என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகளிர் கிரிக்கெட்"
- காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை.
- பெங்களூரு அணி 2-வது தோல்வியை சந்தித்தது.
பெங்களூரு:
5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் மோதியது. காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை. அவருக்கு பதிலாக நாட் சிவெர் கேப்டன் பொறுப்பை கவனித்தார்.
'டாஸ்' ஜெயித்த மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 9 ரன்னிலும், அடுத்து வந்த சப்னினி மேக்னா 11 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீராங்கனை சோபி டெவின் 9 ரன்னிலும், ரிச்சா கோஷ் 7 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 42 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
4-வது வீராங்கனையாக களம் கண்ட எலிசி பெர்ரி நிலைத்து நின்று ஆடி அணி கவுரவமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தார். அவருடன் இணைந்த சோபி மொலினிஸ் 12 ரன்னிலும், ஜார்ஜியா வார்ஹம் 27 ரன்னிலும் வெளியேறினர். 20 ஓவரில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. எலிசி பெர்ரி 44 ரன்களுடனும் (38 பந்து, 5 பவுண்டரி), ஸ்ரேயங்கா பட்டீல் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் நாட் சிவெர், பூஜா வஸ்ட்ராகர் தலா 2 விக்கெட்டும், இஸ்சி வோங், சாய்கா இசாக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகள் யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ் ஆகியோர் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கம் அளித்தனர். ஸ்கோர் 45 ரன்னை எட்டிய போது (3.5 ஓவரில்) யாஸ்திகா பாட்டியா 31 ரன்னில் (15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) சோபி டெவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ்சிடம் சிக்கினார். அடுத்து ஹீலி மேத்யூஸ் 26 ரன்னிலும் (21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), நாட் சிவெர் 27 ரன்னிலும் (25 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர்.
15.1 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அமெலி கெர் 40 ரன்களுடனும் (24 பந்து, 7 பவுண்டரி), பூஜா வஸ்ட்ராகர் 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 3-வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. பெங்களூரு அணி 2-வது தோல்வியை சந்தித்தது. மும்பை வீராங்கனை அமெலி கெர் ஆட்டநாயகி விருது பெற்றார்.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
- டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.
- ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவடு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஷஃபாலி வர்மா மற்றும் ஜெஸ் ஜோனசனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் மகளிர் பிரீலிக் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களைச் சேர்த்து அசத்தியது.
இதையடுத்து ஆடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தனது முதல் அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், இப்போட்டியின் போது ஆர்சிபி வீராங்கனை ஜார்ஜியா வேர்ஹாம் சிக்சரை தடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி வீராங்கனை ஷஃபாலி வர்மா சிக்சர் அடிக்கும் முயற்சியில் பந்தை விளாசினார். அப்பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜார்ஜியா வேர்ஹாம் லாவகமாக தாவி பந்தை பிடித்து தரையை தொடுவதற்கு முன் அதனை மைதானத்திற்குள்ளும் தள்ளிவிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.
முன்னதாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கா விளையாடி வந்த ஏபிடி வில்லியர்ஸ் இதே போன்று ஒரு பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். அந்த காலத்தில் அவரை ஸ்பைடர் மேன் என நெட்டிசன்கள் புகழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் வேர்ஹாம் - டி வில்லியர்ஸ் இருவரும் ஒரே பாணியில் பந்தை தடுக்கும் புகைப்படத்தையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
- பேட்டிங் தரவரிசையில் ஹர்மன்ப்ரீத் கவுர் (639 புள்ளி) 10-வது இடத்தில் உள்ளார்.
- பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தீப்தி சர்மா (654 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா (696 புள்ளி) 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஹர்மன்ப்ரீத் கவுர் (639 புள்ளி) 10-வது இடத்தில் உள்ளார்.
இதன் முதல் 3 இடங்கள் முறையே இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் (807 புள்ளி), இலங்கையின் சமாரி அத்தபட்டு (736 புள்ளி), ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (717 புள்ளி) உள்ளனர்.
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (746 புள்ளி) முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் (677 புள்ளி) 2-ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் (675 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியா தரப்பில் தீப்தி சர்மா (654 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தீப்தி சர்மாவை தவிர முதல் 10 இடங்களில் வேறு எந்த வீராங்கனையும் இல்லை.
ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் ( 452 புள்ளி) முதல் இடத்திலும், இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் (360 புள்ளி) 2-ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் (358 புள்ளி) 3-ம் இடத்திலும், நியூசிலாந்தின் அமெலியா கெர் (347 புள்ளி) 4-ம் இடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா (345 புள்ளி) 5-ம் இடத்திலும் உள்ளனர்.
- முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 229 ரன்கள் எடுத்தது.
- இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையே முதலில் நடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 45 ஓவர்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 29.3 ஓவர்களில் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டி வருகிற 10-ந் தேதி நடக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் கள நடுவர்களாக கிளாரி போலோசாக், எலோயிஸ் ஷெரிடன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போது 23-வது ஓவரை ஆஸ்திரேலிய அணியின் கார்ட்னர் வீசினார். அப்போது சுனே லூசுக்கு எல்பிடபிள்யூ அப்பில் கேட்டக்கப்பட்டது. கள நடுவரான கிளாரி போலோசாக் நாட் அவுட் கொடுத்தார்.
