search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய வாரச்சந்தை திறப்பு
    X

    புதிய வாரச்சந்தை திறப்பு

    • விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராமமக்கள் பயன்பெறும் வகையில்,புதன்கிழமை தோறும் செயல்படக்கூடிய புதிய வாரச்சந்தை திறப்பு விழா நடந்தது.

    அய்யம்பேட்டை சேரியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வார சந்தையில், இப்பகுதி கிராமப்புறங்களில் விளை விக்கப்படும் வெண்டை, முருங்கை, பாகற்காய், கீரை வகைகள், வேர்க்கடலை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகள் மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளை உள்ளிட்ட பல்வேறு காய்கறி வகைகளை விற்பனை செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரச்சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். கட்டளை கிளை செயலாளர் தனசேகர், கிளை பிரதிநிதி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவேரிப்பாக்கம் பேரூர் செயலாளர் பாஸ் (எ) நரசிம்மன் வரவேற்றார்.

    முன்னாள் அய்யம்பேட்டை சேரி ஊராட்சி தலைவர் நரசிம்மன் புதிய வார சந்தையை திறந்து வைத்தார். மாவட்ட விவசாயஅணி அமைப்பாளர் வெங்கடேசன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் துரைமஸ்தான், மாவட்ட பிரதிநிதி மங்கலம் கோபி, ஒன்றிய பொருளாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×