search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Bengal"

    • பாரம்பரிய உடையணிந்து, மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவர்.
    • நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும்.

    மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற கிழக்கு மாநிலங்களில், 'துர்க்கா பூஜை' என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. எருமைத் தலை கொண்ட மகிஷாசுரனை, துர்க்கா தேவி வதம் செய்து வெற்றி கொண்ட தினமான விஜயதசமி, மேற்குவங்காள மக்களின் முக்கியமான திருவிழாவாகும்.

    விநாயகர் சதுர்த்தியைப் போன்று. இந்த விழாவின் போது, மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதன்கீழ், துர்க்கை அம்மனின் சிலைகள் நிறுவப்படும். நவராத்திரி விழாக்களின் போது மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு மாநில மக்கள். பாரம்பரிய உடையணிந்து, மாலை நேரத்தில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவார்கள்.

    இந்த நவராத்திரி நாட்களில் வண்ணமயமான கலாசார நிகழ்வுகள் நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும். பத்தாம் நாளில், நவராத்திரி கொலு வைக்கப்பட்ட துர்க்கை சிலைகள் அனைத்தும் பல்வேறு பகுதிகளிலும் ஊர்வலமாகக் கொண்டு சென்று, பின்னர் அதனை கடலில் கரைப்பார்கள்.

    • திருமணத்திற்கு முன்பு நிலவை பரிசளிப்பதாக மனைவிக்கு வாக்குறுதி.
    • லூனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மஹாட்டோ. இவர் தனது மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை ரூ. 10 ஆயிரத்திற்கு வாங்கியதாக அவர் தெரிவித்து உள்ளார். மேலும் திருமணத்திற்கு முன்பு நிலவை பரிசளிப்பதாக சஞ்சய் தனது மனைவியிடம் வாக்குறுதி அளித்து இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.

    இதுபோன்ற பரிசை வாங்க வேண்டும் என்ற ஆசை, இந்தியா நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் தான் வந்தது என்று சஞ்சய் மேலும் தெரிவித்தார். சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற பிறகு, தன்னால் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை செய்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

     

    நானும், எனது மனைவியும் நீண்ட காலம் காதலித்து, கடந்த ஏப்ரல் மாதம் தான் திருமணம் செய்து கொண்டோம். நான் அவரிடம் நிலவை கொண்டுவருவதாக தெரிவித்து இருந்தேன். ஆனால், என்னால் அப்படி செய்ய முடியவில்லை. தற்போது எங்களது திருமணத்திற்கு பிறகு வந்த அவளின் முதல் பிறந்தநாளில், நான் அவருக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளிக்க வேண்டும் என நினைத்தேன்," என்று சஞ்சய் மஹாட்டோ தெரிவித்து உள்ளார்.

    தனது நண்பர் உதவியுடன், லூனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியதாக சஞ்சய் தெரிவித்தார். இதற்கான வழிமுறைகள் நடைபெற்று முடிய ஒரு ஆண்டுகாலம் ஆனதாக அவர் மேலும் தெரிவித்தார். நிலம் வாங்கியதற்கான பதிவு சான்றையும் சஞ்சய் மஹோட்டா தன்னிடம் வைத்திருக்கிறார்.

    முன்னதாக 2020 ஆண்டு வாக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரை சேர்ந்த நபர் தர்மேந்திர அனிஜா, தனது மனைவிக்கு நிலவில் மூன்று ஏக்கர் நிலத்தை பரிசாக கொடுத்தார். தனது எட்டாது திருமண நாளை கொண்டாடும் வகையில், மனைவிக்கு நிலவில் நிலத்தை பரிசளித்ததாக அவர் தெரிவித்து இருந்தார்.

    • மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் உயர்த்தப்பட்டது.
    • மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்காள எம்.எல்.ஏ.-க்கள் சம்பளம் குறைவாக இருந்தது.

    மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அதன்படி மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    எனினும், முதலமைச்சரின் வருவாயில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மம்தா பானர்ஜி மேலும் தெரிவித்து இருந்தார்.

