search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wrong relationship"

    கலசப்பாக்கம் அருகே கணவனின் கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் காரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் பூஜா (வயது 21).

    இவருக்கும், போளூர் பொத்தரை பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பச்சையப்பன் (25) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    பச்சையப்பன் கட்டுமான சாரம் கட்டும் தொழிலாளி. இந்த நிலையில், இவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருங்கி பழகினர். பச்சையப்பனின் கள்ளக்காதல் விவகாரம், மனைவி பூஜாவிற்கு தெரிய வந்தது. தகாத உறவை விடும்படி கணவனை வற்புறுத்தினார். எனினும் கள்ளக்காதலியுடன் பச்சையப்பன் தொடர்பில் இருந்தார். மனைவி மீது வெறுப்படைந்தார்.

    இதனால் பச்சைப்பன், பூஜாவின் இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர்.

    நள்ளிரவும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலிக்காக வெறிப்பிடித்ததை போல் மாறிய பச்சையப்பன் மனைவியை சரமாரியாக அடித்து உதைத்தார்.

    இதில், படுகாயமடைந்த பூஜா வீட்டிற்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அதற்குள், பச்சையப்பன் சம்பவ இடத்தில் இருந்து ஓடி விட்டார். பூஜா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக, போளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, இன்று காலை பூஜாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய பச்சையப்பனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஓட்டப்பிடாரம் வாலிபர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்க நாயக்கன்பட்டியை சேர்ந் தவர் சொர்ணமணி. இவரது மனைவி கலையரசி. இவர்களது மகன் உதயகுமார் (வயது 29). இவர் அக்க நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கோழிக்கடை நடத்தி வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாஷாதேவி என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு கனிஷ்காவும்(4), 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

    இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாஷாதேவி கணவரை பிரிந்து கோவில்பட்டி மந்திதோப்பில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இதையடுத்து கனிஷ்கா உதயகுமாருடனும், மற்றொரு குழந்தை மாஷாதேவியுடனும் வசித்து வருகின்றனர். உதயகுமார் இரவில் கடை அருகிலேயே படுத்து தூங்கி விடுவார். இதே போல் கடந்த 13-ந் தேதி இரவு கடையை அடைத்துவிட்டு கடை அருகில் தூங்கினார்.

    இந்நிலையில் கோழிக்கடை முன்பு உதயகுமார் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின்பேரில், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு திருஞான சம்பந்தன் தலைமையில் புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் ஞான்ராஜ், மணியாச்சி இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கோழிக்கடை உரிமையாளரை கொலை செய்த கும்பலை பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வந்தனர்.

    தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில் உதயகுமாருக்கும், மாஷா தேவிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இருவரது வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்ற நிலையில் திடீரென மாஷாதேவி போக்கில் மாற்றம் ஏற்பட்டது.

    இது உதயகுமாருக்கு தெரியவந்ததும் மனைவியை கண்காணித்தார். அப்போது மாஷாதேவிக்கு அக்க நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி உதயகுமார் மனைவியிடம் கேட்டபோது அவர் மறுத்துள்ளார். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாஷாதேவி தனது 2-வது குழந்தையை தூக்கி கொண்டு கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதில் மனவேதனை அடைந்த உதயகுமார் அந்த வாலிபரை கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். இதை தெரிந்து கொண்ட மாஷா தேவி தனது கள்ளக்காதலனிடம் விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து கள்ளக்காதலன் உதயகுமாரை கொலை செய்தது தெரியவந்தது.

    இந்நிலையில் போலீசார் அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த கள்ளக்காதலனான மின்சார வாரியத்தில் டவர் அமைக்கும் பணியில் சப் காண்டிராக்டராக பணியாற்றி வரும் ரஞ்சித்குமார் (28) என்பவரை இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

    எனக்கும் மாஷா தேவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இது உதயகுமாருக்கு தெரியவந்ததும் அவர் என்னை கண்டித்தார். இதைத்தொடர்ந்து மாஷா தேவி தனது தாய் வீடான மந்திதோப்புக்கு வந்து விட்டார். எனினும் உதயகுமார் என்னை தொடர்ந்து கண்டித்து வந்தார்.

