search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் மாணவர்கள்"

    • நாடு முழுவதும் 23 ஐஐடி மையங்கள் உள்ளன
    • ஐடி நிறுவனங்கள் பெருமளவு பணி சேர்க்கையை குறைத்து விட்டன

    உயர்தர பொறியியல் படிப்பிற்காக உலகம் முழுவதும் பிரபலமானவை நாடெங்கிலும் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT).

    மத்திய கல்வி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இவை ஒவ்வொன்றும் தன்னாட்சி கொண்ட கல்வி மையங்கள்.

    சென்னை உட்பட நாடு முழுவதும் 23 ஐஐடி மையங்கள் உள்ளன.

    ஆண்டுதோறும் 2 கட்டங்களாக ஐஐடி வளாகங்களுக்கு வந்து பன்னாட்டு முன்னணி நிறுவன உயர் அதிகாரிகள் இறுதி ஆண்டு மாணவர்களை தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற நேர்முக தேர்வு நடத்தி தேர்வு செய்வது வழக்கம்.

    "கேம்பஸ் இன்டர்வியூ" என அழைக்கப்படும் இந்த "வளாக நேர்காணல்" முறையில் தேர்வாகும் மாணவர்களுக்கு பெரும் தொகை ஊதியமாக கிடைப்பது வழக்கம்.

    இதன் முதல் கட்டம் டிசம்பர் மாதம் தொடங்கி சில நாட்களில் நிறைவு பெறும். இரண்டாம் கட்டம், ஜனவரியில் தொடங்கி மே வரை நடைபெறும்.

    2024-ஆம் வருட மாணவர்களுக்கு 1-ஆம் கட்ட நேர்முக தேர்வுகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.

    2024ல், எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக, 2023-ஐ விட பணி நியமனம் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது.

    இதை ஈடு செய்யும் வகையில் விரைவில் தொடங்க உள்ள இரண்டாம் கட்ட நேர்முக தேர்வுகளில் ஓவ்வொரு ஐஐடியிலும் உள்ள பணி சேர்க்கை அமைப்பினர் (recruitment cell), அதிகளவில் மாணவர்களை பணியில் சேர்த்து விட தீவிரமாக முயன்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் மூலம் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்பை குறித்து தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

    சில ஆண்டுகளாகவே தகவல் தொழில்நுட்ப சேவைக்கான நிறுவனங்கள் புதிய ஊழியர் சேர்க்கையை பெருமளவு குறைத்து விட்டன.

    வளாக சேர்க்கை (campus recruitment) முறையில் பணிகள் கிடைப்பது அரிதாகி விட்டதால் இறுதி ஆண்டு மாணவர்கள் தனித்தனியே மனு போட்டு வெளியில் வேலை தேட துவங்கி விட்டனர்.

    ஐஐடி மாணவர்களுக்கே வேலை வாய்ப்பு குறைந்து வருவது தீவிரமாக பார்க்கப்பட வேண்டிய நிலவரம் என்றும் இந்நிலை தொடர்ந்தால் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் வேலையை ஒப்பு கொள்ள மாணவர்கள் தயாராகி விடலாம் எனவும் சில மனித வள நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலர் செல்வராஜன் தலைமை தாங்கினார். ம முன்னாள் மாணவரும், பேராசிரியருமான கவிதா வரவேற்றார்.முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி, முன்னாள் முதல்வர்கள் கண்மணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். முன்னாள் மாணவர் சங்க செயலாளரும், பேராசிரியருமான முத்துகுமார் அறிக்கை வாசித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கப்பட்டது. முடிவில் குலோத்துங்கப் பாண்டியன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • தியாகராசர் கல்லூரியில் 28 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்டனர்.
    • பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை தியாகராசர் கலை கல்லூரியில் 1981- 84-ம் கல்வியாண்டில் இளங்கலை தாவரவியல் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    ஒருங்கிணைப்பாளர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். உதவி ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் வரவேற்றார். ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கேசவன், பாபுராஜ், சேகர், கண்ணன், செல்வராஜ், சுப்பிரமணியன், சாந்தகுரு ஆகியோரிடம் முன்னாள் மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் பலர் தங்கள் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். முடிவில் தியாகராஜன் நன்றிகூறினார்.

    • கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
    • கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 1987 -ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரியில், கல்லூரி சங்கமும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 33 வருடங்களுக்கு முனனால் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் சந்தித்து தங்களது கல்லூரி நாட்களில் கடந்த கால நினைவுகளை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். முக்கிய நிகழ்வாக 33 வருடங்களுக்கு முன் பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, முன்னாள் மாணவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நிகழ்வு பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தற்பொழுது பல்வேறு காவல்துறை, தீயணைப்பு துறை, ஆசிரியர்கள், கப்பல் மற்றும் விமானத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரியில் மாணவர்கள் போல மாறி, கல்லூரி நாட்களில் செய்ததைப் போல விசில் அடித்தும், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியும் தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளி படுத்திய சம்பவம் அனைவரையும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இதில் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பல்லடம், பழனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் உட்பட பல்வேறு நண்பர்கள் மூலம் செய்யப்பட்டு இருந்தது.

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
    • முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஜான் ரத்தினம் நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளியில் 1983-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த 68 முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியரும், முன்னாள் மாணவர் மன்ற இயக்கு நருமான சைமன் தலைமை யில் நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் மாண வர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.தங்களுடன் படித்த முன்னாள் மாணவருக்கு உதவித் தொகை வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டு குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் ஒருங்கிணைப்பா ளர் ஜான் ரத்தினம் நன்றி கூறினார்.

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
    • முடிவில் செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார். பேராசிரியர் சுகந்தி தொகுத்து வழங்கினார்.

    மதுரை

    சவுராஷ்ட்ரா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சந்திப்பு கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் குமரேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேராசிரியர் நாதன் வரவேற்றார்.

    இளநிலை கணினி அறிவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    தலைவராக சிவக்குமார், துணைத் தலைவராக அமர்சிங், செயலாளராக அமர்நாத், துணை செயலாளராக ஸ்ரீதரன், பொருளாளராக விஷ்ணுகுமார், செயற்குழு உறுப்பினர்களாக ரவிகுமார், ஹரிஹரசுதன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகளிடம் நிர்வாகிகள் ஹரிஹரன், அருண்பிரசாத், நாதன் ஆகியோர் ஒப்படைத்தனர். கல்லூரி தலைவர் மோதிலால், செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர், செயற்குழு உறுப்பினர்கள் பன்சிதார், வெங்க டேஸ்வரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் பேராசி ரியர்கள் விஜயகுமார், சிவகுமார், துரைசாமி, ஜீவப்பிரியா, மகாலட்சுமி, கணேசன், ராம்பிரசாத், கார்த்திக், கிருஷ்ணன், புவனேஸ்வரி, தேவி, பாண்டியராஜன், கணேசன், சிவகுமார், பவித்ரா, 300-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார். பேராசிரியர் சுகந்தி தொகுத்து வழங்கினார்.

    • நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர்.
    • இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் உருவாக்கி வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 1923-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சென்ற முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் அடிப்படை வசதிகளை கட்டமைத்தும், பள்ளிக்கும், அங்கு பயலும் மாணவர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முடிவு செய்து.

    இதற்காக இதுவரை பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தாங்கள் படித்த பள்ளியை தத்தெடுத்து லட்சக்கணக்கில் நிதியை அளித்து தற்போது இந்த இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்திருந்த கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு பள்ளி கட்டிடங்கள் முழுவதற்கும் பெயிண்ட் செய்து வண்ண மயமாக மாற்றி உள்ளனர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.

    அதுமட்டுமின்றி இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் உருவாக்கி வருகின்றனர். மேலும், நூற்றாண்டு விழா கொண்டாட திட்டமிட்டு வந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள்ளாக வே நிதியைத் திரட்டி ரூ. 50 லட்சம் மதிப்பில் பள்ளியை சீரமைத்து உள்ளனர்.

