search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் அருகே விபத்து: ஆட்டோ டிரைவர்-முதியவர் சாவு
    X

    விருதுநகர் அருகே விபத்து: ஆட்டோ டிரைவர்-முதியவர் சாவு

    • விருதுநகர் அருகே நடந்த விபத்தில் ஆட்டோ டிரைவர்-முதியவர் பலியாகினர்.
    • வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்,

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). ஆட்டோ டிரைவர். இவர் விருதுநகர் அருகில் உள்ள வச்சககாரப்பட்டிக்கு சவாரி சென்று விட்டு மீண்டும் பந்தல்குடி திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை மாரிமுத்து வேகமாக திருப்பினார். இதில் ஆட்டோ நிலைதடுமாறி முதியவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    மேலும் இந்த விபத்தில் ஆட்டோவை திருப்ப முயன்ற போது ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் மாரிமுத்துவின் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து மாரிமுத்துவின் மனைவி தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×