search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "virudhunagar"

    • விருதுநகர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 50). இவர் தனது 2-வது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்காக செலவுக்கு அவரது தந்தை சேவுகன் மற்றும் தாய் வள்ளியம்மாளிடம் பணம் கேட்டு சென்றார். ஆனால் அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறி விட்டனர். இதனால் முத்துப்பாண்டி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுபோதையில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்துப்பாண்டி மனைவி மாரியம்மாள் ெகாடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நல்லூர்பட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (30). இவருக்கு ஒரு வருடத்திற்கு மேலாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா கொடுத்தபுகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியாபுரம் சாரதா நகரை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவரது மகன் ஜெகநாதன் (20). இவர் உறவினர் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு வீட்டாரும் பேசி பெண்ணின் படிப்பு முடிந்த பின்னர் திருமணத்தை உறுதி செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர். அதுவரை பெண்ணை தொந்தரவு செய்யாமல் இருக்கும்படி ெஜகநாதனுக்கு அறிவுரை கூறி உள்ளனர். ஆனால் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனை இருவீட்டாரும் கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த ஜெகநாதன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் டிரைவரிடம் நூதனமாக பேசி ரூ. 2.50 லட்சம் கொள்ளை நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நகரி காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் அருள் அன்பரசு (வயது 39). இவர் கோவையில் சொந்த மாக கார் வைத்து தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அங்குள்ள காந்தி நகர் விடுதியில் இருந்து பேசிய வாலிபர் சென்னைக்கு செல்ல வேண்டுமென்று கூறி யுள்ளார். அதன்படி ரூ. 8000 வாடகை பேசி அருள் அன்பரசு அந்த வாலிபரை சென்னை ஆலந்தூரில் இறக்கிவிட்டுள்ளார்.

    அப்போது அந்த வாலிபர் தான் காரைக்குடி கழனி வாசலை சேர்ந்த சங்கர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் பேசிய வாடகை பணத்தை விட கூடுதலாக ஆயிரத்தை சங்கர் கொடுத்ததாக தெரிகிறது.

    சில நாட்களுக்கு பின் மீண்டும் தொடர்பு கொண்ட சங்கர் 11 பவுன் ரூ. 2 லட்சத்து 62 ஆயிரத்திற்கு ஏலம் வருவதாகவும், அதனை வாங்கிக் கொள்ளு மாறும் அருள் அன்பரசு விடம் கூறியுள்ளார். அவரும் கூடுதல் லாபம் கிடைக்கும் என கருதி மனைவியின் நகைகளை அடகு வைத்து பணத்தை திரட்டி உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருமாறு அருள் அன்பரசு விடம் சங்கர் கூறியுள்ளார். அங்கு 2 பேரும் சந்தித்து பேசினர். அப்போது விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 2-வது மாடி அறையில் ஏலம் நடப்பதாகவும், தான் மட்டும் சென்று நகைகளை வாங்கி வருவதாக பணத்துடன் சங்கர் சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருள் அன்பரசு மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஏலம் நடைபெறவில்லை என தெரியவந்தது.

    உடனே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வந்து பார்த்தபோது சங்கர் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்வது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள் அன்பரசு 2 லட்சத்து 62 ஆயிரம் திருடு போனது தொடர்பாக சூலக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.

    • கிராமிய சந்தை தொடக்கப்பட்டது.
    • பிரமுகர்கள் கண்ணன், செல்லம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் நபார்டு கிராமிய சந்தை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம்தென்னரசு கிராமிய சந்தையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் நபார்டு வங்கி உதவியுடன் சீட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார்.

    சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மற்றும் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது. முன்னேற விளையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வட்டாரத்தில் உள்ள விவசாய பங்கு தாரர்களை கொண்டு இது செயல்பட்டு வருகிறது.

    பின்னர் நபார்டு நீர்வடிப்பகுதி பெண்கள் கூட்டமைப்பு வாழ்வாதார கடனுதவி திட்டத்தின் கீழ் 5 கூட்டமைப்புகளுக்கு மொத்தம் ரூ.16.59 லட்சம் மதிப்பிலான கடனு தவிகளையும், 2 பயனாளிகளுக்கு இலவச தார்ப்பாய்களைஅமைச்சர் வழங்கினார்.

    சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, விவசாய கடன் அட்டை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.2.44லட்சம் மதிப்பிலான கடனு தவிகளையும், 2 பயனாளிகளுக்கு நபார்டு கிராமிய சந்தை உறுப்பினர் அட்டை களையும், விருதுநகர் வட்டார உழவர் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க பதிவு சான்றிதழையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜ சுரேஷ்வரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், பேரூராட்சி தலைவர்கள் துளசிதாஸ் (மல்லாங்கிணறு), செந்தில் (காரியாபட்டி), காரியாபட்டி யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன், சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பாண்டியன், முதன்மை செயல் அலுவலர் சிவகுமார், பிரமுகர்கள் கண்ணன், செல்லம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
    • இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே புளிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது65). இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். அதனை பார்த்த அவரது மனைவி ராமு விரைந்து வந்து தடுக்க முயன்றார்.