    "மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகத் தான் அவர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 40 ஆயிரம் என்று உயர்த்தப்படுகிறது" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து மசோதாக்களையும் கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார்
    • பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் போன்றவற்றில் ஆளுநர் தொடர்ந்து தலையிட்டால் நிதியை தடுத்து நிறுத்துவோம்

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து இடையூறு செய்து வரும் நிலையில், பல்வேறு செயல்களில் தொடர்ந்து குறுக்கிட்டால், ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    மேற்கு வங்காள மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து மசோதாக்களையும் கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார். பள்ளிகள், கல்லூரிகள் போன்ற விவகாரங்களிலும் தலையிடுகிறார். பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் போன்றவற்றில் ஆளுநர் தொடர்ந்து தலையிட்டால் நிதியை தடுத்து நிறுத்துவோம். மாநில அரசின் நிர்வாகத்தை முடக்க நினைக்கும்ஆளுநருக்கு எதிராக, ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்.

    இங்கே ஒரு கவுரவ கவர்னர் உட்கார்ந்து இருக்கிறார். அவர் கல்லூரி, பல்கலைக்கழகங்களை தனியாக பார்ப்பேன் என்கிறார். நடுராத்திரியில் பல்கலைக்கழக துணைவேந்தர் மாற்றப்படுவதை எங்கேயாவது கேட்டிருப்பீர்களா?. ஒரேநாள் இரவில் முன்னாள் ஐ.பி.எஸ், முன்னாள் நீதிபதியை கொண்டு வந்துள்ளார். தன்னை ஜமீன்தார் என்று நினைத்து எல்லாவற்றையும் செய்கிறார்.

    உங்களுடைய கட்டளைக்கு ஏதாவது கல்லூரி, பல்கலைக்கழகங்கள் கீழ் படிந்தால், நிதி வழங்குவதில் முட்டுக்கட்டை ஏற்படுத்துவேன். அதன்பின் துணை வேந்தருக்கு எப்படி சம்பளம் வழங்குகிறீர்கள் என்று பார்ப்போம். பேராசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பீர்கள் என்று பார்க்கிறேன். இங்கே ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி உண்டு. இதில் சமரசம் கிடையாது'' எனத் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஏழு பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால துணை வேந்தர்களை மாநில அரசின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் நியமித்தார். இதில் இருந்து மோதல் போக்கு அதிகமாகியுள்ளது.

    • ஜனநாயகத்தில், ஒரு மாநிலத்தின் முன்முகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிதான்
    • ஒவ்வொருவருக்கும் லட்சுமணன் ரேகை எனப்படும் எல்லை உள்ளது. அதை தாண்டக்கூடாது

    இந்தியாவில் பா.ஜனதா ஆளாத மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்களுக்கும், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் கவர்னர்களுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது.

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கும் முன்னாள் கவர்னர் ஜெக்தீப் தன்கர் இடையே கடும் மோதல் இருந்தது. பின்னர் ஒரு வழியாக ஜெக்தீப் தன்கர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு மாற்றலாகி சென்றார்.

    தற்போது சி.வி. ஆனந்தா போஸ் மேற்கு வங்காள மாநில கவர்னராக இருந்து வருகிறார். இவருக்கும் மம்தாவுக்கும் இடையிலும் மோதல் போக்கு இருந்து வருகிறது.

    ஆளுநருக்கு அதிகாரம் அதிகமா? முதல்வருக்கு அதிகமா? என்ற விவாதம் மேலோங்கி நிற்கும் நிலையில், பிடிஐ செய்தி நிறுவனம் சி.வி. ஆனந்தா போஸிடம் பேட்டி கண்டது.

    அப்போது சி.வி. ஆனந்தா போஸ் கூறியதாவது:-

    கவர்னரின் மதிப்பிற்குரிய அரசியல் சாசனத்தின்படி முதலமைச்சர், கவர்னரின் சகா. ஜனநாயகத்தில், ஒரு மாநிலத்தின் முன்முகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிதான். நியமனம் செய்யப்பட்ட கவர்னர் அல்ல.

