என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆடி"
- பக்தர்கள் மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருகின்றனர்.
- மொட்டை அடிப்பது, காது குத்துவது, போன்ற வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன.
அங்காளம்மன்-வேண்டுதல்கள்
மேலும் இந்த விசேஷ திருவிழா நாட்களில் அங்காளம்மன் தான் எடுத்த அலங்கோல உருவத்தை நிறைவு கூறவே,
ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வேண்டுதல் பெயரில், மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி, அறுத்து, பொங்கல் வைத்து, அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்வது சித்தாங்கு, கஞ்சுலி, கபால வேஷம் அணிந்து வருவது,
மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருவது போன்ற வேஷத்துடன் மேல்மலையனூருக்கு திருவிழா காலங்களில் வந்து வேண்டுதல் காணிக்கை பிரார்த்தனைகளான,
பொன், வெள்ளி பணம் போன்ற காணிக்கை உருபடிகளை உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பிரார்த்தனையை செய்து கொள்வார்கள்.
அம்மனின் வரலாற்றை தொடர்புபடுத்தி செய்யும் திருவிழா தமிழ் நாட்டில் வேறு எங்கும் கொண்டாடுவதில்லை.
இந்த மேல்மலையனூரில் மட்டுமே அது திருவிழாவாக கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.
- அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரமஹத்தி விலகிய நாள்.
- ஐந்தாம் நாள் பகல் உற்சவமாக “தீமிதி” திருவிழா கொண்டாடப்படுகிறது.
அங்காளம்மனுக்கு திருவிழா கொண்டாடுவது
கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும்.
அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரமஹத்தி விலகிய நாள்.
அன்றுதான் அங்காளி என்ற பூங்காவனத்தாள் அங்காளம்மனாக ஆனாள்.
முந்தைய பதிவில், கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகத்தில் அந்த பாம்பு படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்ததாகவும் அறிந்த வண்ணம், இந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறவே எழுந்த நிலைகளே திருவிழாக்கள் ஆகும்.
மாசி மாதம் சிவபெருமான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு வந்து இரவு தங்கியதால், அன்றைய இரவை சிவன் ராத்திரி என்றும்,
அன்று இரவில் கரம் என்ற சக்தி கரக திருவிழாவாகவும்,
மறுநாள் பூரண அமாவாசை தினத்தில் அங்காளி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவில் சூரையிடும் நாள், இதையே மயானக்கொள்ளை என்றும்
அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள்.
ஆண்பூத கணங்கள் புற்றை சுற்றி பணிந்தன என்று அறிந்த வண்ணம்,
இரவில் ஆண்பூத வாகனத்தில் அம்மன் பவனி என்னும், மூன்றாம் நாள் பெண் பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும்,
நான்காம் நாள், காட்டில் இருக்கும் மிருகத்தின் தலைவன் சிங்க வாகனத்தில் அம்மன் பவனி என்றும்,
ஐந்தாம் நாள் வனத்தில் இருந்த பறவை கணங்கள் தன்னுடைய தலைவனான அன்னத்தை வாகனமாக ஏற்று அன்ன வாகத்தில் அம்மன் பவனி என்றும்,
அன்றைய பகல் திருவிழாவாக கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற நிலையில் உச்ச கட்டமாக கருதி "தீமிதி" திருவிழாவாகவும் கொண்டாடப் படுகிறது.
ஆறாம் நாள் தேவர் உலகின் ஐராவத்தில் இருந்து தேவர்கள் வந்தனர் என்றும் அவர்களின் வாகனமான ஐராவதத்தில் அம்மன் பவனி என்றும்,
மற்றும் ஏழாம் நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேர் வடிவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர் அதன் நினைவாக ஏழாம் நாள் அம்மன் திருத்தேரில் பவனி என்றும்,
எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை நினைவு கூறவே குதிரைவாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த உருவமான நாகத்தை நினைவு கூறவே 9 தலை நாகவாகனத்தில் அம்மன் பவனி என்றும், பத்தாம் நாள் சத்தாபரணம் அணிந்து அனைவருக்கும் அருள் கொடுக்கும் சத்தாபரணத் திருவிழா என்றும், தெப்பல் திருவிழா என்றும், கொண்டாடப்படுகிறது.
ஆதி முதல் இன்று வரையில் இந்த திருவிழாவில் மாற்றம் இல்லாமல் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.