உடனே ஆஸ்திரேலியா தரப்பில் ரிவ்யூ கேட்கப்பட்டது. முடிவில் பந்து ஸ்டெம்ப்பின் ஆப் திசையில் சென்றது. இது மைதானத்தில் இருந்த திரையில் தெளிவாக தெரிந்தது. இதனை பார்த்த ஆஸ்திரேலிய வீராங்கனைகள் சோகமாக சென்றனர். தென் ஆப்பிரிக்கா வீராங்கனை சந்தோஷத்தில் நகர்ந்தனர். அந்த நிலையில் உடனே நடுவர் கிளாரி போலோசாக் யாரும் எதிர்பாராத வகையில் அவுட் கொடுத்தார். இதனால் மைதானத்தில் இருந்த வீராங்கனைகள் சிரித்தனர். இதனை உணர்ந்த நடுவர் சிரித்து கொண்டே முடிவை மாற்றினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்திய பெண்கள் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- இதன் மூலம் 3 போட்டிகள் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
மும்பை:
இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. 'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதன்படி குழுமியிருந்த 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷபாலி வர்மாவும் (26 ரன்), துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவும் (29 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் மிடில் வரிசையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (3 ரன்) சொதப்பியதால் உத்வேகம் தடைபட்டது. ஹர்மன்பிரீத் கவுர் நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் ஒன்றில் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. அதன் பிறகு தீப்தி ஷர்மாவும் (14 ரன்), விக்கெட் கீப்பர் ரிச்சா கோசும் (34 ரன், 28 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) கைகோர்த்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர்.
20 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. அமன்ஜோத் கவுர் (17 ரன்), பூஜா வஸ்ட்ராகர் (7 ரன்) களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் சுதர்லாண்ட், வேர்ஹாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஒரு விக்கெட் எடுத்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட்டின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான பாகிஸ்தானின் நிதா தர்ரை (130 விக்கெட்) பின்னுக்கு தள்ளினார்.
அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா 18.4 ஓவர்களில் 3 விக்கெடடுக்கு 149 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனைகளான கேப்டன் அலிசா ஹீலி (55 ரன், 38 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), பெத் மூனி (52 ரன், நாட்-அவுட்) அரைசதம் விளாசினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன.
முன்னதாக ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இந்த சுற்றுப்பயணத்தில் அந்த அணி ஒரே டெஸ்ட் போட்டியில் மட்டும் தோற்று கோப்பையை கோட்டை விட்டது.
- இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை முதல்முறையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களமிறங்கும்.
மும்பை:
அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
அதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பார்முக்கு திரும்ப வேண்டியது அணிக்கு அவசியமாகும். மொத்தத்தில், ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன் உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை முதல்முறையாக கைப்பற்ற வரிந்து கட்டும்.
அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி தொடரை வசப்படுத்த ஆஸ்திரேலிய அணி எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பனிப்பொழிவின் தாக்கத்தில் 2-வது பேட்டிங் செய்வது எளிதாக இருப்பதால் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
மும்பை:
அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 19.2 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. போப் லிட்ச்பீல்ட் 49 ரன்னும், எல்லீஸ் பெரி 37 ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் டைட்டஸ் சாது 4 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். ஸ்மிருதி மந்தனா அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட்டுக்கு 145 ரன்களை எடுத்து வென்றதுடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஷபாலி வர்மா 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஆஸ்திரேலியா அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
- இந்தியா 148 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இந்த இரு அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட்- அலிசா ஹீலி களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர்.
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளையும், அமன்ஜோத் கௌர் 2 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா மற்றும் பூஜா வஸ்த்ராக்கர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் துவக்க வீராங்கனையான யாஸ்திகா பாட்டியா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 29 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் 19 ரன்களிலும், ஹர்மன்பிரீத் கௌர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதன் காரணமாக இந்திய அணி 32.4 ஓவர்களில் 148 ரன்களை மட்டும் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் ஜார்ஜியா வார்ஹெம் 3 விக்கெட்டுகளையும், அலானா கிங், அனபெல் சதர்லாந்து மற்றும் மேகன் ஸ்கட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஷ்லெய்க் கார்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
- ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதம் அடித்து அசத்தினார்.
- இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மும்பை:
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட்- அலிசா ஹீலி களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர் கொண்டு ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினார்.
82 ரன்கள் இருந்த போது அலிசா ஹீலி அவுட் ஆனார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 119 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
- இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 16 ஆண்டுகள் ஆகிறது.
மும்பை:
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 16 ஆண்டுகள் ஆகிறது. அந்த நீண்ட கால சோகத்துக்கு இந்த ஆட்டத்திலாவது இந்தியா முடிவு கட்டுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார். மற்ற வீராங்கனைகள் தீப்தி சர்மா பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். போட்டி முடிவில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதைத் தொடர்ந்து 259 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு யாஸ்திகா பாட்டியா மற்றும் ஸ்மிருதி மந்தனா முறையே 14 மற்றும் 34 ரன்களை எடுத்து சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் பொறுப்பாக விளையாடி 96 ரன்களை குவித்தார். இவருடன் விளையாடிய ரோட்ரிக்ஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி கடைசி ஓவரில் எட்டி விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய சதர்லாந்து மூன்று விக்கெட்டுகளையும், ஜார்ஜியா வார்ஹெம் 2 விக்கெட்டுகளையும், ஆஷ்லி கார்ட்னர், டார்சி பிரவுன் மற்றும் அலானா கிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- ஆஸ்திரேலியா தரப்பில் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்.
- இந்திய தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார். மற்ற வீராங்கனைகள் தீப்தி சர்மா பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
That moment when Shreyanka Patil scalped her first wicket in ODIs on debut#TeamIndia | #INDvAUS | @shreyanka_patil | @IDFCFIRSTBank pic.twitter.com/tYD65fd8qx
— INDIA CRICKET TEAM ? (@V_D_Brother) December 30, 2023
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்