    மேலும் அவர் என்னை கொலை செய்ய திட்ட மிட்டதும் தெரியவந்தது. எனவே அவர் என்னை கொலை செய்வதற்கு முன்பு நான் முந்தி கொண்டு அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். நேற்று முன்தினம் கடை முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்த உதயகுமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாமக்கல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வியாபாரியை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி, பெருமாப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கொக்கி கிருஷ்ணன் (வயது 47). இவர் கிழங்கு வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 21-ந்தேதி கொக்கி கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம் கிராமத்தில் மரூர்பட்டி செல்லும் வழியில் முட்புதரில் வீசப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கொக்கி கிருஷ்ணன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து கண்டுபிடிக்க போலீசார் பொட்டணம் கிராமத்திற்கு சென்று உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியபோது, ஆத்துக்குழிப்பள்ளம் பகுதியை சேர்ந்த சந்திரா (47) என்பருக்கும், கொக்கி கிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக போலீசார், ஆத்துக்குழிப்பள்ளம் பகுதிக்கு சென்று சந்திராவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கொக்கி கிருஷ்ணனும், சந்திராவும் சேந்தமங்கலம், நாமக்கல், கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிழங்கு வியாபாரம் செய்து வந்தனர். இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சந்திராவின் கணவர் கடந்த ஆண்டு திடீரென மரணம் அடைந்தார். இதனால் சந்திரா தனிமையில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே அவர் கிழங்கு வியாபாரம் தொடர்பாக கொக்கி கிருஷ்ணனுடன் பேசி பழகி வந்தார். நாளடைவில் இது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

    கொக்கி கிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்திரா வீட்டிற்கு வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கொக்கி கிருஷ்ணன் வியாபாரம் நிமித்தமாக வெளியூர் சென்றபோது, அங்கு வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதனால் சந்திரா வீட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டார். இது பற்றி கேட்க அவர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அழைப்பை ஏற்கவில்லை. செல்போன் அழைப்பை துண்டித்து விட்டார்.

    இதற்கிடையே சந்திராவுக்கு, அதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

    கடந்த மாதம் 20-ந்தேதி கொக்கி கிருஷ்ணன் திடீரென சந்திரா வீட்டிற்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த அவரிடம், ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். அதற்கு சந்திரா முடியாது. நீ வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் வைத்துள்ளாய். என்னுடைய வீட்டிற்கு இனிமேல் வராதே என்று கூறினார்.

    இதனால் கொக்கி கிருஷ்ணன் அவருடன், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். உடனே உதவிக்கு சந்திரா, பக்கத்தில் வசித்து வரும் கள்ளக்காதலன் வடிவேலை அழைத்து வந்தார். வீட்டில் வைத்து தகராறு கடுமையாக ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சந்திரா, வடிவேல் இருவரும் சேர்ந்து கொக்கி கிருஷ்ணனை கட்டையால் தாக்கினர். தலையிலும் தாக்கி ,கீழே தள்ளினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த கொக்கி கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர், இறந்து விட்டதை அறிந்த இருவரும் என்ன செய்வதென தெரியாமல் பதறினர்.

    நடந்த இந்த சம்பவம் குறித்து திருமலைப்பட்டியில் வசித்து வரும் தனது மகள் புவனேஸ்வரிக்கு தெரிவித்து, உடனே வீட்டிற்கு வருமாறு கூறினார். மகள் புவனேஸ்வரியும், இரவோடு இரவாக புறப்பட்டு தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு பிணமாக கிடந்த கொக்கி கிருஷ்ணனை ஒரு சாக்குமூட்டையில் கட்டி ஒரு மொபட்டில் வைத்து, தாயும், மகளும் நேராக கொண்டு சென்றனர். பின்னால் வடிவேல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். மரூர்பட்டி செல்லும் வழியில் முட்புதரில் உடலை போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு, எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு சென்று விட்டனர்

    இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சந்திரா உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் அவரை போலீசார் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரது மகள் புவனேஸ்வரி மற்றும் வடிவேல் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். #tamilnews
    கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கள்ளக்காதல் மூலம் பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பாறமுக்கு காலனி பகுதியை சேர்ந்தவர் ரின்ஷா (வயது 24).