    ஒரு கவர்னராக, நான் மாநில அரசு என்ன செய்கிறதோ, அதற்கு ஒத்துழைப்பேன், ஆனால், என்ன செய்தாலும் அதற்கெல்லாம் ஒத்துழைக்க மாட்டேன். ஒவ்வொருவரும் அவர்களுடைய களத்தில் பணியாற்ற வேண்டும்.

    ஒவ்வொருவருக்கும் லட்சுமணன் ரேகை என்படும் எல்லை உள்ளது. அதை தாண்டக்கூடாது. மேலும், முக்கியமானது. மற்றவர்களுக்காக லட்சுமணன் ரேகை தீட்டக்கூடாது. அதுதான் கூட்டாட்சி தத்துவம்'' என்றார்.

    முன்னதாக, மம்தா பானர்ஜி அரசியலமைப்பு விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியலமைப்பு அல்லாத செயலுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 250 ஆண்டுகள் பழமையான ஜமீந்தர் குடும்பத்தின் அரண்மனைகளில் ஒன்றாகும்.
    • 1781-ம் ஆண்டில் மகாராஜா ஜாய்நாராயண் கோஷல் பகதூரால் கட்டப்பட்டது.

    காயத்ரி மந்திர், புகைலாஷ் என்பது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். அங்கு சுற்றிலும் ஏராளமான போஜ்புரி பேசும் மக்கள் வசிக்கும் இடம். புகைலாஷ் எஸ்டேட் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் பழமையான ஜமீந்தர் குடும்பத்தின் அரண்மனைகளில் ஒன்றாகும். இது புகைலாஸ் ராஜ்பரி என்று அழைக்கப்படுகிறது. முழு பகுதியும் 100 பிகாஸ் நிலப்பரப்பில் பரவி இருந்தது, ஆனால் கிடர்போர் கப்பல்துறை விரிவாக்கம் காரணமாக சொத்து குறைக்கப்பட்டது.

    ஒரு குளத்தின் கரையில், ரக்தா-கமலேஷ்வர் மற்றும் கிருஷ்ணா-சந்திரேஷ்வர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரட்டை சிவன் கோயில்கள் 1781-ம் ஆண்டில் மகாராஜா ஜாய்நாராயண் கோஷல் பகதூரால் கட்டப்பட்டது. இரண்டு பெரிய சிவலிங்கங்கள் ஒவ்வொன்றும் சுமார் 11 அடி உயரம் கொண்டவை. இங்குள்ள கோவில் அமைப்பு கடந்த காலத்தை நினைவுபடுத்தும் புகைலாஷ் ஜமீன்தார்களின் காலத்து கோயில் கட்டிடக்கலையை நினைவுபடுத்துகிறது. இது வங்காளத்தின் பொதுவான கோவில்களின் வடிவமைப்பே ஆகும்.

    ஜாய்நாராயண் கோஷல் (1752-1821) கோபிந்தபூரில் பிறந்தார் மற்றும் சமஸ்கிருதம், இந்தி, பெங்காலி, அரபு, பாரசீகம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நன்கு புலமை பெற்றவர். அவர் பாட்னா, முர்ஷிதாபாத், டாக்கா மற்றும் பர்த்வான் ஆகிய மாகாண சபைகளுக்கு சேவை செய்ய நவாப் முபாரக் தவுலத்தால் பரிந்துரைக்கப்பட்டார். அவர் டெல்லி பேரரசர் முகமது ஜஹந்தர் ஷாவிடமிருந்து அரச மானியம் பெற்றார் மற்றும் மகாராஜா பகதூர் என்ற பட்டத்தை வழங்கினார். அருகாமையில் உள்ள கல்வெட்டு படி, அவர் போலீஸ் சூப்பிரண்டு ஜான் ஷேக்ஸ்பியரின் காலத்தில் ஒரு கண்காணிப்பாளராகவும் இருந்தார் மற்றும் ராஜா ராம்மோகன் ராய் மற்றும் ஈஸ்வர்சந்திர வித்யாசாகர் ஆகியோருடன் இணைந்து நற்பணி செயல்களில் ஈடுபட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜமீந்தர் அரண்மனை சிதிலமடைந்து சில தூண்கள் மற்றும் உள் முற்றம் மற்றும் நஹபத்-கானா ஆகியவை கடந்த காலத்தை நினைவுபடுத்துகின்றன. 1782-ம் ஆண்டு கட்டப்பட்ட துர்கா தேவியின் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள் முற்றத்தில் அமைந்துள்ளது.

