search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unstamped scales"

    • சிவகங்கை வார சந்தையில் முத்திரையிடாத எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சென்னை, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் IAS மற்றும் சென்னை, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லெட்சுமிகாந்தன் ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் யாஸ்மின்பேகம் மற்றும் அவர்களின் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரம ணியன் ஆலோசனையின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) முத்து தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வசந்தி, மகாலெட்சுமி முத்திரை ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் பொதுமக்கள் நலன் கருதி சிவகங்கை நகர் வாரச்சந்தையில் சட்டமுறை எடையளவுச்சட்டம் மற்றும் அதன் விதிகளின் கீழ் சிறப்பு கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    இக்கூட்டாய்வில் முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-23, மேஜை தராசு-11, விட்டத்தராசு-12, இரும்பு எடைகற்கள்-54, ஊ.அளவைகள் - 2 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள்-2 ஆக மொத்தம் 104 எடைய ளவைகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டன.

    முன்னதாக 25.08.2023 அன்று புளியடிதம்பம் மீன் மார்க்கெட்டில் கூட்டாய்வு மேற்கொண்டபோது, முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-7, மேஜை தராசு-2, விட்டத்தராசு - 10, இரும்பு எடைகற்கள்-10 ஆக மொத்தம் 29 எடைய ளவைகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டன.

    முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னனு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும், விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரையிட்டும், அதன் சான்றிதழை உடன் வைத்திருக்குமாறும், மேலும் பொட்டலப் பொருட்களில் பொருளின் பெயர், பொருளின் நிகர எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தயாரிப்பாளர் முழு முகவரி, நுகர்வோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகிய சான்றுரைகள் இடம் பெற்றிருக்க வேண்டும், இல்லையெனில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வணிகர்களை கேட்டுக்கொண்டார்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை, காரைக்குடியில் முத்திரையிடப்படாத தராசுகளை பயன்படுத்திய வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • ெதாழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லட்சுமிகாந்தன் ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பி ரமணியன் ஆலோசனை யின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தலைமையில் தொழி லாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், வசந்தி ஆகியோர் தேவகோட்டை, காரைக்குடி பஸ் நிலையங்க ளின் அருகில் உள்ள கடைகளிலும் மற்றும் கடைநிறுவனங்களிலும், சிறப்பு கூட்டாய்வு மேற் கொண்டனர்.

    இதில் முத்திரை யிடப்படாத மின்னனு தராசுகளை பயன்படுத்திய 4 உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் பொட்டலப் பொருட்களில் விபரங்கள் இல்லாமல் விற்பனை செய்த 3 நிறுவன உரிமையா ளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. மேலும் 6 மின்னனு தராசுகள், 3 இரும்பு எடை கற்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத் தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும், மின்னனு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும். விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் 2 வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரை யிடப்பட வேண்டும். அதன் சான்றிதழை உடன் வைத்தி ருக்க வேண்டும்.

    பொட்டலப் பொருட்க ளில் முக்கிய விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இந்த தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    • சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காய்கறி, பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • சில கடைகளில் முத்திரை இல்லாத, மறுமுத்திரையிடாத, தரப்படுத்தப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் மற்றும் விட்ட தராசுகள் பயன்படுத்தியது கண்டுபிடுக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தலைமையில் தொழி லாளர் உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், முருகானந்தம், இளையராஜா, ரமணி, முத்திரை ஆய்வாளர்கள் வாசுகி, சந்திரன் மற்றும் போலீசார் நேற்று சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காய்கறி, பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சில கடை களில் முத்திரை இல்லாத, மறுமுத்திரையிடாத, தரப்படுத்தப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் மற்றும் விட்ட தராசுகள் பயன்படுத்தியது கண்டுபிடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து 17 தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அரசு முத்திரை மற்றும் மறுமுத்திரை இல்லாமல் வணிகர்கள் பயன்படுத்திய 27 இரும்பு எடை கற்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கிருஷ்ண வேணி கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் இந்த மாதத்தில் இதுவரை 30 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டன. இதில் 16 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. மேலும் 28 கடைகளில் மற்றும் நிறுவனங்க ளில் ஆய்வு மேற்கொண்ட போது 10 முரண்பாடுகள் கண்டறி யப்பட்டது. இதுதவிர சினிமா தியேட்டர்கள், சுற்றுலா வழிபாட்டு தலங்கள் மற்றும் சிகரெட் பாக்கெட் நிறுவனங்களில் பொட்டல பொருட்கள் விதிகள் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 16 நிறுவனங்களில் 2 முரண் பாடுகள் கண்டறியப்பட்டது.

    அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் இதுவரை முத்திரையிடப்ப டாமல் பயன்படுத்தும் எடையளவுகளை அந்தந்த பகுதிகளுக்கான முத்திரை ஆய்வாளர் அலுவலகங் களுக்கு சென்று முத்திரை யிட்டு கொள்ள வேண்டும். எடை அளவுகளை உரிய காலத்துக்குள் மறுமுத்திரை யிடாமல் இருந்தால் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×