search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth"

    • ராஜேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது அதனை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் ராஜேஷ் (வயது 28). டிப்ளமோ படித்த இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது பெற்றோர் இறந்துவிட்டனர்.

    இதனால் ராஜேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது அதனை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக திப்பணம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தனது சகோதரி மாரீஸ்வரி வீட்டில் வசித்து வந்த இவர், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார், ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மிருதொட்டி மண்டலம் மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா, கவுதம் (வயது 3) தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    போச்சையா மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில் போச்சையா உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார் . அவரால் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை.

    இதனால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தனது மகன்களை விற்பனை செய்ய முடிவு செய்தார். அவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசி வந்தார் .

    இது குறித்து குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் போச்சையா வீட்டிற்கு வந்தனர்.

    அவரிடம் இருந்து 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் குழந்தைகள் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    போச்சயாவை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். குழந்தைகளை விற்றாலும் அல்லது வாங்கினாலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குழந்தை இல்லாத பெற்றோர்கள் வழிகாட்டு முறைகளை பின்பற்றி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தூத்துக்குடி தாளமுத்து நகர் கோவில்பிள்ளை விளையை சேர்ந்தவர் பிரவீன் குமாருக்கும், அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • மதன்குமார், செல்வம் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீன் குமார் தலையில் சரமாரியாக வெட்டினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் கோவில்பிள்ளை விளையை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது21). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பிரவீன்குமார் மீதும் வழக்குகள் போலீஸ் நிலையங்களில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோவில்பிள்ளை விலையில் இருந்து அருகில் உள்ள வேலாயுதபுரத்தில் வசித்து வருகின்றார்.

    கத்திக்குத்து

    இந்நிலையில் நேற்று மாலை கிருஷ்ணராஜபுரம் சேதுபாதைரோடு, நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பிரவீன் குமார் வரும்போது, மற்றொரு வாகனத்தில் வந்த கோவில் பிள்ளை விளையைச் சேர்ந்த மதன்குமார்(25), செல்வம் (26) ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீன் குமார் தலையில் சரமாரியாக வெட்டினர்.

    இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிரவீன்குமார் கீழே விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    2 பேர் கைது

    இது குறித்து வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜ், ரத்தினவேல் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மதன்குமார், செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மதன்குமார் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கங்களுடன் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் பெயர் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஆபத்தான “பைக்” ரேசில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
    • சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

    மதுரை

    மதுரையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்ல வசதியாகவும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை-நத்தம் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சுமார் ரூ.615 கோடி செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் பாலத்தில் ஐயர் பங்களா, திருப்பாலை பகுதிகளில் இறங்குவதற்கு வசதியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி களுக்கும், நத்தம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பகல் நேரங்களில் அதிக அளவில் செல்லுகிறது.

    ஆனால் இரவு நேரங்களில் சொற்ப அளவி லேயே கார், இருசக்கர வாகனங்கள் பறக்கும் பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் பறக்கும் மேம்பால பகுதிகளில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடை பெறுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணிகளிலும் ஈடுபடு கிறார்கள். பறக்கும் மேம்பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்வதால் சாலைகளில் சாகசம் செய்பவர்களின் அட்டகாசமும் அவ்வப் போது அறங்கேறி வருகிறது. அதிவேகத்தில் பைக் ரேஸ் சென்று அந்த காட்சிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிட்டு அதிக 'லைக்' களை பெறுவதும் இளசுகளின் தெளியாத கனவாக உள்ளது. இளம்பெண்களும் பாலத்தின் மையப் பகுதிகளிலிருந்து நடனமாடி அதனை சமூக வலைத்த ளங்களில் வெளியிடுவதும் சமீப காலமாக டிரெண்டாகி வருகிறது.

    இதனை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நத்தம் பறக்கும் மேம்பா லத்தில் நான்கு இரு சக்கர வாகனங்களில் வாலிபர்கள் அதிவேகத்தின் சைரன் ஒலிக்க முன்பக்க சக்கரத்தை உயரே தூக்கிய படி அதிவேகத்தில் சென்று சாகசம் என்ற பெயரில் அபாயகரமான பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

    இது அந்த வழியாக வாகனத்தில் சென்ற வர்களை கடும் பீதிக்கு உள்ளாக்கியது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் இந்த பைக் ரேஸ் இளைஞர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.

    இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். இந்த நிலையில் பறக்கும் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வது சமூக விரோத செயலாகும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதனை மீறி தொடர்ந்து மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் தேவை யின்றி வாகனங்களை நிறுத்துவது பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசம் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, பாலத்தின் மேலே அமர்ந்து கொண்டு கேக் வெட்டுவது, பாலத்தின் இருபுறங்களில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்து பொழுது போக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

    • அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சாந்தனுவை சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • படுகாயம் அடைந்த பிரீத்திக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி ராம்சந்திரா. கல்லூரி மாணவியான இவர் நேற்று தனது உறவினர் ஒருவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். பெருங்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இவர்களை அதே பகுதியை சேர்ந்த சாந்தனு லட்சுமன் ஜாதவ் (வயது 22) என்ற வாலிபர் வழிமறித்து தனது கையில் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் இருவரையும் தாக்கினார். இதில் பிரீத்தியுடன் வந்த வாலிபர் காயம் அடைந்தார். உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓடியதும், சாந்தனு, பிரீத்தியை துரத்தி சென்று சரமாரியாக வெட்டினார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சாந்தனுவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த பிரீத்திக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சாந்தனு ஓட, ஓட விரட்டி பிரீத்தியை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயனர்கள் கண்டன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • குடி போதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் தீபன் (35). பெயிண்டிங் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் பவானி சாகர் அரசு தொடக்கப்பள்ளிக்கு தனது மகனை பார்க்க வந்தார்.

    அப்போது அவர் குடி போதையில் இருந்தார். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவரை பள்ளிக்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதையடுத்து அவர் ஆசிரியர்களை ஆபாசமாக பேசி னார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பவானி சாகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பள்ளியில் ஆசிரியரிடம் தகராறு செய்த தீபனை வெளியே செல்லுமாறு கூறினர். ஆனால் தீபன் வெளியே செல்ல மறுத்து தகராறு செய்தார்.

    இதை தொடர்ந்து குடி போதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை மோட்டார் சைக்கிளுடன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் தீபன் திடீரென தனக்கு தானே பாட்டிலால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் கிழித்துக் கொண்டார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று வந்தார்.

    போலீசாரை குடி போதையில் தீபன் ஆபாசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தீபன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதை தொடர்ந்து தீபன் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு போன் செய்து தகாத வார்த்தையால் பேசி, 'காலை என்ன செய்கிறேன் பார்' என கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இது குறித்து பள்ளி தலைைம ஆசிரியர் பவானி சாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலைமறைவான தீபனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • ஒரு கட்டத்தில் குடிபோதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.
    • போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட தீபன் தனக்கு தானே பாட்டிலால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் சிறிது கிழித்துக் கொண்டார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் தீபன் (35). பெயிண்டிங் தொழிலாளி. இவர் நேற்று மாலை 4.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பவானி சாகர் அரசு தொடக்கப்பள்ளிக்கு தனது முதல் மனைவிக்கு பிறந்த 3-ம் வகுப்பு படிக்கும் மகனை பார்க்கச் சென்றார்.

    அப்போது குடி போதையில் இருந்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். அப்போது ஆசிரியர்களை ஆபாசமாக பேசி திட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பவானி சாகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு போலீஸ்காரர்கள் சண்முகம், செல்லமுத்து ஆகியோர் சென்றனர். அவர்கள் பள்ளியில் ஆசிரியரிடம் தகராறு செய்த தீபனை வெளியே செல்லுமாறு கூறினர். ஆனால் தீபன் வெளியே செல்ல மறுத்து போலீசார் மற்றும் மற்ற குழந்தைகளின் பெற்றோருடனும் தகராறு செய்தார்.

    ஒரு கட்டத்தில் குடிபோதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டினார். மேலும் ஒருமையில் பேசி "சட்டையை கழற்றி விட்டு என்னுடன் சண்டைக்கு வா" என்றும் ஆபாசமாக பேசினார். இதனால் பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளுடன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட தீபன் திடீரென தனக்கு தானே பாட்டிலால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் சிறிது கிழித்துக் கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று இரவே தீபன் வீடு திரும்பினார்.

    போலீசாரை குடி போதையில் தீபன் ஆபாசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • வெளியே சென்ற பாலகிருஷ்ணன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • பள்ளத்தில் நீரில் மூழ்கி பாலகிருஷ்ணன் இறந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் அறிய சாந்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன்(39). இவரது மனைவி அந்தோணி அம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    தவிட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் பாலகிருஷ்ணன் வேலை பார்த்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி மது அருந்தி மீன் பிடிக்க செல்வது வழக்கம். அதேப்போல் சம்பவத்தன்று வெளியே சென்ற பால கிருஷ்ணன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஆர்.வி.எஸ்.நகர் அருகே மந்தக்காடு பகுதியில் உள்ள பள்ளத்தில் நீரில் மூழ்கி பாலகிருஷ்ணன் இறந்தது தெரிய வந்தது.

    அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாளை காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல கூறி அனுப்பி வைத்தனர்.
    • போதை ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கூத்தன்குடி பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் ஜெயக்குமார் (வயது 36). கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு திட்டக்குடியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தினார். அளவுக்கு அதிகமாக குடித்ததால் தடுமாறியபடி மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.

    அப்போது திட்டக்குடி-ராமநத்தம் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த ஜெயக்குமாரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஜெயக்குமார், சம்மந்தமில்லாதவைகளை பேசினார்.

    தொடர்ந்து போலீசார் அவர் மீது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளை இயக்கி வந்த பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரால் மோட்டார் சைக்கிளை இயக்க முடியாது என்பதால், ஜெயக்குமாரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். நாளை காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல கூறி அனுப்பி வைத்தனர்.

    போதையில் தள்ளாடிய படி வீட்டிற்கு நடந்து சென்ற ஜெயக்குமார், திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் வந்தார். அங்கிருந்த மரவாடியில் இருந்த மரங்களை எடுத்து சாலையில் குறுக்கே வைத்தார். மரவாடியில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து நடுரோட்டில் போட்டு அமர்ந்தார்.

    அவ்வழியே வந்த வாகனங்கள், இந்த சாலையில் செல்லமுடியாமல் தடுத்து நிறுத்தினார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சாலையில் இருந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து ஜெயக்குமாருக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    சமீப காலமாக திட்டக்குடி பகுதியில் உள்ள இளைஞர்கள் மது போன்ற பல்வேறு போதைப் பொருட்களை உட்கொண்டு இரவு நேரங்களில் ரகளை, அராஜகம் செய்வது வாடிக்கையாகி வருகிறது. இது போன்ற போதை ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மன வேதனையுடன் நண்பர்களிடம் கூறி உள்ளார்.
    • குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் தவிப்பில் உள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த காட்டுப் பள்ளிதுறைமுக விரிவாக்க திட்டத்திற்கு இடம் அளித்ததற்காக 2009-ம் ஆண்டு காட்டுப் பள்ளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 140 பேருக்கு பணி வழங்கப்பட்டது. அவர்கள் தற்காலிக பணியாளர்களாக பணி அமர்த்தப்பட்ட நிலையில் நிரந்தர பணி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த நித்தியா (33) என்பவர் உள்பட 11 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரையும் சந்தித்து புகார் மனு அளித்து உள்ளனர்.

    இதற்கிடையே நித்யா (33) உள்பட 4 பேர் கடலில் மீன் பிடிக்க படகில் சென்றனர். அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மன வேதனையுடன் நண்பர்களிடம் கூறி உள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி கடலுக்குள் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் நித்யாவை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர் கடலில் மூழ்கினார். அவரை தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில் காட்டுப்பள்ளி கிராமமக்கள் ஏராளமானோர் திரண்டு துறைமுக நுழைவாயில் அருகே ஊராட்சித் தலைவர் சேதுராமன் தலைமையில் திரண்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நித்யாவின் பணிநீக்கத்துக்கு காரணமான துறைமுக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆவடி காவல் சரக துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கடலில் விழுந்து மாயமான நித்யாவை படகுகள் மூலம் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது கதி என்ன ஆனது? என்பது தெரியாததால் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் தவிப்பில் உள்ளனர். இது தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ராமச்சந்திரன் ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருந்தார்.
    • நேற்றிரவு வீட்டில் ராமச்சந்திரன் இருந்த அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் பூட்டி இருந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையா புரம் வீரநாயக்கன்தட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 28). ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருந்தார்.

    நேற்றிரவு வீட்டில் ராமச்சந்திரன் இருந்த அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் பூட்டி இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் மாடத்தி ஜன்னல் வழியாக பார்த்த போது மகன் ராமச்சந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து முத்தையா புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூக்கன் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மதுரையில் தி.மு.க. இளைஞரணி பொதுக்கூட்டம் நடந்தது.
    • 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேச்சாளர்கள் விளக்கி பேசினர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பேரூர் இளைஞரணி சார்பில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் இளைஞரணி செயலாளர் பிரபு தலைமை தாங்கினார்.

    அவை தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், அலங்காநல்லூர் சேர்மன் ரேணுகாஈஸ்வரி, பேரூர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகை மருதுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க.அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேச்சாளர்கள் விளக்கி பேசினர்.

    ×