இந்த 10 நாட்களும் திருவிழாவாக கொண்டாடுவது முழுக்க முழுக்க இந்த அம்மனின் வரலாற்றுத் திருவிழாவாகும்.
தற்கால திருவிழாவாக அங்காளம்மன் வார வழிபாட்டு மன்றத்தில் சார்பாக ஐந்தாம் நாள் பகல் உற்சவமாக "தீமிதி" திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
- தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.
- சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது
புற்று உருவான வரலாறு
மலையனூரின் தேவதையான பூங்காவனத் தாய் ஒரே சிற் சக்தியாகி அங்காளியாகி சிவனாரை மயானம் அழைத்து சென்று சூரையை இறைக்கும்போது சிவனாரைப் பற்றி இருந்த பிரம்ம கபாலம் சிவனாரை விட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்டது.
அப்போது சிவபெருமான் தாண்டி ஓடி "தாண்டவ ஈஸ்வரனாகவும்" தாண்டிய இடமான மேல்மலையனூரில் "தாண்டேஸ்வரராகவும்" அமர்ந்தார்.
தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.
சிவபெருமானை விட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்ட பிரம்ம கபாலம் மீண்டும் சிவபெருமானை பற்றிக் கொள்ள, விஸ்வரூபம் எடுத்து பறக்க ஆயத்தமானது.
இதைக் கண்ட அங்காளி தானும் விஸ்வரூபம் எடுத்து, பிரம்மன் தலையை மிதித்த ஆங்காரி அங்காளியாக விளங்கினாள்.
இந்நிலையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு விஸ்வரூபத்தில் இருந்த அங்காளியை பிரம்மன் தலையை மிதித்த வண்ணமே பூமியை பிளந்து உள்ளே தள்ளி மூடி மறைந்துவிட்டார்.
சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது.
அது சிவ சுயம்பு உருவமானது.
அப்புற்றுக்குள் கோயில் கொண்ட நாகம் படம் எடுத்து ஆடும் நிலையில், சீறி பாயும் நிலையில் வெளியில் வந்து நின்றது.
இந்த நிகழ்வுகளை கண்ட பூலோகத்தில் இருந்த பெண் பூதகணங்கள், ஆண் பூதகணங்கள், காட்டிலிருக்கும் மிருக கணங்கள், வனத்திலிருந்த பட்சி கணங்கள், அனைத்தும் ஒன்றுசேர வந்து தனித்தனியான முறையில் அந்த புற்றை சுற்றி கைகூப்பி தொழுது நின்றன.
ஆனால் அந்த நாகத்தின் படம் சுருங்கி புற்றுக்குள் செல்லவில்லை.
இதனால் விண்ணுலக தேவர்கள் தங்களின் வாகனமாக ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகம் வந்து இப்புற்றை சுற்றி நின்று தொழுதனர்.
அதற்கும் படம் சுருங்கி உள்ளே செல்லவில்லை.
இந்த காரணத்தால் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேராக உருவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர்.
அப்போது கலியுகம் பிறந்தது.
கலியுகத்தில் நாகப்படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்து போனது.
அந்த புற்றுதான் நாம் இப்போது கோவிலில் காணும் புற்றாகும்.
நாம் எல்லோருக்கும் அருளும் அருள் அம்பிகையான அம் காளம் அம் அன் ஸ்ரீ அங்காளம்மனாக அந்த புற்றில் உறைந்து அமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது.
- தேவியின் வலதுகையில் புஜம் முதலில் விழுந்த இடமே இதுதான்.
- தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே மேல்மலையனூர் ஆகும்.
மேல்மலையனூர் - முதல் சக்தி பீடம்
ஆதி சதுர்யுகத்தில் கிரேதா யுதத்திற்கு முன்பான மணியுகத்தில் முதல் மூர்த்தியான சிவபெருமானின் பிரமஹத்தி தோசம் நீக்கியும், கலியுக மாந்தர்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டும் அன்னை பராசக்தி சிவ சுயம்பு மண் புற்றுவாக திரு அவதாரம் செய்து ஸ்ரீ அங்காளம்மனாக அருள்பாலிக்கும் புண்ணியத் தலமே மேல்மலையனூர் ஆகும்.
சிவபெருமான் தாட்சாயணி தேவியின் பூத உடலை சுமந்து நர்த்தன தாண்டவம் ஆடியபோது தாட்சாயணி தேவியின் வலதுகையில் புஜம் முதலில் விழுந்த இடமே, தண்டகாரண்யம் என்ற இந்த மேல்மலையனூர் ஆகும்.
போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிக பரந்த பரப்யையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர்.
தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும்.
- விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது.
- உடனே அந்தப் பெண் அருள் வந்து கூச்சலிடுவாள்.
தீய சக்திகள் ஓடி விடும்
விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது.
பிள்ளைப்பேறு, வேலையின்மை, திருமணப் பிரச்சினை, இப்படிப் பல பிரச்சினைகளுக்கும் குறி பார்ப்பதுண்டு.
அவர்களே அதற்கான பரிகாரமும் கூறுவர்.
பேய் பிடித்த பெண்களைக் கூட்டி வந்து அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து ஈரப்புடவையுடன் கூட்டி வருகிறார்கள்.
அந்நேரம் பூசாரி ஒருவர் அப்பெண் தலை மீது மந்திரக் கோலை வைத்துத் தடவி கபால ஜலத்தைத் தெளிப்பார்.
உடனே அந்தப் பெண் அருள் வந்து கூச்சலிடுவாள்.
பிறகு மேளம் பம்பை முழங்கும்..
பேய் பிடித்த பெண் ஆவேசமாக கத்தியபடி, தலையை விரித்து ஆடத் தொடங்குவாள்.
இப்படி வெறியாட்டம் ஆடி பூசாரியிடமிருந்து செல்லத் துடிப்பாள்.
உடனே பூசாரிகள் கற்பூரம் ஏற்றி அவளிடம் கொடுப்பார்.
அதை அவள் வாயில் போட்டு விழுங்குவாள் அவளிடம், நீ யார், எதற்காக இவளைப் படித்தாய்? என்று பூசாரி கேட்பார்.
இதன் மூலம் அந்த தீய சக்தி பற்றிய விபரம் தெரியும்.
அந்த தீய சக்தியிடம் பேசி உறுதிமொழி வாங்கிக் கொண்டு அதை அங்காளம்மன் துணையுடன் விரட்டி விடுவார்கள்.
அப்புறம் சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதிப்படுகிறாள்.
இதன் மூலம் அந்த பெண் தீய சக்தியிடம் இருந்து விடுப்பதை உறுதி செய்கிறார்கள்.
- இக்கோவிலின் தல விருட்சமாக வாகை மரம் உள்ளது.
- இங்கு தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் பெறலாம் என நம்பப்படுகிறது.
தொட்டில் கட்டினால் குழந்தை
இக்கோவிலின் தல விருட்சமாக மயில் கொன்றை என்று அழைக்கப்படும் வாகை மரம் உள்ளது.
இந்த மரத்தில் குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தாலிக்கயிறை இந்த மரத்தில் கட்டினால் உடனடியாக அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது இன்றளவும் ஐதீகமாக உள்ளது.
மேலும், கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.
- கோவில் புற்றின் இடது புறத்தில் காவல் தெய்வங்கள் உள்ளன.
- வெளியில் நடராஜர், மாரியம்மன் சிலைகள் உள்ளன.
கோவில் அமைப்பு
இக்கோவில் புற்றின் இடது புறத்தில் வீரன், சூரன், உக்கிரன், ரணவீரன், அதிவீரன், வீரபத்திரன், பாவாடை ராயன், சங்கிலி கருப்பன், கருப்பன், முத்து கருப்பன், வேதாளம் போன்ற காவல் தெய்வங்களும்,
வெளியில் நடராஜர், மாரியம்மன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
கோவிலின் உட்பிரகாரத்தில் வரசித்தி விநாயகர் அன்னபூரணி, கோபால விநாயகர், தலவிருட்சம் (மயில் கொன்றை) ஆகியவைகளும்,
வெளிப்பிரகாரத்தில் பாவாடைராயன், மயானக்காளி, அம்மனின் பாதம், கங்கையம்மன், படுத்த நிலையில் உள்ள பெரியாயி அம்மன் ஆகியவையும் உள்ளன.
- அம்மனுக்கு நான்கு திருக்கரங்கள் இருக்கின்றன.
- அம்மனுக்கு முன்பாக புற்று உள்ளது.
மேல் மலையனூர் அங்காளம்மன்-அம்மன் உருவ விளக்கம்
மேல் மலையனூர் அங்காளம்மன் சிம்ம வாகனத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்ற (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.
அம்மனுக்கு நான்கு திருக்கரங்கள் இருக்கின்றன.
