search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2-வது டி20.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு
    X

    2-வது டி20.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு

    • இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன.
    • இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    உலகக் கோப்பை 2023 தொடரை தொர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

    அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியை போன்ற இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்திய அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இன்றும் களம் காண்கின்றனர். ஆஸ்திரேலிய அணியில் பெரன்டோர்ஃப்க்கு மாற்றாக ஆடம் ஜாம்பாவும், ஹார்டிக்கு மாற்றாக மேக்ஸ்வெல் களமிறங்குகின்றனர்.

    Next Story
    ×