    மேலும் சாதக் ராம்பிரசாத் இந்த கோவிலுக்கு விஜயம் செய்ததாக நம்பப்படுகிறது, மேலும் அவர்தான் புகைலாஷ் அல்லது பூமியில் உள்ள கடவுள்களின் இருப்பிடம் என்று பெயர் சூட்டினார். மறுசீரமைப்பு திட்டத்தில் இரண்டு கோயில்கள் மட்டுமின்றி, பெரிய குளம் மற்றும் சுற்றுப்புறமும் புனரமைக்கப்பட்டது. இரண்டு கோவில்களுக்கு இடையே பெரிய நந்தி காளை சிலை வைக்கப்பட்டது.

    தற்போது ஆட்சல சிவன் கோவில்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த சிவலிங்கங்கள் உள்ளன. கிழக்கே உள்ள லிங்கத்திற்கு ரக்தகமலேஷ்வர் என்றும், மேற்கு லிங்கம் கிருஷ்ணசந்தனேசுவரர் என்றும் பெயர். இரண்டு கோயில்களும் உயர்ந்த சிவலிங்கங்கள், கிருஷ்ணசந்தனேசுவருடன், ரக்தகமலேஷ்வரரை விட சற்று உயரமாக உள்ளது. சிவலிங்கங்கள் இந்தியாவிலேயே மிக உயரமானவை என்று கோவில் தளத்தில் பலகை கூறுகிறது.

    கோவில் வளாகத்தின் பெரிய பகுதியில் சிவகங்கா என்ற பெரிய ஏரி உள்ளது. புதிதாக கட்டப்பட்ட சுவரில் பழைய மாத்திரைப் பெட்டிகளும், தெற்கே உள்ள குவிமாடப் பந்தல் ஜெய்நாராயண் கோசலின் சிலையும் உள்ளன. புகைலாஷ் ராஜ்பரி சாலையின் மறுபுறத்தில் அமைந்துள்ளது.

    தாழ்வாரத்தின் வழியாக நுழைவது இப்போது தடுக்கப்பட்டுள்ளது மற்றும் உட்புறங்களை ஒரு பக்க நுழைவாயில் வழியாக அணுகலாம். நுழைவாயில் பல கோயில்களுடன் வரிசையாக ஒரு பெரிய முற்றத்திற்கு செல்கிறது. இடதுபுறம் மிகப்பெரிய நடன மண்டபம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, கூரை நீண்ட காலமாக இடிந்து விழுந்தது. இந்த வளாகத்தில் இரண்டு சிறிய பீரங்கிகளும் உள்ளன.

    வலதுபுறத்தில் கோசல் குடும்பத்தின் குலதெய்வமான ஸ்ரீ ஸ்ரீ பதிதா பபோனி துர்கா மந்திர் உள்ளார். மகிசாஷுர்மர்தினி தோரணையில் உள்ள துர்க்கை தெய்வம் மற்றும் எட்டு உலோகங்கள் (அஷ்டதாது) கலவையால் ஆனது. ஜெய்நாராயண் கோசால் கட்டப்பட்ட ராஜ்பரி வளாகம் 1782-ம் ஆண்டிற்கு முந்தையது மற்றும் அதன் சில பகுதிகள் இன்னும் கோசல் குடும்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

    கோவிலின் உட்புறச் சுவர்களில் ஒரு பெரிய செப்புப் தகடு ஜெய்நாராயண் கோசலின் வாழ்க்கைக் கதையை பாரசீக மற்றும் ஆங்கிலத்தில் விவரிக்கிறது. கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் வங்காள மொழியில் ஒரு சிறிய கல்வெட்டு, கோவிலை நிறுவியவரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைத் தருகிறது.

