search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    4 வழிச்சாலையில் இயங்கிய மதகடிப்பட்டு வாரச்சந்தை
    X

    4 வழிச்சாலையில் இயங்கிய வாரச்சந்தை 

    4 வழிச்சாலையில் இயங்கிய மதகடிப்பட்டு வாரச்சந்தை

    • நாகப்பட்டினம்- விழுப்புரம் 4 வழி சாலை தற்போது பணி நடைபெற்று வருகிறது.
    • இந்நிலையில் மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம்- விழுப்புரம் 4 வழி சாலை தற்போது பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடை பெறுவது வழக்கம்.

    இந்த மாட்டுச்சந்தையில் மாடுகள் மட்டுமின்றி காய்கறிகள், பழவகைகள், கருவாடு மற்றும் விவசாய த்திற்கு தேவை யான இடு பொருட்களை கடைகள் அமைத்து வியாபாரிகள் சந்தை பகுதியில் விற்பனை செய்து வந்தனர்.

    இந்நிலையில் மதகடிப்பட்டில் இருந்து மடுகரை செல்லும் சாலை மேம்பால பணிக்காக முற்றி லுமாக அடைக்கப்பட்டு மடுகரை செல்லும் அனைத்து வாகனங்களும் சந்தை வழியாக திருப்பி விடப்பட்டு அவ்வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதனால் சந்தை பகுதியில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் வியாபாரிகள் நாகப்பட்டினம்- விழுப்புரம் 4 வழி சாலையி லேயே கூடாரங்களை அமைத்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    வியாபாரிகளின் இன்னல்களைப் போக்க உடனடியாக மடுகரை செல்லும் சாலையை சரி செய்து வாகனங்களை அந்த வழியாக அனுமதித்து சந்தை பகுதியில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×