search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி, கள்ளக்காதலனை வெட்டிய கணவன்
    X

    வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி, கள்ளக்காதலனை வெட்டிய கணவன்

    தண்டராம்பட்டில் வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை, கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தென்முடியனூர் ஊராட்சி நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பங்காரு. இவரது மகன் செல்வம் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனா (21). கடந்த சில நாட்களாக செல்வம் சென்னைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சவுந்தரபாண்டியன் (25) என்ற வாலிபருடன் மீனாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கே வரவழைத்து மீனா உல்லாசமாக இருந்துள்ளார்.

    செல்வம் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்னை சென்றார். இரவில் வீட்டில் தனியாக இருந்த மீனாவை சந்திக்க கள்ளக்காதலன் சவுந்தரபாண்டியன் வந்தார். 2 பேரும் தனிமையில் இருந்ததால் படுக்கையில் உல்லாசமாக இருந்தனர்.

    சென்னைக்கு வேலை சென்ற கணவன் செல்வம் நள்ளிரவு 1 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, வீட்டிற்குள் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்தார்.

    வீட்டுக்குள் புகுந்த செல்வம் அரிவாளை எடுத்து 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அவர்கள் பலத்த காயமடைந்து அலறினர். அக்கம், பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து செல்வத்தை சமரசம் செய்தனர்.

    பின்னர், 2 பேரையும் மீட்டு தண்டராம்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தலையில் பலத்த வெட்டு விழுந்ததில் மீனாவின் நிலைமை கவலைகிடமாக இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கள்ளக்காதலன் சவுந்தரபாண்டியன் தனியார் ஆஸ்பத்திரிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுதொடர்பாக, தென்முடியனூர் கிராம நிர்வாக அலுவலர் சம்பத் அளித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து செல்வத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×