    ஆனால் இன்று ராஜ்பரி படப்பிடிப்பு நோக்கங்களுக்காக மற்றும் பல பெங்காலி தொடர்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலுக்கு கொல்கத்தாவின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்கள் அரிதாகவே வந்தாலும் உள்ளூர் மக்களை வெகுவாக ஈர்க்கிறது. சிவராத்திரியின் போது கோயில்களுக்கு உள்ளூர் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    • வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.
    • தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.

    மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார்.

    இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலைசெய்து அந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். அப்போது வேலை செய்யும் இடங்களில் தரப்படும் மீந்துபோன உணவை, வீட்டுக்கு எடுத்துவந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவந்துள்ளார்.

    அதில் பெரும்பாலும் அவருக்கென எதுவும் மிஞ்சாது. வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.

    வாழ்க்கையோட்டத்தில் அந்த வேலையை அவர் விட்டு விட்டபோதும், உணவுப் பழக்கம் மாறவில்லை. தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.

    கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவர் திட உணவு உட்கொள்ளவில்லை என்றபோதும், ஆரோக்கியமாகவே இருக்கிறார். முதலில் அந்த கிராமத்துக்காரர்களுக்கே இதுகுறித்து தெரியாமல் இருந்தது.

    தெரிந்தபிறகு அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். ஆனால் உரிய ஊட்டச்சத்துகள் கிடைத்தால் போதும்; திட உணவுதான் எடுக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.

    மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு, திரவ வடிவில்தானே உடலுக்குத் தேவையான ஊட்டம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இதனால் எந்த பாதகமும் இல்லைதானே என விரிவான விளக்கத்தையும் மருத்துவர்கள் அளிக்கிறார்கள்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு வந்தார்.
    • தற்போது மம்தாவுடன் சமரசம் செய்து கொள்ள பிரதமர் மோடி வருகிறார்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். ரூ.7800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் அவர், முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

    கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஹவுரா-நியூ ஜல்பாய்குரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் ஜோகா-தரதாலா இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில், பிரதமரின் மேற்கு வங்க பயணத்தை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது:

    ஒரு ரெயில் இயக்கத்தை நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பதை நாம் கேள்விப்பட்டதே இல்லை. நான் ரெயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளேன். ஆனால் எங்கள் ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங் எந்த ரெயில் இயக்கத்தையும் தொடங்கி வைத்ததில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை மந்திரி அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு வந்தார். தற்போது மம்தாவுடன் சமரசம் செய்ய பிரதமர் மோடி வருகிறார். இதனால் மம்தா மற்றும் அவரது கட்சியினருக்கு எதிரான சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையின் வேகம் குறையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • ரேசன் கார்டில் தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம்.
    • அதிகாரிகள் செய்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீகாந்தி தத்தா வேதனை

    கொல்கத்தா:

    நாட்டில் அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் ஆவணங்களில் எழுத்துப்பிழை வருவது சகஜம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, தவறை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால், சில நேரங்களில் சிறிய எழுத்துப்பிழைகூட மக்களின் கோபத்தையும், போராட்டத்தையும் தூண்டிவிடுவதாக அமைந்துவிடுகிறது. அவ்வாறு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர், தனது ரேசன் கார்டில் உள்ள எழுத்துப்பிழையை சரிசெய்யாத அதிகாரிகளை கண்டித்து வித்தியாசமான முறையில் எதிர்ப்பை பதிவு செய்தார்.

