search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடையளவைகள்"

    • சிவகங்கை வார சந்தையில் முத்திரையிடாத எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சென்னை, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் IAS மற்றும் சென்னை, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லெட்சுமிகாந்தன் ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் யாஸ்மின்பேகம் மற்றும் அவர்களின் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரம ணியன் ஆலோசனையின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) முத்து தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வசந்தி, மகாலெட்சுமி முத்திரை ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் பொதுமக்கள் நலன் கருதி சிவகங்கை நகர் வாரச்சந்தையில் சட்டமுறை எடையளவுச்சட்டம் மற்றும் அதன் விதிகளின் கீழ் சிறப்பு கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    இக்கூட்டாய்வில் முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-23, மேஜை தராசு-11, விட்டத்தராசு-12, இரும்பு எடைகற்கள்-54, ஊ.அளவைகள் - 2 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள்-2 ஆக மொத்தம் 104 எடைய ளவைகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டன.

    முன்னதாக 25.08.2023 அன்று புளியடிதம்பம் மீன் மார்க்கெட்டில் கூட்டாய்வு மேற்கொண்டபோது, முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-7, மேஜை தராசு-2, விட்டத்தராசு - 10, இரும்பு எடைகற்கள்-10 ஆக மொத்தம் 29 எடைய ளவைகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டன.

    முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னனு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும், விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரையிட்டும், அதன் சான்றிதழை உடன் வைத்திருக்குமாறும், மேலும் பொட்டலப் பொருட்களில் பொருளின் பெயர், பொருளின் நிகர எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தயாரிப்பாளர் முழு முகவரி, நுகர்வோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகிய சான்றுரைகள் இடம் பெற்றிருக்க வேண்டும், இல்லையெனில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வணிகர்களை கேட்டுக்கொண்டார்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    ×