search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weekly market"

    • கமுதி அருகே நத்தம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது.
    • வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி யில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக கலந்து கொண்டு காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இந்தவாரச்சந்தை கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டப்பட்டது. ஆனால் பேரூராட்சி நிர்வா கம் அதனை வியாபாரி களுக்கு வழங்குவதில் பார பட்சம் காட்டியதாக தெரிகி றது. மேலும் கடைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்ட ணத்தைவிட கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

    ஒப்பந்ததாரர்கள் வியாபாரிகளை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக கலெக்டர், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு இன்னல்கள் கார ணமாக அபிராமம் பகுதியில் வாரச்சந்தை நடத்துவதில் வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

    இதன் காரண மாக அபிராமம் அருகே உள்ள நத்தம் ஊராட் சிக்குட்பட்ட அபிராமம்-மதுரை சாலையில் வாரச் சந்தை நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்கு நத்தம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்க ளின் ஆதரவோடு தீர்மான மும் நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழ மையும் நத்தம் ஊராட்சியில் வாரச்சந்தை நடைபெறும் என ஊராட்சி மன்ற தலை வர் போத்தி தெரிவித்து உள்ளார்.

    அபிராமம் பேரூராட்சி யில் வாரச்சந்தை நிறுத்தப் பட்டதால் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது.

    • சிவகங்கை வார சந்தையில் முத்திரையிடாத எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சென்னை, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் IAS மற்றும் சென்னை, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லெட்சுமிகாந்தன் ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் யாஸ்மின்பேகம் மற்றும் அவர்களின் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரம ணியன் ஆலோசனையின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) முத்து தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வசந்தி, மகாலெட்சுமி முத்திரை ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் பொதுமக்கள் நலன் கருதி சிவகங்கை நகர் வாரச்சந்தையில் சட்டமுறை எடையளவுச்சட்டம் மற்றும் அதன் விதிகளின் கீழ் சிறப்பு கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    இக்கூட்டாய்வில் முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-23, மேஜை தராசு-11, விட்டத்தராசு-12, இரும்பு எடைகற்கள்-54, ஊ.அளவைகள் - 2 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள்-2 ஆக மொத்தம் 104 எடைய ளவைகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டன.

    முன்னதாக 25.08.2023 அன்று புளியடிதம்பம் மீன் மார்க்கெட்டில் கூட்டாய்வு மேற்கொண்டபோது, முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-7, மேஜை தராசு-2, விட்டத்தராசு - 10, இரும்பு எடைகற்கள்-10 ஆக மொத்தம் 29 எடைய ளவைகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டன.

    முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னனு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும், விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரையிட்டும், அதன் சான்றிதழை உடன் வைத்திருக்குமாறும், மேலும் பொட்டலப் பொருட்களில் பொருளின் பெயர், பொருளின் நிகர எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தயாரிப்பாளர் முழு முகவரி, நுகர்வோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகிய சான்றுரைகள் இடம் பெற்றிருக்க வேண்டும், இல்லையெனில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வணிகர்களை கேட்டுக்கொண்டார்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    • உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 42-வது ஆண்டு விழா உடன்குடியில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வியாபாரத்திற்கு இடையூறாக சாலைகளில் திரியும் கால்நடைகளை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 42-வது ஆண்டு விழா உடன்குடி யில் நடைபெற்றது.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவரும், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவருமான ரவி தலைமை தாங்கினார். வணிகர் சங்க பேரவையின் மாநில செயல் தலைவர் பா. விநாயகமூர்த்தி, மாநில பொதுச்செயலர் ராஜா, மாவட்ட செயலர் செந்தமிழ்செல்வன், பொன்ராஜ், துரைசிங், தமிழரசன், லிங்கம், அரசகுமார், சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணமந்திரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் ஆண்டறிக்கையை செயலர் வேல்ராஜனும், வரவு- செலவு அறிக்கையை பொருளாளர் சுந்தரும் வாசித்தனர்.