    ஸ்ரீகாந்தி தத்தா என்ற என்ற நபர், ரேசன் கார்டில் தன் பெயரை தவறுதலாக பிரின்ட் செய்யப்பட்டதை சரிசெய்யும்படி, அரசு அதிகாரியின் வாகனத்தை துரத்திச் சென்று நாய் போன்று குரைத்தார். தனது புகாரை ஏற்று பெயரை சரிசெய்யும்படி அந்த அதிகாரியிடம் கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    ஸ்ரீகாந்தி தத்தாவின் பெயரில் உள்ள தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம். குத்தா என்றால் இந்தியில் நாய் என்று பொருள். அதனால்தான் ஆத்திரத்தில் நாய் போன்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குரைத்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், "பெயரை திருத்துவதற்காக மூன்று முறை விண்ணப்பித்தேன். கடைசியாக விண்ணப்பித்தபோது ஸ்ரீகாந்தி குத்தா என பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. அதிகாரிகள் செய்த இந்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மீண்டும் விண்ணப்பிக்க சென்றபோது, வட்டார வளர்ச்சி இணை அதிகாரியைப் பார்த்ததும் அவர் முன்னால் நாயைப் போல் குரைக்க ஆரம்பித்தேன். அவர் என் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. எங்களைப் போன்ற சாமானியர்கள் வேலையை விட்டுவிட்டு இதுபோன்று பெயரை திருத்தம் செய்வதற்காக எத்தனை முறைதான் அலைவது?" என கேள்வி எழுப்பினார்.

    • இல.கணேசன் மேற்கு வங்காள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
    • புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் விரைவில் பதவியேற்க உள்ளார்

    புதுடெல்லி:

    மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கர் பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவர் போட்டியிடுவது பற்றி முறைப்படி அறிவிப்பு வெளியானதும், அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் மேற்கு வங்காள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆளுநரை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். விரைவில் புதிய ஆளுநர் பதவியேற்க உள்ளார்.

    • கூட்டத்தினரை கலைப்பதற்காக போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.
    • வன்முறை தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வைரலாகி வருகின்றன.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து பாஜக சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜகவினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டக்காரர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கிய சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தடுப்புகளை மீறி பாஜகவினர் முன்னேறியதால், கூட்டத்தினரை கலைப்பதற்காக போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது. வன்முறை தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    அதேபோல், தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கும் பெண் காவலரைப் பார்த்து பேசிய வார்த்தை சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. 'என்னை தொடாதீர்கள், நீங்கள் பெண், நான் ஆண்' என சுவேந்து அதிகாரி பேசும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டரில் பகிர்ந்து கிண்டல் செய்துள்ளது.

    போலீஸ் வேனில் அழைத்துச் செல்ல முயன்ற பெண் காவலரிடம் சுவேந்து இவ்வாறு பேசியதாக தெரிகிறது. நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்று கூறும் அவர் ஆண் காவலரை அழைக்கிறார். அதன்பின்னர் மூத்த அதிகாரி ஒருவர் வந்து சுவேந்துவை வேனுக்கு அழைத்து சென்றார். 

    • மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசைக் கண்டித்து பாஜக பேரணி நடத்தியது
    • தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக அறிவித்து இருந்தது. அதன்படி, போராட்டத்தில் பங்கேற்க மாநிலத்தின் பல இடங்களில் இருந்து பாஜகவினர் குவியத்தொடங்கினர். ஒவ்வொரு பகுதியில் இருந்தும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பல இடங்களில் ரெயில் நிலையங்களில் வைத்தே பாஜகவினர் தடுக்கப்பட்டதாக அக்கட்சி போலீசார் மீது குற்றம் சாட்டினர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஹவ்ரா பகுதியில் பாஜகவினர் பேரணியாக வந்தபோது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை மீறி பாஜகவினர் முன்னேறினர். கூட்டத்தினரை கலைப்பதற்காக, பேரணியாக வந்தவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அங்கு ஏற்பட்ட வன்முறையில் காவல் துறை வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.

    வன்முறையின்போது போலீஸ்காரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். காவலர் ஒருவரை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகின. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ×