search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 people including"

    • கடத்தூர் மற்றும் சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • ரூ.2,024 மதிப்புள்ள 1,478 கிராம் எடையிலான புகை யிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

    கோபி

    கடத்தூர் மற்றும் சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தங்களது மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்ததாக நம்பியூர் பள்ளத்தூர் காலனியை சேர்ந்த தீபா (34), அளுக்குளி குட்டிமூலை காடு பகுதியை சேர்ந்த சரோஜாதேவி (62), காலிங்கராயன்பாளையம் பெரியார் நகர் முதல்வீதியை சேர்ந்த முருகேசன் (49) ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ேபாலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2,024 மதிப்புள்ள 1,478 கிராம் எடையிலான புகை யிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • லட்சுமி (50) இவர்களின் மகள் ரேவதி (25) . இவர்கள் அனைவரும் கட்டிட தொழிலாளர்கள்.
    • வீட்டின் அருகில் வசிக்கும் எலக்ட்ரீசியன் கணேஷ் (35) என்பவரை அழைத்து கியாஸ் அடுப்பை பழுது பார்க்க சொன்னார்கள்.

    பவானி,

    பவானி மண் தொழிலாளர் 2-வது வீதியை சேர்ந்தவர் ஸ்ரீ ரங்கன். இவரது மனைவி லட்சுமி (50) இவர்களின் மகள் ரேவதி (25). இவர்கள் அனைவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களது வீட்டில் இருந்த கியாஸ் அடுப்பு பழுதானது.

    இதையடுத்து அவர்கள் வீட்டின் அருகில் வசிக்கும் எலக்ட்ரீசியன் கணேஷ் (35) என்பவரை அழைத்து கியாஸ் அடுப்பை பழுது பார்க்க சொன்னார்கள்.

    கணேஷ் கியாஸ் அடுப்பை பழுது பார்த்துக்கொண்டு இருக்கும் போது அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் லட்சுமி அவரது மகள்ரேவதி, மற்றும் எலக்ட்ரீசியன் கணேஷ் ஆகிய 3 பேரும் தீ காயம் ஏற்பட்டு அலறி சத்தம் போட்டு உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

    ரேவதிக்கு முதுகுபகுதி, முகம், கை, கால் என 50 சதவீதம் தீக்காயமும், லட்சுமிக்கு இடது கை, கால் என 35 சதவீதம் தீக்காயமும், கணேஷ் கை, கால் முகம் என 30 சதவீதம் தீக்காய த்துடன் பெருந்துறை ஐ .ஆர். டி .டி. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    இச்சம்பவம் குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மாணவி உள்பட 3 பேர் மாயமாகி உள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சின்னபாண்டியம்மாள்(40),கூலித்தொழிலாளி. இவரது மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்டித்த சின்னபாண்டியம்மாள் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சின்னபாண்டியம்மாள் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மகள் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னபாண்டியம்மாள் அளித்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மாவுமில் நடத்தி வருகிறார். இவரது மகன் சந்தோஷ்(23). கேட்டரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கல்லாபெட்டியில் இருந்து ஜெயராஜூக்கு தெரியாமல் ரூ.500-ஐ சந்தோஷ் எடுத்துள்ளார். இதனை ஜெயராஜ் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சந்தோஷ் வெளியே சென்றார்.

    அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜெயராஜ் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள திம்மாபுரம் காலனியை சேர்ந்தவர் சீனி.இவரது மகன் நாகராஜ்(24),கட்டிட தொழிலாளி.கோவையில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நாகராஜை ஊருக்கு வரும்படி சீனி அழைத்துள்ளார். ஊருக்கு வந்த நாகராஜ் சில நாட்கள் வீட்டில் இருந்தார். பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். இதுகுறித்து சீனி அளித்த புகாரின்பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    ×