என் மலர்
நீங்கள் தேடியது "Women's Premier League Cricket"
- குஜராத் அணி மும்பையிடம் 143 ரன் வித்தியாசத்திலும், உ.பி.வாரியர்சிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
- பெங்களூர், குஜராத் புள்ளி எதுவும் பெறவில்லை.
மும்பை:
இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் முதலாவது மகளிர் பிரீமியர் `லீக்' 20 ஓவர் போட்டி மும்பை, நவி மும்பையில் நடைபெற்று வருகிறது.
இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். `லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் `பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
6-வது `லீக்' ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் பெத்முனி தலைமையிலான குஜராத்-ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் தாங்கள் விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோற்று இருந்தது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறுவது எந்த அணி என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணி மும்பையிடம் 143 ரன் வித்தியாசத்திலும், உ.பி.வாரியர்சிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
பெங்களூர் அணி 60 ரன் வித்தியாசத்தில் டெல்லியிடமும், 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடமும் தோற்றது. 5 போட்டிகள் முடிவில் மும்பை, டெல்லி தலா 4 புள்ளியுடனும், உ.பி.வாரியர்ஸ் 2 புள்ளியுடனும் உள்ளன. பெங்களூர், குஜராத் புள்ளி எதுவும் பெறவில்லை.
- டெல்லி அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது.
- குஜராத் 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி பெற்று உள்ளது.
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 9வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அந்த அணி 2வது வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.
அந்த அணியில் மெக் லானிங், ஷபாலி வர்மா, ரோட்ரிக்ஸ், ஜோனாசென், ஷிகா பாண்டே, ராதா யாதவ், கேட்சி, தாரா நோரிஸ் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.
குஜராத் 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் டங்லே, ஹர்லீன் தியோல், கார்ட்னர், கிம் சுரேத், சுதர்லேண்ட் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.
- குஜராத், பெங்களுரூ, டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தியது. மும்பை 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
- உ.பி. வாரியர்ஸ் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது.
5 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 10-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், உ.பி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
மும்பை அணி தான் விளையாடிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத், பெங்களுரூ, டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தியது. மும்பை 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளது. மேத்யூஸ், ஹர்மன் பிரீத் கவூர், ஸ்கிவர் பிரண்ட், அமெலியா கெர், வாங், பூஜா வஸ்த்ரகர் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.
உ.பி. வாரியர்ஸ் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் அலிசா ஹுலி, தகலியா மெக்ராத், தீப்தி சர்மா, கிரேஸ் ஹாரிஸ், சோபி எக்பெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைதியா ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.
- இறுதியில் உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
- அலிசா ஹீலி 58 ரன்னிலும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்னிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
5 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 10-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து அலிசா ஹீலி, தேவிகா வைத்யா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இதில் வைத்யா 6 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய கிரண் நவ்கிரே 17 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து தஹ்லியா மெக்ராத், அலிசா ஹீலியுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த இணை அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் அடித்த நிலையில் அலிசா ஹீலி 58 ரன்னிலும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்னிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதையடுத்து சிம்ரன் ஷேக், சோபி எக்லெஸ்டோன் ஜோடி சேர்ந்தனர். இதில் சோபி எக்லெஸ்டோன் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.
- இரவு 7.30 மணிக்கு நடக்கும் 11-வது லீக் ஆட்டத்தில் இரண்டு அணிகள் மோதுகின்றன.
- பெங்களூரு அணி தான் மோதிய நான்கு ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.
மும்பை:
முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 11-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பெங்களூரு அணி தான் மோதிய நான்கு ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது. இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத நிலையில் பெங்களூரு அணி உள்ளது. அந்த அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.
- மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மினி ஏலம் பெங்களூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
- 16 வயது வீராங்கனை கமலினியை ₹1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐ.பி.எல். தொடர் 17 ஆண்டுகள் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டிகளை கடந்த ஆண்டு பி.சி.சி.ஐ. அறிமுகப்படுத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய 5 அணிகள் விளையாடி வருகிறது.
முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனில் ஆர்சிபி அணியும் WPL கோப்பைகளை கைப்பற்றினர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மினி ஏலம் பெங்களூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை கமலினியை ₹1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவரின் அடிப்படை விலையாக ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தற்போது அபாரமாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
வதோதரா:
பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. முதலாவது ஆண்டில் மும்பை இந்தியன்சும், 2-வது சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மகுடம் சூடின.
இந்த நிலையில் 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி வரை நடக்கும் இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் மோதி அதில் வெற்றி காணும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும்.
பெங்களூரு (கர்நாடகா), லக்னோ (உத்தரபிரதேசம்), மும்பை (மராட்டியம்), வதோதரா (குஜராத்) ஆகிய நகரங்களில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் பெற்றுள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு அணியும் சில வீராங்கனைகளை கழற்றி விட்டு, புதிய வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்து பட்டை தீட்டியுள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் இளம் விக்கெட் கீப்பர் கமலினியை ரூ.1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்ட்ராகர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் அவருக்கு பதிலாக ஜூனியர் உலகக்கோப்பையில் கலக்கிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் பருனிகா சிசோடியாவை ரூ.10 லட்சத்துக்கு மும்பை நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதே சமயம் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சதம் உள்பட 309 ரன்கள் சேர்த்து தொடர்நாயகியாக ஜொலித்த கோங்காடி திரிஷாவை ஏலத்தில் யாரும் சீண்டவில்லை. உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக ஏலம் நடந்ததால் திரிஷாவின் திறமையை யாரும் அறிந்திருக்கவில்லை. எந்த வீராங்கனையாவது காயமடைந்ததால் அவருக்கு பதிலாக திரிஷாவை இழுக்க வாய்ப்புள்ளது.
மற்றபடி டெல்லி அணியில் கேப்டன் மெக்லானிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, அலிஸ் கேப்சி, அனபெல் சுதர்லாண்ட், மரிஜானே காப், அருந்ததி ரெட்டி, குஜராத் அணியில் ஹர்லீன் தியோல், பெத் மூனி, லாரா வோல்வார்ட், கேப்டன் ஆஷ்லி கார்ட்னெர், டியான்ட்ரா டோட்டின், தனுஜா கன்வார், மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஹெய்லி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, அமெலியா கெர், நாட் சிவெர், நடினே டி கிளெர்க், சாய்கா இஷாக், பெங்களூரு அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ரிச்சா கோஷ், எலிஸ் பெர்ரி, டேனி வியாட், ரேணுகா சிங், ஸ்ரேயங்கா பட்டீல், ஜார்ஜியா வேர்ஹாம், உ.பி. அணியில் கேப்டன் தீப்தி ஷர்மா, சமாரி அட்டப்பட்டு, தாலியா மெக்ராத், சினெலி ஹென்றி, சோபி எக்லெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட் என எல்லா அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகளுக்கு பஞ்சமில்லை. அதனால் யார் கை ஓங்கும், எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பதை இப்போதே கணிப்பது கடினம். இருப்பினும் மும்பை, பெங்களூரு, டெல்லி அணிகளுக்கு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு சற்று தூக்கலாக தெரிகிறது.
போட்டிக்கான பரிசுத்தொகை விவரம் அறிவிக்கப்படவில்லை. என்றாலும் கடந்த ஆண்டில் பட்டம் வென்ற அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.3 கோடியும் வழங்கப்பட்டது. அதே பரிசுத்தொகையே இந்த முறையும் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'இந்த முறை நிறைய உள்நாட்டு வீராங்கனைகள் இந்த போட்டிக்கு தயாராகி வருவது இந்திய பெண்கள் அணியின் கேப்டன் என்ற முறையில் உற்சாகம் அளிக்கிறது. சர்வதேச வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடும் வாய்ப்ைப பெற்றுள்ள அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். இதன் மூலம் இந்திய அணி வலுவடையும்' என்று குறிப்பிட்டார்.
வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. பெங்களூரு ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி காயத்தால் அவதிப்படுவதால் தொடக்க ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி பெற்றுள்ளன. போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.






