search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Polytechnic employee"

    • பாலிடெக்னிக் ஊழியர் பலியானார்.
    • மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.

    அருப்புக்கோட்டை,

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த மலைப்பட்டி காலனி தெருவை சேர்ந்த பெரியராஜ் மகன் அஜய் கண்ணன் (வயது21). இவர் சாத்தூர் அரசு பாலிடெக்னிக்கில் ஊழிய ராக பணியாற்றினார்.

    நேற்று இரவு இவர் மலைப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பாலவநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாலவநத்தை தாண்டி பாலத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் அஜய் கண்ணன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கடம்பகுளத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன்கள் பொன்னு, காளிராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் அஜய் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்பு லன்சில் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ குழுவினர் விபத்தில் காயமடைந்த நாகராஜ், காளிராஜ் இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×