search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்திரையிடப்படாத தராசுகளை பயன்படுத்திய வணிகர்களுக்கு அபராதம்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட தராசுகளுடன் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்.

    முத்திரையிடப்படாத தராசுகளை பயன்படுத்திய வணிகர்களுக்கு அபராதம்

    • சிவகங்கை, காரைக்குடியில் முத்திரையிடப்படாத தராசுகளை பயன்படுத்திய வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • ெதாழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லட்சுமிகாந்தன் ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பி ரமணியன் ஆலோசனை யின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தலைமையில் தொழி லாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், வசந்தி ஆகியோர் தேவகோட்டை, காரைக்குடி பஸ் நிலையங்க ளின் அருகில் உள்ள கடைகளிலும் மற்றும் கடைநிறுவனங்களிலும், சிறப்பு கூட்டாய்வு மேற் கொண்டனர்.

    இதில் முத்திரை யிடப்படாத மின்னனு தராசுகளை பயன்படுத்திய 4 உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் பொட்டலப் பொருட்களில் விபரங்கள் இல்லாமல் விற்பனை செய்த 3 நிறுவன உரிமையா ளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. மேலும் 6 மின்னனு தராசுகள், 3 இரும்பு எடை கற்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத் தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும், மின்னனு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும். விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் 2 வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரை யிடப்பட வேண்டும். அதன் சான்றிதழை உடன் வைத்தி ருக்க வேண்டும்.

    பொட்டலப் பொருட்க ளில் முக்கிய விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இந்த தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×