வலக்கரங்களில் உடுக்கை, கத்தி, இடக்கையில் கபாலம், திரிசூலம் ஏந்தி இடக்காலை மடித்து, வலக்காலால் பிரம்மனின் தலையை மிதித்தவாறு காட்சி தருகிறார்.
பீடத்தின் கீழே பிரம்மனின் 4 முகங்களும் உள்ளன.
அருகில் சிவபெருமான் சிறிய உருவத்தில் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார்.
அம்மனுக்கு முன்பாக புற்று உள்ளது. (அம்மன் முதலில் புற்றுருவாக இருந்தார் என்பதற்கு சாட்சியாக இன்றும் உள்ளது)
அம்மன் நாக வடிவில் உள்ளார் என்று இன்றளவும் பக்தர்களாலும், பூசாரிகளாலும் நம்பப்பட்டு வருகிறது.
நம்பியவர்களுக்கு மட்டுமே அம்மன் பாம்பு உருவில் காட்சி தருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த புற்றின் வடிவம் அம்மன் காலை நீட்டி உட்காந்திருப்பது போல் உள்ளது.
இந்த இடத்தில் இருந்து எடுக்கும் மண் பக்தர்களுக்கு பிரசாதமாகவும், அத்துடன் மஞ்சள், குங்குமம் வைத்து வழங்கப்படுகின்றன.
- ஆடி Q8 இ டிரான் சீரிஸ் ஒன்பது வித்தியாசமான நிறங்களில் கிடைக்கின்றன.
- ஆடி Q8 இ டிரான் சீரிஸ் மாடல்கள் இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.
ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் தனது Q8 இ-டிரான் மற்றும் Q8 ஸ்போர்ட்பேக் இ டிரான் மாடல்களுக்கான முன்பதிவை கடந்த வாரம் துவங்கியது. இரு மாடல்களுக்கான முன்பதிவு கட்டணம் ஐந்து லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், இரு மாடல்களும் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
புதிய ஆடி Q8 இ டிரான் சீரிஸ் விலை ரூ. 1 கோடியே 14 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. புதிய ஆடி Q8 இ டிரான் மாடல் எஸ்.யு.வி. மற்றும் ஸ்போர்ட்பேக் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கின்றன. இத்துடன் ஒன்பது வித்தியாசமான வெளிப்புற நிறங்கள், மூன்று இன்டீரியர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.
அதன்படி மெடைரா பிரவுன், க்ரோனோஸ் கிரே, கிளேசியர் வைட், மிதோஸ் பிளாக், பிளாஸ்மா புளூ, சொனெரியா ரெட், மேக்னெட் கிரே, ஸ்லாம் பெய்க் மற்றும் மேன்ஹேட்டன் கிரே நிறங்களிலும், இன்டீரியரை பொருத்தவரை ஒகாபி பிரவுன், பியல் பெய்க் மற்றும் பிளாக் நிற ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன.
ஆடி Q8 இ டிரான் மாடல் 95 கிலோவாட் ஹவர் மற்றும் 114 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இவை முறையே 340 ஹெச்.பி. பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 408 ஹெச்.பி. பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் வழங்கப்படும் 170 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது, காரை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 31 நிமிடங்களே ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.
விலை விவரங்கள்:
ஆடி Q8 50 இ டிரான் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம்
ஆடி Q8 50 ஸ்போர்ட்பேக் இ டிரான் ரூ. 1 கோடியே 18 லட்சத்து 20 ஆயிரம்
ஆடி Q8 55 இ டிரான் ரூ. 1 கோடியே 26 லட்சத்து 10 ஆயிரம்
ஆடி Q8 55 ஸ்போர்ட்பேக் இ டிரான் ரூ. 1 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- ஆடி மாதம் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும்.
- சிவன் திரி சூலத்தால் கொன்று அரக்கனை அழித்தார்.
பவுர்ணமி தினத்தன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில் அனுஷத்திலும் பவுர்ணமி அமையும்.
ஆடி மாதம் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம், பூர்வ ஆஷாடம் என்பது `பூராடம்' என்றும், உத்தர ஆஷாடம் என்பது `உத்தராடம்' என்றும் சொல்லப்படுகிறது.
உத்திர ஆஷாடத்தில் பவுர்ணமி வரும் ஆடி மாதத்தை வட மொழியில் `ஆஷாடீ' என்று சொல்வார்கள். அதுவே தமிழில் `ஆடி' என்று மருவி விட்டது. ஆடி மாதம் தோன்றியதற்கு இன்னொரு கதையும் கூறப்படுகிறது.