    ஆனால் அதற்குள் அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டார். உறவினர்கள் உடனடியாக அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    சிவகாசி பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன்(45). இவரது மனைவி, குழந்தைகள் மதுரையில் வசித்து வருகின்றனர். வெள்ளையன் தனது தாயாருடன் வசித்து வந்தார். வெளியூர் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இந்தநிலையில் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் எறும்பு பொடி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வெள்ளையனின் சகோதரர்கள் பழனிசாமி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகில் பயணிகள் நிழற்குடையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை அருகில் பொதுமக்களின் நலன்கருதி ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

    அதேபோல் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி பஸ் பராமரிப்பு மைதா னத்திற்கு பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டது. இவற்றின் திறப்பு விழா நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடை யையும், பேவர் பிளாக் தளத்தையும் திறந்து வைத்தார்.

    அப்போது எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து துறை மூலம் பெண்களுக்கு கட்டண மில்லா பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்து சிறப்பான சேவை செய்துள்ளார். இந்த சேவையை பெண்கள் போற்றி வருகின்றனர். அதுபோல் ராஜபா ளையம் தொகுதியில் அரசின் வழிகாட்டுதலின்படி 2 டிப்போ மேலாளர்களும் பஸ் சேவையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்' என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் மாரியப்பன், பொது மேலாளர் சிவலிங்கம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், துறை மேலாளார் மாரி முத்து, ஜீவா, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கமல கண்ணன், தவம், கவுன்சிலர் ஜான்கென்னடி, வார்டு செயலாளர் குருசாமி, முனியராஜ், நாகேசுவரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
    • கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைசாமி, இயக்குநர் விக்ேனசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, ெசன்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்லூரியின் சார்பில் டீன் மாரிச்சாமி, என்.ஐ.டி.டி.டி.ஆர். சார்பில் அதன் இயக்குநர் உஷா நடேசன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    சென்னையில் நடந்த இந்த நிகழ்வில் சென்னை என்.ஐ.டி.டி.டி.ஆர். முனைவர்கள் ரேணுகா தேவி, ஜனார்த்தனன், ராஜசேகரன், கிரிதரன் கல்லூரியின் ஐ.கியூ.ஏ.சி. பேராசிரியர். பால சுப்பிரமணியன், ஒருங்கி ணைப்பாளர் பிச்சிப்பூ, ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்வியில் ஒத்துழைப்பு தருதல், ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை பெறப்பட்டு இதன் மூலம் ஆசிரியர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளை என்.ஐ.டி.டி.டி.ஆர்.-ன் ஆய்வக வசதிகள், பயன்பாடு, ஆசிரியர் மேம்பாட்டுத் திறன் பயிற்சி, அரசின் நிதி பெறும் செயல்முறைத் திட்டங்கள் மற்றும் ஆய்வுகள், காப்புரிமை, இண்டர்ன்ஷிப் ஆகிய வற்றைப் பெறமுடியும்.

    மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் பாடங்களை இலவசமாக பதிவு செய்து கற்றுக் கொள்ளலாம். இந்த பு ரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்விற்கு முயற்சி செய்த பேராசிரியர்களை கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைசாமி, இயக்குநர் விக்ேனசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    • மாணவி உள்பட 3 பேர் மாயமாகி உள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சின்னபாண்டியம்மாள்(40),கூலித்தொழிலாளி. இவரது மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்டித்த சின்னபாண்டியம்மாள் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சின்னபாண்டியம்மாள் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மகள் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னபாண்டியம்மாள் அளித்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மாவுமில் நடத்தி வருகிறார். இவரது மகன் சந்தோஷ்(23). கேட்டரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கல்லாபெட்டியில் இருந்து ஜெயராஜூக்கு தெரியாமல் ரூ.500-ஐ சந்தோஷ் எடுத்துள்ளார். இதனை ஜெயராஜ் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சந்தோஷ் வெளியே சென்றார்.

    அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜெயராஜ் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள திம்மாபுரம் காலனியை சேர்ந்தவர் சீனி.இவரது மகன் நாகராஜ்(24),கட்டிட தொழிலாளி.கோவையில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நாகராஜை ஊருக்கு வரும்படி சீனி அழைத்துள்ளார். ஊருக்கு வந்த நாகராஜ் சில நாட்கள் வீட்டில் இருந்தார். பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். இதுகுறித்து சீனி அளித்த புகாரின்பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    • பாலிடெக்னிக் ஊழியர் பலியானார்.
    • மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.

