search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாரச்சந்தை ரோட்டை ஆக்கிரமித்து  கடை வைப்பு
    X

    வாரச்சந்தை ரோட்டை ஆக்கிரமித்து கடை வைப்பு

    • வாரச்சந்தை ரோட்டை ஆக்கிரமித்து கடை வைத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • திடீர் இடமாற்றம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் குறைவான அளவிலேயே வந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு ரூ.20 கோடி செலவில் நவீனமாக கட்டப்பட உள்ள தால் பஸ்நிலை யத்தில் இருந்த கடைகள், கட்டிடங்கள், சந்தை கட்டிடங்கள் இடிக்கப்ட்டு பணிகள் மும்முர மாக நடந்து வரு கின்றன.

    லெட்சுமி புரம் பகுதியில் காலரா கொட்டகை இடத் தில் வாரச்சந்தை நடத்த முடிவு எடுக்கபங ட்டது. அந்த இடத்திற்கு வியாபாரி கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கொரோ னா கால கட்டத்தில் மார்க்கெட் இயங்கிய பாரதி நகர் டி-பிளாக் பகுதியில் அம்மா பூங்கா அருகில் வாரச்சந்தை இயங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல வியாபாரிகள் வாரச்சந்தை பகுதிக்கு தங்களின் பொருட் களுடன் விற்பனைக் காக வந்தனர். மாவட்ட நிர்வாகம் ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து ஊராட்சி அலு வலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக ரோட் டை ஆக்கிரமித்து இருபுறங்களி லும் ஏராள மானோர் கடை களை வைத்த னர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத் திற்கு இடையூறு இல்லாமல் வாரச்சந்தை நடத்த ஊரா ட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

    ஆண், பெண் வியா பாரிகளுக்கு தேவையான கழிப் பிட வசதி, பொது மக்கள் வந்து செல்ல பஸ் போக்கு வரத்து வசதி செய்து கொடுத்தால் மக்கள் அதிகமாக இப் பகுதிக்கு வருவார்கள். தற்போது திடீர் இடமாற்றம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் குறை வான அளவிலேயே வந்தனர்.

    Next Story
    ×