ஆடி என்னும் அரக்கன் ஒருமுறை அம்பிகை இல்லாத நேரத்தில் சிவபெருமான் உறைந்துள்ள கயிலாய மலைக்கு வந்தான். பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை அப்போது அங்கு காவலுக்கு இருந்தாள். அவளது காவலை மீறி கயிலாய மலை உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்து, பாம்பு வடிவில் புகுந்தான்.
சிவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் அந்த ஆடி அரக்கன் பார்வதியாக உருமாறினான். எல்லாம் அறிந்த சிவன், அசுரன் வந்திருப்பதை அறிந்தாலும், ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார்.
அன்பு மொழி பேசி அருகில் அழைத்தார். அரக்கன் சிவனை நெருங்கியதும். திரி சூலத்தால் கொன்று அரக்கனை அழித்தார். சிவ மகாபுராணத்தில் இந்த அரக்கனின் வரலாறு இடம் பெற்றுள்ளது.
தன்னுடைய உருவ வடிவில் வந்தவன் என்பதால், தேவி அவனிடம் இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள். இதனால் அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே `ஆடி' என்ற பெயர் ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அம்பிகை மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்ற வழக்கம் ஏற்பட்டது.
- வால்வோ மற்றும் ஆடி நிறுவனங்களும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளன.
- மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை அறிமுகம் செய்கிறது.
ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு புதிய கார் மாடல்கள் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் பெரும்பாலான மாடல்கள் ஆடம்பர பிரிவில் நிலைநிறுத்தப்பட இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் CNG மாடல், டொயோட்டா ருமியன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட மாடல்கள் வரும் மாதத்தில் அறிமுகமாகின்றன.
ஆடம்பர பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி மாடலின் இரண்டாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே போன்று வால்வோ மற்றும் ஆடி நிறுவனங்களும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா பன்ச் CNG:
ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்திலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் CNG மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் புதிய பன்ச் CNG மாடலில் டுவின் சிலின்டர் செட்டப் வழங்கப்பட இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் GLC:
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை ஆகஸ்ட் 9-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கார் GLC 300 பெட்ரோல் மற்றும் GLC 220d டீசல் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.
ஆடி Q8 இ டிரான்:
ஆகஸ்ட் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆடி Q8 இ டிரான் மாடல் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் எஸ்யுவி மற்றும் கூப் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கும். முந்தைய மாடல் போன்றே, ஆடி Q8 இ டிரான் 50 மற்றும் 55 என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 95 கிலோவாட் ஹவர் மற்றும் 114 கிலோவாட் ஹவர் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.
டொயோட்டா ருமியன்:
டொயோட்டா நிறுவனம் இரண்டு மாருதி சுசுகி கார்களின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒன்று மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட ருமியன் எம்பிவி மாடல் ஆகும். டொயோட்டா நிறுவனம் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் எம்பிவி மாடலை விற்பனை செய்யாத நிலையில், இது அந்நிறுவனத்திற்கு சாதமாக இருக்கும் என்று தெரிகிறது.
வால்வோ C40 ரிசார்ஜ்:
வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் வால்வோ C40 ரிசார்ஜ் எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் இதன் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஆடி நிறுவனத்தின் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் அறிமுகமாகிறது.
- புதிய ஆடி Q8 இ டிரான் மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன.
ஆடி Q8 இ டிரான் மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 18-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. புதிய Q8 இ டிரான் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஆடி Q8 இ டிரான் விலை ரூ. 1 கோடியே 32 லட்சம் முதல் ரூ. 1 கோடியே 35 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
புதிய Q8 இ-டிரான் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில் சரவுன்ட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், மெஷ் டிசைன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆடியின் புதிய மோனோக்ரோம் லோகோ வழங்கப்பட்டு உள்ளது. கிரில் பகுதியின் மேல்புறத்தில் லைட் பார் உள்ளது.
இந்த காரின் முன்புற பம்ப்பர் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு, சற்றே அளவில் பெரிய ஏர் இன்டேக்குகளை கொண்டிருக்கிறது. இந்த காரில் 114 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும்.
புதிய ஆடி Q8 இ டிரான் மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை ஒருங்கிணைந்து 408 ஹெச்பி பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்