என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலிடெக்னிக் ஊழியர் பலி
- பாலிடெக்னிக் ஊழியர் பலியானார்.
- மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த மலைப்பட்டி காலனி தெருவை சேர்ந்த பெரியராஜ் மகன் அஜய் கண்ணன் (வயது21). இவர் சாத்தூர் அரசு பாலிடெக்னிக்கில் ஊழிய ராக பணியாற்றினார்.
நேற்று இரவு இவர் மலைப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பாலவநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாலவநத்தை தாண்டி பாலத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் அஜய் கண்ணன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கடம்பகுளத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன்கள் பொன்னு, காளிராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் அஜய் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்பு லன்சில் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ குழுவினர் விபத்தில் காயமடைந்த நாகராஜ், காளிராஜ் இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்