    இவருக்கு திருமணமாகி விட்டது. கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இவர் அக்கம், பக்கத்தினரிடம் அதிகமாக பேசி பழகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து குழந்தையின் அழு குரல் கேட்டது. பிறகு சிறிது நேரத்தில் அது ஓய்ந்து விட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் ரின்ஷாவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு குழந்தை இறந்து கிடந்தது. கையில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் ரின்ஷா உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    இதுபற்றி போலீசுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் வீட்டில் இறந்து கிடந்த குழந்தையின் பிணம் கைப்பற்றப்பட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த குழந்தை ரின்ஷாவுக்கு பிறந்தது என்பதும், குழந்தை பிறந்த உடனேயே அது கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கணவரை பிரிந்து தனியாக வசித்துவந்த ரின்ஷாவுக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு அதன்மூலம் அவர் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த ரின்ஷாவுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததும் அதை மறைப்பதற்காக பெற்ற குழந்தையையே கழுத்தை நெரித்து கொன்று விட்டு கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

    தற்போது ரின்ஷா தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவருக்கு சிகிச்சை முடிந்த பிறகுதான் அவரது கள்ளக்காதலன் யார்? என்பது பற்றி தெரிய வரும். ரின்ஷா மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #tamilnews
    கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை குத்தி கொலை செய்த கணவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேளச்சேரி:

    பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் வசித்து வருபவர் ஐய்யப்பன். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஜெயஸ்ரீ (10), வர்ஷினி (8) ஆகிய 2 மகள்கள் உள்ளன.

    நேற்று இரவு குழந்தைகள் ஜெயஸ்ரீ, வர்ஷினி ஆகியோர் வெளியே விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு போட்டு இருந்தது. இதுபற்றி அவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். உடனே பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது சுகந்தி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது சுகந்தி கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுகந்தியின் கணவர் ஐய்யப்பன் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. விசாரணையில் கள்ளக்காதலில் ஈடுபட்ட சுகந்தியை அவர் கத்தியால் குத்தி கொன்று விட்டு வீட்டை பூட்டி தப்பியது தெரியவந்தது.

    சுகந்திக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த ஐய்யப்பன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். ஆனால் சுகந்தி கள்ளக் காதலை கைவிட வில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஐய்யப்பன் மனைவியை கொன்றுள்ளார்.

    தப்பி ஓடிய ஐய்யப்பனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சேலையூரில் வாகன சோதனையின் போது போலீசாரிடம் ஐய்யப்பன் சிக்கினார். அவரை பிடித்து பள்ளிக்கரணை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மனைவியை கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    சேர்ந்தமரம் அருகே கள்ளத் தொடர்பு குறித்து போலீசில் புகார் செய்ததால் மன முடைந்த விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சொக்கம்பட்டி அருகே உள்ள புன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 52), விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் குருசாமிக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தகராறு ஏற்பட்டு, குருசாமி மீது, சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளனர். இதனால் சொக்கம்பட்டி போலீசார் விசாரணைக்கு வருமாறு குருசாமியை தேடி வந்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்த குருசாமி, சேர்ந்த மரம் அருகே உள்ள வலசை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.

    அங்கு தனது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்து விட்டதே என்று மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் வலசை உறவினர் வீட்டில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தண்டராம்பட்டில் வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை, கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தென்முடியனூர் ஊராட்சி நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பங்காரு. இவரது மகன் செல்வம் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனா (21). கடந்த சில நாட்களாக செல்வம் சென்னைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சவுந்தரபாண்டியன் (25) என்ற வாலிபருடன் மீனாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கே வரவழைத்து மீனா உல்லாசமாக இருந்துள்ளார்.

    செல்வம் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்னை சென்றார். இரவில் வீட்டில் தனியாக இருந்த மீனாவை சந்திக்க கள்ளக்காதலன் சவுந்தரபாண்டியன் வந்தார். 2 பேரும் தனிமையில் இருந்ததால் படுக்கையில் உல்லாசமாக இருந்தனர்.

    சென்னைக்கு வேலை சென்ற கணவன் செல்வம் நள்ளிரவு 1 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, வீட்டிற்குள் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்தார்.

