search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vck party"

    பாகூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர்:

    பாகூர் சிவன் கோவில் அருகே டீக்கடை பகுதியில் கடந்த 3 நாட்களாக விடுதலை சிறுத்தை கட்சி கொடியுடன் தமிழக பதிவெண் கொண்ட கார் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் மாட்டு பொங்கலையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது யாரோ மர்ம நபர்கள் நிறுத்தப்பட்ட இருந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததம் பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தொடர்ந்து கார் அங்கு நிறுத்தப்பட்டால் பிரச்சினை ஏற்படலாம் என கருதி அந்த காரை கிருமாம்பாக்கம் போலீஸ் நிலைய வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.

    தொடர்ந்து அந்த கார் யாருக்கு சொந்தமானது, கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    காரைக்குடி,

    காரைக்குடி பெரியார் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சினைக் கண்டித்தும், அதற்காக அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இளையகவுதமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நில உரிமை மீட்பு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் தமிழேந்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் கணேசன், காரைக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் சேசு ராஜேந்திரன் உள்பட கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை மற்றும் சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நிறைவுற்ற நிலையில் அவர்கள் திடீரென பஸ் மறியலுக்கு முயன்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்து அனுப்பி வைத்தனர். அதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனை சந்தித்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
    முகநூலில் வைகோவை பற்றி வன்னியரசு கூறிய கருத்து கட்சியின் கருத்து அல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #vanniarasu #vaiko

    சென்னை:

    தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்த வைகோவிடம், திராவிட கட்சிகள் தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகோ பதில் அளிக்கும் போது, தலித்துகளுக்கு எதிராக என்னை சித்தரிக்க நினைக்கிறீர்கள். அது நடக்காது. எங்கள் வீட்டில் வேலை செய்பவர் கூட தலித்துதான் என்று கூறினார்.

    வைகோவின் இந்த பதிலுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தனது முகநூலில் பதில் அளித்தார்.

    தலித் குறித்த கேள்விக்கு வைகோ நேர்மையாக எதிர் கொள்ளவில்லை. அவர் சொன்ன வார்த்தை ஆதிக்க மனோநிலையில் இருந்து கூறியது போல உள்ளது. இதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.


    இது குறித்து திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முகநூலில் வைகோவை பற்றி வன்னியரசு கூறிய கருத்து கட்சியின் கருத்து அல்ல, அதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டேன். அதனால் உடனடியாக நீக்கி விட்டார்

    வைகோவின் உதவியாளருக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தேன். அதன் பின்னரும் வைகோ கூறிய கருத்து அதோடு தொடர்புடையதாக தெரியவில்லை.

    2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவருடைய இல்லத்துக்கு வரும்படி அழைத்தார், தேர்தலுக்காக உதவி செய்தார் அதற்காக நான் அவருக்கு நன்றியும் தெரிவித்தேன். அது வெறும் வெளிப்படையான ஒரு கருத்து. அதில் ஒளிவு மறைவு இல்லை.

    ஆனால் வன்னியரசு எழுதிய பதிவிற்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது.எதன் அடிப்படையில் வைகோ பேசினார் என்பது தெரியவில்லை. என் மீது உள்ள கோபமாஅல்லது வன்னியரசுவின் கருத்திற்கு பதிலா என்று தெரியவில்லை.

    அரசியல் தரம் தாழ்ந்த அரசியல் செய்பவன் திருமாவளவன் அல்ல. என்னை கடுமையாக விமர்சித்தவர்களை கூட நான் விமர்சிப்பதில்லை. அப்படியே என்னுடைய விமர்சனங்களை சொல்ல வேண்டுமென்றால் கூட அது தைரியமாக தெரிவிப்பேன். அந்த துணிச்சல் என்னிடம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #vanniarasu #vaiko

    சீர்காழி அருகே கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே சட்டநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் 10-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி உள்ளனர்.     

    இதுகுறித்து தகவல் அறிந்த கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா தலைமையில் நிர்வாகிகள் ஆடலரசு, ஜீவா, தீபன்ராஜ், ராமமூர்த்தி உள்பட கட்சியினர் ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு சென்று சேதமடைந்த கொடிக்கம்பத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் கட்சியினர், கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்து சட்டநாதபுரம் மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3-வது முறையாக சட்டநாதபுரத்தில் உள்ள கட்சி கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்தும், சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி கொக்கம்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிதம்பரம்-மயிலாடுதுறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    திருமாவளவன் பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகரில் 7 நாட்களில் 5 ஆயிரம் பனைமர விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நட்டனர்.
    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேசம் காப்போம் என்ற பெயரில் 1 லட்சம் பனைமர விதைகள் நடும் பணி கடந்த 17-ந்தேதி முதல் தொடங்கியது. 

    திருச்சி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 17-ந்தேதி பழைய சுற்றுலா மாளிகை காலனி அருகில் இதன் தொடக்க  விழா மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் கே.என்.அருள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு பகுதி வாரியாக நடைபெற்றது. ஏர்போர்ட், ஜங்ஷன், தில்லைநகர், ஸ்ரீரங்கம், பாலக்கரை என அனைத்து பகுதிகளிலும் சாலையோ ரங்கள், வாய்க்கால் ஓரங்களில் பனைமர விதைகள் நடப்பட்டன. 7-வது நாளாக 25-ந்தேதி மலைக்கோட்டை பகுதியில் திருச்சி மாநகர் இலக்கான 5 ஆயிரம் பனைமர விதை நடும் இலக்கு எட்டப்பட்டது. 

    மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணை தலைவர்  ந.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வக்கீல் அருள், அச்சு ஊடக மைய பிரிவு துணை செயலாளர் ரமேஷ் குமார், மாவட்ட பொருளா ளர் சந்தனமொழி, தொகுதி செயலாளர் கனியமுதன் மற்றும்நிர்வாகிகள் லாரன்ஸ், வெற்றிச்செல்வன், ஆல்பர்ட், பன்னீர் செல்வம், காந்திமார்க்கெட் செல்வக் குமார், முடியரசு, ராஜா, ராதா, குணா, ஜான்,தங்கராஜ், முருகன், செந்தில், இருசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    காவிரி ஆற்றின் கரைகளில் நடப்படும் இந்த பனைமர விதைகள் எதிர்காலத்தில் வெள்ளக்காலங்களில் சேதம் ஏற்படாமல் தடுக்கும்  என நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த 7 நாட்களில் திருச்சி மாநகரில் 5 ஆயிரம் பனைமர விதைகள் நடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் வக்கீல் அருள் தெரிவித்தார்.
    விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

    விருத்தாசலம்:

    விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் அய்யாயிரம், வெங்கடேசன், மாநில நிர்வாகிகள் குரு, நீதிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.

    இதில் மாநில நிர்வாகிகள் செம்மல், முத்தையன், தொகுதி துணை செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் சுப்புஜோதி, தாமோதரன், வேல்முருகன், சந்தோஷ்குமார், ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் நகர பொருளாளர் முருகன் நன்றி கூறினார். இதில் வருகிற 17-ந் தேதி அன்று பிறந்தநாள் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளில் அனைத்து கிளைகள் தோறும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவதுடன், கடலூர் மேற்கு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் பனை கன்றுகளை நடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பொம்மிடி அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பாப்பிரெட்டிபட்டி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த கும்பாரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி சாந்தி (வயது 47). விடுதலை சிறுத்தை கட்சியின் தருமபுரி மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருந்தார்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாதையன் இறந்து விட்டார். இவர்களுக்கு அஸ்வினி (வயது 27) என்ற மகளும், நவீன்குமார் (23) என்ற மகனும் உள்ளனர். இதில் அஸ்வினிக்கு திருமணமாகி புதுப்பட்டியில் வசித்து வருகிறார்.

    கும்பாரஹள்ளியில் சாந்தி புதிய வீடு கட்டி வந்ததால், தனது மகனுடன் பி.துறிஞ்சிப்பட்டியில் உள்ள ஒருவரது வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தார்.

    கடந்த மாதம் 10-ந் தேதி சாந்தி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மகன் நவீன்குமார் தலையிலும் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. மர்ம நபர்கள் கொன்றுவிட்டு சென்றதாக தலையில் காயத்தை ஏற்படுத்தி அவர் நாடகமாடி வந்தார். பொம்மிடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, சாந்தியின் வீட்டிற்கு வெளி ஆட்கள் அடிக்கடி வந்து சென்று உள்ளனர். அவருக்கு பலருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்து உள்ளது.

    இதை மகன் நவீன்குமார் கண்டித்து உள்ளார். அவரது தாயார் சாந்தி கேட்கவில்லை. இதனால் அவரை கொன்றுவிட்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் வந்து தாயாரை கொன்றதாக நாடகமாடிய நவீன்குமாரை நேற்று மாலை பொம்மிடி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை பாப்பிரெட்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கடந்த 20 நாட்களாக நவீன்குமார் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தலையில் அரிவாள் மனையால் வெட்டப்பட்ட காயம் இருந்தது. இதனால் அவருக்கு 2 இடங்களில் ஆபரேசன் நடத்தப்பட்டது. ஆபரேசன் முடிந்து உடல்நிலை தேறியதைத்தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    தாயை கொன்றது ஏன் என்பது குறித்து நவீன்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    என் தாயார் பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்து இருந்தார். பல பேர் அவரை அடிக்கடி வீட்டுக்கு வந்து சந்திப்பார்கள். இதை நான் கண்டித்தேன். அவர் கேட்கவில்லை. இதனால் எனக்கும், என் தாயாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்படும்.

    சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அரிவாள் மனையால் என் தாயார் என்னை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் தலையணையை என் தாய் முகத்திலும், நெஞ்சிலும் வைத்து அழுத்தி கொன்றுவிட்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்து உள்ளதாக தெரிகிறது. 

    சீர்காழி அருகே மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இறால் குட்டைகளை அப்புறப்படுத்தக்கோரி நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த கீராநல்லூர் கிராமத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இறால் குட்டைகளை அப்புறப்படுத்தக்கோரி நாளை (7-ந்தேதி)முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் மா.ஈழவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சீர்காழி வட்டம் திருக்கருக்காவூர் ஊராட்சி கீராநல்லூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு அனுமதியின்றி தனியார் ஒருவர் இறால் குட்டை அமைத்து வருகிறார். ஏற்கனவே நிலத்தடிநீர் மட்டம் குறைந்து குடிதண்ணீர் உப்புநீராக மாறியுள்ளதால் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு சுமார் 2 கி.மீ. தூரம் சென்று குடிநீர் குடங்களில் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். 

    இந்த சூழ்நிலையில் இறால் குட்டைகள் அமைப்பதினால் சுமார் 2கி.மீ தூரத்தில் கிடைக்க கூடிய தண்ணீரும் உப்பு நீராக மாறி பொதுமக்களின் வாழ்வாதாரமே கேள்விகுறியாகி விடும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிப்பதற்கும்,மற்ற தேவைகளுக்கும் குடிநீர் வழங்கவேண்டும் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் மயிலாடுதுறை சப்-கலெக்டரிடம் மனு அளித்து தீர்விற்காக காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் அனுமதியின்றி இறால் குட்டைகள் அமைக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் நாளை கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×