    அருப்புக்கோட்டை,

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த மலைப்பட்டி காலனி தெருவை சேர்ந்த பெரியராஜ் மகன் அஜய் கண்ணன் (வயது21). இவர் சாத்தூர் அரசு பாலிடெக்னிக்கில் ஊழிய ராக பணியாற்றினார்.

    நேற்று இரவு இவர் மலைப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பாலவநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாலவநத்தை தாண்டி பாலத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் அஜய் கண்ணன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கடம்பகுளத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன்கள் பொன்னு, காளிராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் அஜய் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்பு லன்சில் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ குழுவினர் விபத்தில் காயமடைந்த நாகராஜ், காளிராஜ் இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே நடந்த விபத்தில் ஆட்டோ டிரைவர்-முதியவர் பலியாகினர்.
    • வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்,

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). ஆட்டோ டிரைவர். இவர் விருதுநகர் அருகில் உள்ள வச்சககாரப்பட்டிக்கு சவாரி சென்று விட்டு மீண்டும் பந்தல்குடி திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை மாரிமுத்து வேகமாக திருப்பினார். இதில் ஆட்டோ நிலைதடுமாறி முதியவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    மேலும் இந்த விபத்தில் ஆட்டோவை திருப்ப முயன்ற போது ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் மாரிமுத்துவின் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து மாரிமுத்துவின் மனைவி தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 255 மாணவர்களிடம் இருந்து ரூ.966.80 லட்சம் கல்விக்கடன் பெற விண்ணப்பம் வந்துள்ளது என்று கலெக்டர் கூறினார்.
    • ரூ.174.46 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் வட்டார அளவிலான சிறப்பு கல்வி கடன் முகாம் நடந்தது.

    சாத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரியிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியிலும், அருப்புக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவ ர்களுக்கு சவுடாம்பிகை பொறியியல் கல்லூரியிலும், ராஜ பாளையம் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ராம்கோ பொறியியல் கல்லூரியிலும், ஸ்ரீவில்லி புத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரியிலும், வத்தி ராயிருப்பு வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கலசலிங்கம் பல்கலைக்க ழகத்திலும், காரியாபட்டி வட்டாரத்தை சேர்ந்த மாண வர்களுக்கு தனி யார் கல்லூரியிலும், நரிக்குடி மற்றும் திருச்சுழி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், விருதுநகர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் பாலிடெக்னிக்கிலும் முகாம்கள் நடந்தன.

    இதில் 156 மாணவ- மாணவிகளிடம் இருந்து மொத்தம் ரூ.486.06 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது. 15 மாணவ- மாணவிகளுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.75.34 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டன.மேலும், சிவகாசி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் நடந்த முகாமில், 99 மாணவ- மாணவிகளிடம் இருந்து மொத்தம் ரூ.480.74 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது. 14 மாணவ, மாணவிகளுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.99.12 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கல்விக்கடன் முகாம்களில் 255 மாணவ மாணவிகளிடம் இருந்து மொத்தம் ரூ.966.80 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது.

    29 மாணவ- மாணவி களுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.174.46 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
    • பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "ஏ.கே.சி.இ.-கே.எல்.யூ. முன்னாள் மாணவர் சங்கம்'' சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா, பல்கலைக்கழக துணைத்தலைவர் எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் தலைமையில் நடந்தது. பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். சங்கதலைவர், பேராசிரியை முருகேசுவரி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர், குடும்பத்தினரோடு கலந்து கொண்டு பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப்பார்த்து பேராசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    அவர்களை இன்னாள் மாணவர்கள் இன்னிசை மழையில் வரவேற்றனர். பேராசிரியர்கள் முத்துக்கண்ணன், கைலாசம், பாலமுருகன், கார்த்திகாதேவி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.

    • விருதுநகரில் புத்தகத் திருவிழா தொடங்கியது. விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பேரணி தேசபந்து மைதானத்தில் தொடங்கி, சந்தை வீதி, தெப்பம் வழியாக, நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

    விருதுநகர்,

    விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் முதல் முறையாக வருகிற 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாத ரெட்டி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்து, நடைபயணமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல்துறை அரங்குகள், அரசுத்து றைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த புத்தகக் கண்காட்சி குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    முதலாவது விருதுநகர் புத்தக திருவிழா குறித்து இந்த பேரணியில் விழிப்புணர்வு பதாகைகள் மூலமும், தப்பாட்டம், பொய் கால் குதிரை, உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த பேரணி தேசபந்து மைதானத்தில் தொடங்கி, சந்தை வீதி, தெப்பம் வழியாக, நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ஷாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், நகர்மன்ற தலைவர் மாதவன், ஆணையாளர் ஸ்டான்லி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×