    கூட்டத்தில் உடன்குடி மெயின் பஜாரில் வியாபாரி களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஈருக்கும் புறக்காவல் நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும், வியாபாரத்திற்கு இடையூறாக சாலைகளில் திரியும் கால்நடைகளை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உடன்குடி வாரச்சந்தையை தினசரி சந்தையாக மாற்ற பேரூராட்சி நிர்வாகத்தை கேட்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் உடன்குடி கனரா வங்கிகிளை மேலாளர் தெய்வநாயகி, பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர் முகமது சலீம், சங்கத்தின் துணைத்தலை வர்கள் ஷேக் முகம்மது, அமுதன் அண்ட்ரூஸ், துணைச் செயலர்கள் ராஜா, பிரதீப் சரவணன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • வாரச்சந்தை கூடும் இடத்தை மாற்ற வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • தேவிபட்டினம் ரோடு, மகர் நோன்பு பொட்டல் போன்ற இடங்களில் வாரச்சந்தை அமைக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையத்தை விரி வாக்கம் செய்து புனர மைக்கும் நிலையில் வாரச் சந்தை கூடும் இடத்தை தற்காலிகமாக பட்டினம் காத்தான் பகுதிக்கு நகராட்சி மாற்றியுள்ளது.

    ராமநாதபுரம் நகரில் செயல்பட வேண்டிய வாரச் சந்தை தற்போது நகர் எல்லையை தாண்டி இருப்பதால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், வணிகர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாக மும், நகராட்சியும் பொது மக்களிடம் கருத்து கேட்டு மாற்று இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவிபட்டினம் ரோடு, மகர் நோன்பு பொட்டல் போன்ற இடங்க ளில் வாரச்சந்தை அமைக்க லாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராமமக்கள் பயன்பெறும் வகையில்,புதன்கிழமை தோறும் செயல்படக்கூடிய புதிய வாரச்சந்தை திறப்பு விழா நடந்தது.

    அய்யம்பேட்டை சேரியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வார சந்தையில், இப்பகுதி கிராமப்புறங்களில் விளை விக்கப்படும் வெண்டை, முருங்கை, பாகற்காய், கீரை வகைகள், வேர்க்கடலை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகள் மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளை உள்ளிட்ட பல்வேறு காய்கறி வகைகளை விற்பனை செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரச்சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். கட்டளை கிளை செயலாளர் தனசேகர், கிளை பிரதிநிதி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவேரிப்பாக்கம் பேரூர் செயலாளர் பாஸ் (எ) நரசிம்மன் வரவேற்றார்.

    முன்னாள் அய்யம்பேட்டை சேரி ஊராட்சி தலைவர் நரசிம்மன் புதிய வார சந்தையை திறந்து வைத்தார். மாவட்ட விவசாயஅணி அமைப்பாளர் வெங்கடேசன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் துரைமஸ்தான், மாவட்ட பிரதிநிதி மங்கலம் கோபி, ஒன்றிய பொருளாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் வாரசந்தையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
    • முத்திரையிடாத எடைகற்கள், தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை,காளையார் கோவில், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் சென்னை தொழி1லாளர் ஆணையம் மற்றும் சட்டமுறை எடை யளவு கட்டுப்பாடு அலுவலகம் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணைய அமலாக்க பிரிவு அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் முன்னதாக திருப்பத்தூரில் வாரச்சந்தை மற்றும் வணிக வளாக வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகள், எடைகற்கள், மின்னணு தராசுகள், விட்ட திராசுகள் முதலியவற்றிக்கான முத்திரைகள், வணிக நிறுவனம் நடத்துவதற்கான அரசு சான்றிதழ்கள், பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் பொருட்களுக்கான விலை நிர்ணய பட்டியல், நுகர்வோர் குறை தெரிவிக்க வேண்டிய புகார் எண், தயாரிப்பு தேதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் முத்திரை வைக்கப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் உட்பட 29 எடை அளவு இயந்திரங்களை பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து சிவகங்கை மற்றும் காளையார் கோயில்களில் பொட்டல பொருட்கள் மற்றும் சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அரசின் முறையான வழிகாட்டுதலை பின்பற்றாத காரணத்தினால் அந்நிறுவனங்களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது.

    மேலும் தொடர்ந்து வியாபாரிகள் மத்தியில் மின்னணு தராசுகளுக்கு வருடத்திற்கு ஒரு முறையும் ஏனைய மற்ற தராசுகளுக்கு 2ஆண்டுகளுக்கு ஒரு முறையும் முத்திரை வைக்க வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழ்களை அதனுடன் இணைத்து வைக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 5000ரூபாய் அவதாரம் விதிக்கப்படும் என்றும் வியாபாரிகள் மத்தியில் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கப்பட்டது.

    இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் இ.முத்து, துணை ஆய்வாளர் வேலாயுதம், உதவி ஆய்வாளர்களான தீன தயாளன், வசந்தி மற்றும் திருப்பத்தூர் நகர் காவல் நிலைய காவலர்கள் ஆகியோர் இருந்தனர்

    • வாரச்சந்தை ரோட்டை ஆக்கிரமித்து கடை வைத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • திடீர் இடமாற்றம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் குறைவான அளவிலேயே வந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு ரூ.20 கோடி செலவில் நவீனமாக கட்டப்பட உள்ள தால் பஸ்நிலை யத்தில் இருந்த கடைகள், கட்டிடங்கள், சந்தை கட்டிடங்கள் இடிக்கப்ட்டு பணிகள் மும்முர மாக நடந்து வரு கின்றன.

    லெட்சுமி புரம் பகுதியில் காலரா கொட்டகை இடத் தில் வாரச்சந்தை நடத்த முடிவு எடுக்கபங ட்டது. அந்த இடத்திற்கு வியாபாரி கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கொரோ னா கால கட்டத்தில் மார்க்கெட் இயங்கிய பாரதி நகர் டி-பிளாக் பகுதியில் அம்மா பூங்கா அருகில் வாரச்சந்தை இயங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல வியாபாரிகள் வாரச்சந்தை பகுதிக்கு தங்களின் பொருட் களுடன் விற்பனைக் காக வந்தனர். மாவட்ட நிர்வாகம் ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து ஊராட்சி அலு வலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக ரோட் டை ஆக்கிரமித்து இருபுறங்களி லும் ஏராள மானோர் கடை களை வைத்த னர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத் திற்கு இடையூறு இல்லாமல் வாரச்சந்தை நடத்த ஊரா ட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

    ஆண், பெண் வியா பாரிகளுக்கு தேவையான கழிப் பிட வசதி, பொது மக்கள் வந்து செல்ல பஸ் போக்கு வரத்து வசதி செய்து கொடுத்தால் மக்கள் அதிகமாக இப் பகுதிக்கு வருவார்கள். தற்போது திடீர் இடமாற்றம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் குறை வான அளவிலேயே வந்தனர்.

    • நரிக்குடியில் வாரச்சந்தை திறக்கப்பட்டது.
    • சுற்று வட்டார கிராம மக்கள் சென்றுவர பயண செலவும் அதிகமாகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் அதனைச்சுற்றி சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு அரசு மருத்துவமனை, வங்கி கள், போலீஸ் நிலையம், யூனியன் அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம், வேளாண்மை அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடம் என பல்வேறு முக்கிய அலுவ லகங்கள் செயல்பட்டு வரு கிறது.

    வீரசோழன் கிராமத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு நரிக்குடி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் சென்றுவர பயண செலவும் அதிகமாகிறது. எனவே நரிக்குடியில் வாரச்சந்ைத அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று தற்போது நரிக்குடியில் வாரச்சந்தை திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு நரிக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்ட மைப்பின் தென்மண்டல செயலாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    நரிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரி காளீஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் சரளாதேவி போஸ் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.நரிக்குடி கிராம தலைவர் கண்ணன் நரிக்குடி வாரச்சந்தையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நரிக்குடி ஊராட்சி செயலர் கவிதா கண்ணன் வரவேற்றார்.

    விழாவில் ஆண்டியேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், வரிசையூர் ஊராட்சி மன்ற தலைவர் பத்மினி முத்துக்குமார், கூட்டுறவு சங்க தலைவர் முனியசாமி, இளைஞரணி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தேங்காய், வாழை, கருப்பட்டி போன்ற பல்வேறு பொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
    • வாரச்சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் அனைவரும் தற்காலிகமாக தெற்கு பஜாரில் ரோட்டின் இருபுறமும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை வளாகம் உடன்குடி மெயின் பஜாரில் நான்கு சந்திப்பு இடத்தில் சுமார் 10 பரப்பளவில் உள்ளது.

