search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளத் தொடர்பு குறித்து போலீசில் புகார்- விவசாயி தூக்குபோட்டு தற்கொலை
    X

    கள்ளத் தொடர்பு குறித்து போலீசில் புகார்- விவசாயி தூக்குபோட்டு தற்கொலை

    சேர்ந்தமரம் அருகே கள்ளத் தொடர்பு குறித்து போலீசில் புகார் செய்ததால் மன முடைந்த விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சொக்கம்பட்டி அருகே உள்ள புன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 52), விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் குருசாமிக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தகராறு ஏற்பட்டு, குருசாமி மீது, சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளனர். இதனால் சொக்கம்பட்டி போலீசார் விசாரணைக்கு வருமாறு குருசாமியை தேடி வந்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்த குருசாமி, சேர்ந்த மரம் அருகே உள்ள வலசை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.

    அங்கு தனது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்து விட்டதே என்று மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் வலசை உறவினர் வீட்டில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×