    அதேபோன்று வருகிற அக்டோபர் 15-ந்தேதி நடைபெற உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பல்லாயிரக்கணக்கான முன்னாள் மாணவர்களை வருகை தர வைத்து சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.
    • மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது கடந்த கால பள்ளி வாழ்க்கை நினைவு படுத்தி உரையாடினார்கள்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கம்பை நல்லூர் ஸ்ரீராம் கல்வி குழுமங்களின் நிறுவனர் எம்.வேடியப்பன், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    முன்னாள் மாணவர் கம்பை ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சக்திவேல், மதி, குமார், கெலவள்ளி மனோகரன், கம்பை நல்லூர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் 45 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் பெரியண்ணன், வெங்கடேசன், ஹரிதாஸ், ஸ்ரீ ராமுலு, பன்னீர்செல்வம், ஜெயராமன், ராஜகோபால், ஆசிரியை பானுமதி மற்றும் தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் பழனி ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது கடந்த கால பள்ளி வாழ்க்கை நினைவு படுத்தி உரையாடினார்கள்.

    அப்போது பணியாற்றிய ஆசிரியர்களும் அப்போதைய ஆசிரிய பணியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    • முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் அனைவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடி மகிழ்ந்தனர்.
    • பங்கேற்க அவர்கள் தமிழ் நாட்டின் பிற மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து இருந்தனர்.

    செங்கல்பட்டு:

    கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் உள்ள அணுசக்தி மத்திய பள்ளியில் 2003-ம் ஆண்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் அனைவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் படித்த வகுப்பறை, ஆய்வுக்கூடம், விளையாட்டு திடல், கேண்டீன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பழைய நினைவுகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்தனர். பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்தனர். இதில் பங்கேற்க அவர்கள் தமிழ் நாட்டின் பிற மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து இருந்தனர்.

    • நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் பழைய மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
    • கல்வியை போதித்த ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில் மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் 1981-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை பயின்ற பள்ளி மாணவர்கள் சுமார் 75 பேர் 40 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

    பூலாங்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் 75 பழைய மாணவர்களும் தங்களின் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டு கலந்துரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தது.

    இதில் தங்களுக்கு பள்ளியில் கல்வியை போதித்த குருவாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டி கவுரவித்து அவர்களுடன் சேர்ந்து குழுபுகைப் படத்தை ஆர்வமுடன் எடுத்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பொழுது தங்களின் பள்ளி படிப்பு காலத்தில் நண்பர்கள் உணவருந்தியதை நினைவு கூறும் வகையில் உணவினை ஒருவருக்கொருவர் பரிமாறிய நிகழ்ச்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியப் படுத்தியது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர்கள் குழு செய்திருந்தனர்.

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

    விருதுநகர்

    விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள ஹாஜி பி.செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1978-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் உமர் பாரூக் தலைமை தாங்கினார்.ஆசிரியர்கள் சுப்பையா, ஜப்பார், துரைப்பாண்டி, சார்லஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

    விழாவில் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படித்த நாங்கள் அரசுத்துறை அதிகாரிகளாகவும், தனியார் துறை அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளோம். இந்த நிலைக்கு நாங்கள் உயர்ந்ததற்கு காரணம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த விதமும் காரணம் என்றனர்.

    ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வெங்கடேஷ், சவுந்தரராஜன், ராஜேஸ்வரன், முகம்மது நெய்னார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராகிம் வாழ்த்துரை வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்.

    • இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும், தொழில்முனைவோராகவும் உள்ளனர்.
    • தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் வானதி சுரேஷ் பாடல் நிகழ்ச்சி, டி.ஜே. நிகழ்ச்சி நடக்கிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் சிட்கோ முதலிபாளையத்தில் அமைந்துள்ள நிப்ட்-டீ காலேஜ் ஆப் நிட்வேர் பேஷன் கல்லூரி 25-வது ஆண்டு நிறைவு செய்வதை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நாளை 1-ந் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இந்த கல்லூரியில் 1997-ம் ஆண்டு முதல் படித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த பதவிகளிலும், தொழில்முனைவோராகவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரேநாளில் சந்திக்கும் வாய்ப்பு இந்தநிகழ்ச்சி மூலம் சாத்தியமாகிறது. மேலும் தனியார் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் வானதி சுரேஷ் பாடல் நிகழ்ச்சி, டி.ஜே. நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    ×