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் கூடும் இந்த வார சந்தையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரு வியாபாரிகள் வந்து செல்வார்கள். சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காலை 8 மணி முதல் இரவு 9மணி வரை தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தேங்காய், வாழை, கருப்பட்டி போன்ற பல்வேறு பொருட்களை நேரடியாக கொண்டு வந்து, விற்பனை செய்வார்கள். தற்போது இந்த வார சந்தை புதிய வடிவத்தில் கட்டும் பணி தொடங்கி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் வாரச்சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் அனைவரும் தற்காலிகமாக தெற்கு பஜாரில் ரோட்டின் இருபுறமும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    சாலையோரம் கடை வைத்து கடும் அவதிப்படு வதாகவும், உடனடியாக வார சந்தை வளாகத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்றும் வியாபாரிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • நாகப்பட்டினம்- விழுப்புரம் 4 வழி சாலை தற்போது பணி நடைபெற்று வருகிறது.
    • இந்நிலையில் மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம்- விழுப்புரம் 4 வழி சாலை தற்போது பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடை பெறுவது வழக்கம்.

    இந்த மாட்டுச்சந்தையில் மாடுகள் மட்டுமின்றி காய்கறிகள், பழவகைகள், கருவாடு மற்றும் விவசாய த்திற்கு தேவை யான இடு பொருட்களை கடைகள் அமைத்து வியாபாரிகள் சந்தை பகுதியில் விற்பனை செய்து வந்தனர்.

    இந்நிலையில் மதகடிப்பட்டில் இருந்து மடுகரை செல்லும் சாலை மேம்பால பணிக்காக முற்றி லுமாக அடைக்கப்பட்டு மடுகரை செல்லும் அனைத்து வாகனங்களும் சந்தை வழியாக திருப்பி விடப்பட்டு அவ்வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதனால் சந்தை பகுதியில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் வியாபாரிகள் நாகப்பட்டினம்- விழுப்புரம் 4 வழி சாலையி லேயே கூடாரங்களை அமைத்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    வியாபாரிகளின் இன்னல்களைப் போக்க உடனடியாக மடுகரை செல்லும் சாலையை சரி செய்து வாகனங்களை அந்த வழியாக அனுமதித்து சந்தை பகுதியில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வருகிற 29-ந் தேதி முதல் வாரச்சந்தை செயல்படும்.
    • ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.இங்கு அரசு மருத்துவமனை, வங்கிகள், காவல் நிலையம், யூனியன் அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம், வேளாண்மை அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடம் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து நரிக்குடி பகுதிக்கு ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் தற்போது வரை வீரசோழனில் தான் வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு செல்வதற்கு நரிக்குடிக்கு வந்து தான் பேருந்து மாறி செல்ல வேண்டி உள்ளது.

    இந்த நிலையில் நரிக்குடி பகுதியிலும் வாரச்சந்தை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்திலும் வாரச்சந்தை அமைப்பது குறித்து 7-வது வார்டு கவுன்சிலர் சரளாதேவி போஸ் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தார்.

    உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நரிக்குடி யூனியன் சேர்மன் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப் பட்டது. இந்த நிலையில் நரிக்குடி மருதுபாண்டியர் சத்திரம் மற்றும் அழகிய மீனாள் ்கோவில் அருகே வருகிற 29-ந் தேதி முதல் வாரந்தோறும் வியாழக் கிழமையன்று வார சந்தை செயல்படுமென நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் தெரிவித் துள்ளார்.

    இந்த வாய்ப்பினை பொது மக்களும், வியா பாரிகளும், விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நரிக்குடி ஊராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வ ரனுக்கும், வாரச்சந்தை அமைக்க வலியுறுத்தி வந்த கவுன்சிலர் சரளாதேவிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • வாரந்தோறும் குண்டடம் சந்தைக்கு 1,500 ஆடுகள் முதல் 2ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
    • நல்ல கொம்புடன் கூடிய 30 கிலோ எடை உள்ள செம்மறிக்கிடாய் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.

    குண்டடம்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் வாரச்சந்தை சனிக்கிழமை கூடும். குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உள்ளூர் வியாபாரிகள் மூலம் செம்மறி கிடாய்கள் மற்றும் வெள்ளாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    வாரந்தோறும் குண்டடம் சந்தைக்கு 1,500 ஆடுகள் முதல் 2ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இந்த வாரம் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

    இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறுகையில், பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்தவாரம் அதிக அளவில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்காக செம்மறிக்கிடாய்கள் கொண்டு வந்ததால் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

    நல்ல கொம்புடன் கூடிய 30 கிலோ எடை உள்ள செம்மறிக்கிடாய் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. கொம்பு இல்லாத செம்மறிக்கிடாய்கள் ரூ.17 ஆயிரம் வரை விற்பனையானது. மொத்தம் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது என்றார்.

    ×