தார். அதில் பந்து லபுஷேன் பேட்-இல் படாமல், நேரடியாக அவரது பேட்-இல் பட்டது தெளிவாக உறுதி செய்யப்பட்டது. மேலும் பந்து ஸ்டம்ப்களையும் பதம் பார்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்றாம் நடுவர் களத்தில் இருந்த அம்பயரின் முடிவே இறுதியானது என்பதை தெரிவிக்கும் வகையில் "அம்பயர்ஸ் கால்" என்ற தீர்ப்பை வழங்கினார்.

    போட்டியின் இந்த சூழலில் இந்திய அணி விக்கெட்டை வீழ்த்த போராடி வந்த நிலையில், அம்பயர்ஸ் கால் முடிவால் விக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. இதன் பிறகு வேகம்பிடித்த லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் வெற்றி இலக்கை எட்டியது. இந்த நிலையில், போட்டியில் இந்திய அணி தோல்விக்கு "அம்பயர்ஸ் கால்" முடிவும் முக்கிய காரணம் என கூறி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    ×