    வீட்டுக்குள் புகுந்த செல்வம் அரிவாளை எடுத்து 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அவர்கள் பலத்த காயமடைந்து அலறினர். அக்கம், பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து செல்வத்தை சமரசம் செய்தனர்.

    பின்னர், 2 பேரையும் மீட்டு தண்டராம்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தலையில் பலத்த வெட்டு விழுந்ததில் மீனாவின் நிலைமை கவலைகிடமாக இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கள்ளக்காதலன் சவுந்தரபாண்டியன் தனியார் ஆஸ்பத்திரிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுதொடர்பாக, தென்முடியனூர் கிராம நிர்வாக அலுவலர் சம்பத் அளித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து செல்வத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பொம்மிடி அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பாப்பிரெட்டிபட்டி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த கும்பாரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி சாந்தி (வயது 47). விடுதலை சிறுத்தை கட்சியின் தருமபுரி மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருந்தார்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாதையன் இறந்து விட்டார். இவர்களுக்கு அஸ்வினி (வயது 27) என்ற மகளும், நவீன்குமார் (23) என்ற மகனும் உள்ளனர். இதில் அஸ்வினிக்கு திருமணமாகி புதுப்பட்டியில் வசித்து வருகிறார்.

    கும்பாரஹள்ளியில் சாந்தி புதிய வீடு கட்டி வந்ததால், தனது மகனுடன் பி.துறிஞ்சிப்பட்டியில் உள்ள ஒருவரது வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தார்.

    கடந்த மாதம் 10-ந் தேதி சாந்தி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மகன் நவீன்குமார் தலையிலும் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. மர்ம நபர்கள் கொன்றுவிட்டு சென்றதாக தலையில் காயத்தை ஏற்படுத்தி அவர் நாடகமாடி வந்தார். பொம்மிடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, சாந்தியின் வீட்டிற்கு வெளி ஆட்கள் அடிக்கடி வந்து சென்று உள்ளனர். அவருக்கு பலருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்து உள்ளது.

    இதை மகன் நவீன்குமார் கண்டித்து உள்ளார். அவரது தாயார் சாந்தி கேட்கவில்லை. இதனால் அவரை கொன்றுவிட்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் வந்து தாயாரை கொன்றதாக நாடகமாடிய நவீன்குமாரை நேற்று மாலை பொம்மிடி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை பாப்பிரெட்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கடந்த 20 நாட்களாக நவீன்குமார் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தலையில் அரிவாள் மனையால் வெட்டப்பட்ட காயம் இருந்தது. இதனால் அவருக்கு 2 இடங்களில் ஆபரேசன் நடத்தப்பட்டது. ஆபரேசன் முடிந்து உடல்நிலை தேறியதைத்தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    தாயை கொன்றது ஏன் என்பது குறித்து நவீன்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    என் தாயார் பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்து இருந்தார். பல பேர் அவரை அடிக்கடி வீட்டுக்கு வந்து சந்திப்பார்கள். இதை நான் கண்டித்தேன். அவர் கேட்கவில்லை. இதனால் எனக்கும், என் தாயாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்படும்.

    சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அரிவாள் மனையால் என் தாயார் என்னை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் தலையணையை என் தாய் முகத்திலும், நெஞ்சிலும் வைத்து அழுத்தி கொன்றுவிட்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்து உள்ளதாக தெரிகிறது. 

    கள்ளக்காதல் தகராறில் வாலிபரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). ராஜேசுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேசுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

    இதில் ராஜேசின் மனைவி, கணவரை பிரிந்து கீழ்குளத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்நிலையில் ராஜேஷ் குழந்தைகளை பார்க்க கீழ்குளத்திற்கு சென்றார். அங்கு அவர் மனைவி வீட்டுக்கு சென்றபோது, வாலிபர் ஒருவர் ராஜேசை வழிமறித்து சரமாரியாக தாக்கினார். இதில் ராஜேஷ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி ராஜேஷ் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதில் கீழ்குளத்தில் தங்கியிருந்த குழந்தைகளை பார்க்க சென்றேன். அப்போது என்னை மனைவியின் கள்ளக்காதலன் வழிமறித்து தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சனல்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இந்திரமணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கே.வி.குப்பம் அருகே தகராறின்போது கள்ளக்காதலனை விடுவிப்பதற்காக கணவரின் மர்ம உறுப்பை, மனைவி கடித்து துண்டாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் ஊராட்சி துரைமூலை கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை (வயது 50), தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (40). துரைமூலை கிராமத்தில் ஆடி மாதத்தையொட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் தெருக்கூத்து நடைபெற்றுள்ளது.

    தெருக்கூத்து பார்த்துவிட்டு செந்தாமரை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனது மனைவி ஜெயந்தியுடன், அதே பகுதியை சேர்ந்த கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி (30) என்பவர் இருந்துள்ளார். இதனால் செந்தாமரை, ஜெயந்தி, தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் கணவர் செந்தாமரையிடம் இருந்து, கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தியை விடுவிக்க ஜெயந்தி தனது கணவரின் மர்ம உறுப்பை கடித்துள்ளார். இதில் மர்ம உறுப்பு பாதி துண்டானது. இதனால் அவர் அலறியுள்ளார். அதற்குள் தட்சிணாமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். செந்தாமரையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் உடனடியாக செந்தாமரையை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்னை பூந்தமல்லி அருகே விபத்தில் சிக்கியது. இதில் காயம் அடைந்த செந்தாமரை மற்றும் உறவினர் ஜானகி உள்ளிட்டோர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து ஜெயந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தப்பி ஓடிய தட்சிணாமூர்த்தியை தேடி வருகிறார்.

    கள்ளக்காதலனை விடுவிக்க கணவனின் மர்ம உறுப்பை, மனைவி கடித்து துண்டாக்கிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    அரியலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே  உள்ள சிறுகடம்பூர் மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 40). இவரது மனைவி ஜெயா (32). இந்த தம்பதிக்கு ஜெயபால் (7) என்ற மகனும், ஜெயஸ்ரீ (6), தன்யஸ்ரீ (4) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

    கோவையில் கூலி வேலை பார்த்து வந்த துரைராஜ் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது முதல் அவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. அதற்கேற்றாற்போல் இரு தினங்களுக்கு முன்பு அவரது மனைவி ஜெயா செல்போனில் நீண்ட நேரம் ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

    ரகசியமாக விசாரித்ததில் ஜெயாவுக்கும். அதே ஊரைச்சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு  இருந்தது தெரியவந்தது. இதையடுத்து துரைராஜ் தனது மனைவியை கண்டித்தார். எனவே கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவும் தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த துரைராஜ் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் வீட்டின் வெளியே கட்டிலை போட்டு தூங்க சென்றார்.

    இன்று காலை துரைராஜ் கட்டில் போடப்பட்டிருந்த இடத்தின் அருகேயுள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.  இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள்  உடையார்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய துரைராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக துரைராஜின் உடலில் கழுத்து, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் தென்பட்டன. எனவே அவரை யாரோ அடித்துக்கொலை செய்து விட்டு அதனை மறைப்பதற்காக தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    மேலும் இன்று காலை முதல் துரைராஜின் மனைவி ஜெயா தலைமறைவாகி விட்டார். எனவே அவர்தான் கணவரை கொன்று விட்டு தலைமறைவாகி விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் ஜெயாவை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டுக்கல் அருகே கள்ளத் தொடர்பு பிரச்சினையில் பெண் தற்கொலை செயது கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுககல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 61). இவர் நெடுஞ்சாலைத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜோதிலெட்சுமி (34). இவர்களுக்கு சஞ்சீவ் (12) என்ற மகன் உள்ளார்.

    தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆறுமுகம் மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் ஜோதிலெட்சுமி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று மகன் பள்ளிக்கு சென்ற பிறகு வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். மாலையில் வீடு திரும்பிய மகன் தனது தாயின் நிலையை பார்த்து கதறி அழுதான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    ஆறுமுகத்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவியிடம் விவாகரத்து பெற்று விட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிலெட்சுமியை திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். கணவர் இறந்த பிறகு ஜோதிலெட்சுமி வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து வந்தார். அவருக்கு வேறு யாருடனாவது பழக்கம் இருந்ததா? எனவும் தனது மகனை விட்டு விட்டு எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரது செல்போன் எண்களை வைத்து வேறு யாருடனும் தொடர்பில் இருந்தாரா? எனவும் போலீசார் விசரித்து வருகிறார்கள்.

    ×