search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எஸ்.ஆர். கல்லூரி"

    • பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
    • தாளாளர் ஆர்.சோலைசாமி, அட்வான்டேஜ் மேலாளர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    சிவகாசி

    அமெரிக்காவின் பன்னாட்டு ஐ.டி. நிறுவ னமான ரெட்ஹாட் நிறுவனம் இந்தியாவில் ரெட்ஹாட் லினகஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் திறமை சாலியான மாணவர்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூ ரியின் அசோசி யேஷன் பார் கம்ப்யூட்டிங் மெஷினரி அமைப்பின் மூலமாக ரெட்ஹாட் நிறுவ னத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைசாமி சென்னை, அட்வான்டேஜ் மேலாளர் சுகுமார் ஆகி யோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தென் தமிழகத்தை சேர்ந்த அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் ரெட்ஹாட் சர்வதேச சான்றிதழ் பெறுவதற்குரிய மையமாக பி.எஸ்.ஆர். கல்லூரி திகழும் என்பது குறிப்பிடத்தக்து.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண் குமார், கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராம திலகம், பேராசிரியர் பால சுப்பிரமணியன், பயிற்சியாளர்கள் மகேஷ்வரன், வசந்தகுமார் (அட்வான் டேஜ் புரோ) மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பி.எஸ்.ஆர். கல்லூரி என்.சி.சி. மாணவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
    • 150-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    டெல்லியில் 75-வது இந்திய குடியரசு தின விழா முகாம் நடந்தது. இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 3-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் துறையை சேர்ந்த என்.சி.சி. மாணவரும், சீனியர் அண்டா் ஆபீசருமான ஆர்.சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதல் மற்றும் 2-ம் பரிசுகளை வென்றார்.

    ஒரு மாதகாலத்திற்கும் மேலாக நடந்த இந்த முகாமில் அகில இந்திய அளவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர்.

    இந்த முகாமின் போது நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் சிவசுப்பிரமணியன் பாட்டுப் போட்டியில் முதல்பரிசும், நடனப்போட்டியில் முதல் மற்றும் 2-ம் பரிசும் பெற்றார்.

    நிறைவுவிழாவில் பிரதமர் மோடி என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த முகாமின் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இந்திய அரசாங்கத்தின் என்.சி.சி. தலைமை அதிகாரி லெப்டினட் ஜெனரல் குர்பீர் பால்சிங், மேஜர் ஜெனரல் ஷெராவத் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    இந்திய அளவில் தமிழக அணி அதிக பரிசுகளை பெற்று, 2-ம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அணியின் சார்பில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் சிவசுப்பிரமணியன் பரிசை பெற்றுக்கொண்டார்.

    வெற்றி பெற்ற மாணவரை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைத்தலைவர் மாதவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
    • கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைசாமி, இயக்குநர் விக்ேனசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, ெசன்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்லூரியின் சார்பில் டீன் மாரிச்சாமி, என்.ஐ.டி.டி.டி.ஆர். சார்பில் அதன் இயக்குநர் உஷா நடேசன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    சென்னையில் நடந்த இந்த நிகழ்வில் சென்னை என்.ஐ.டி.டி.டி.ஆர். முனைவர்கள் ரேணுகா தேவி, ஜனார்த்தனன், ராஜசேகரன், கிரிதரன் கல்லூரியின் ஐ.கியூ.ஏ.சி. பேராசிரியர். பால சுப்பிரமணியன், ஒருங்கி ணைப்பாளர் பிச்சிப்பூ, ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்வியில் ஒத்துழைப்பு தருதல், ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை பெறப்பட்டு இதன் மூலம் ஆசிரியர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளை என்.ஐ.டி.டி.டி.ஆர்.-ன் ஆய்வக வசதிகள், பயன்பாடு, ஆசிரியர் மேம்பாட்டுத் திறன் பயிற்சி, அரசின் நிதி பெறும் செயல்முறைத் திட்டங்கள் மற்றும் ஆய்வுகள், காப்புரிமை, இண்டர்ன்ஷிப் ஆகிய வற்றைப் பெறமுடியும்.

    மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் பாடங்களை இலவசமாக பதிவு செய்து கற்றுக் கொள்ளலாம். இந்த பு ரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்விற்கு முயற்சி செய்த பேராசிரியர்களை கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைசாமி, இயக்குநர் விக்ேனசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    • பி.எஸ்.ஆர். அலுமினி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடங்கியது
    • இந்த போட்டி பல சுற்றுகளாக முறையே கால்இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி என்ற சுற்றுகளாக நடைபெறுகிறது.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்..கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான முதலாமாண்டு ''பி.எஸ்.ஆர். அலுமினி கோப்பை- 2023'' கிரிக்கெட் போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தொடங்கி வைத்தார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் சுந்தர்ராஜன், கல்லூரி அகாடமிக் இயக்குநர் கோபால்சாமி, உடற்கல்வித்துறை தலைவர் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த போட்டியானது கல்லூரிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் ஆகியோருக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியில் பி.எஸ்.ஆர். அலுமினி அணி, பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கலைக்கல்லூரி, சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரி கிரிக்கெட் அணிகள் உள்பட 28 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டி பல சுற்றுகளாக முறையே கால்இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி என்ற சுற்றுகளாக நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் ெவற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 6 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2-ம் பரிசாக 5 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3-ம் பரிசாக பெறும்வற்கு ரூ.4 ஆயிரம் மற்றும் கோப்பையும், 4-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், உடற்கல்வித்துறை இயக்குநர் சுந்தரமுர்த்தி, பேராசியர்கள் ரமேஷ், செந்தில்குமார், ராதா மற்றும் இதர பேராசிரியர்கள் இணைந்து செய்துள்ளனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் மாணவர்களுக்கான ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடநத்து.
    • இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான ஊக்கமூட்டும் நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக சென்னை ''காட் இந்தியா டிரஸ்ட்'' முரளிஜி சுவாமி கலந்து கொண்டு பேசினார்.

    முதலாமாண்டு துறைத்தலைவர் ஸ்ரீராம் வரவேற்றார். சுவாமியின் சீடர்களான லலிதா, பவானி, சாந்தி, சந்திரபிரகாஷ் ஆகியோரும் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மதுரை சமூகப்பணித்துறையைச் சேர்ந்த 23 மாணவர்களும் கலந்து கொண்டு களப்பணியாற்றினர் .

    சிவகாசி

    இயற்கை வளங்களை பேணிகாக்கும் விதமாகவும், மழைபெறுவதற்கும், வளாகத்தை பசுமையாக மாற்றும் விதமாக, விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மாவட்ட வருமானவரித்துறை, மதுரை விஷ்டு ஹெல்ப் அறக்கட்டளை மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி விழாவை தொடங்கி வைத்தார்.இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை, கூடுதல் ஆணையாளர் ரங்கராஜன், வருமானவரித்துறை ஆய்வாளர் மலையப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர். டீன் மாரிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 400 நாட்டு மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன.

    இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 70 மாணவர்களும், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மதுரை சமூகப்பணித்துறையைச் சேர்ந்த 23 மாணவர்களும் கலந்து கொண்டு களப்பணியாற்றினர் .

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், விருதுநகர், மதுரை மாவட்ட வருமானவரித்துறை அலுவலர் பணியாளர் குழு, மதுரை விஷ்டு ஹெல்ப் அறக்கட்டளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்-பேராசிரியர் துர்க்கை ஈஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ரோபாடிக்ஸ்- ஆட்டோமேஷன் கருத்தரங்கம் நடந்தது.
    • ரோபோடிக்ஸ் பயிற்சியை சிறப்பு விருந்தினர் நடத்தினார்.

    சிவகாசி

    பொறியாளர் தினத்தை முன்னிட்டு சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையின் மாணவர்கள் சங்க தொடக்க விழா மற்றும் "ரோபாடிக்ஸ் ஆண்டு ஆட்டோமேஷன்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆகியவை நடந்தது.

    கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைச்சாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் எஸ்.விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் டீன் பி.மாரிச்சாமி சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் எச். கனகசபாபதி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பி.ஜி.விஷ்ணுராம் வாழ்த்தி பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக மேட் லேப் என்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் சேவை மேலாளர் எஸ்.முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் தினத்தை தொடங்கி வைத்தார். இந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளராக தேர்ந்தெ டுக்கப்பட்ட கே.ராஜபாண்டி, கே.தேவராஜ் (4-ம் ஆண்டு), கோபி ஆனந்த் (3-ம் ஆண்டு) ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

    விழாவை முன்னிட்டு இறுதி யாண்டு மாணவர்க ளுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சியை சிறப்பு விருந்தினர் நடத்தினார். இந்த பயிற்சியில் நவீன இயந்திரவியல் துறையில் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தானியங்கி கருவிகளின் சிறப்பு அம்சங்களையும் அவற்றின் செயல்பாட்டினையும் எடுத்துரைத்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் குமாரசாமி, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் முத்தையா நன்றி கூறினார்.

    • பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு திறன் பயிற்சி நடந்தது.
    • பல்வேறு துறைகளை சேர்ந்த 50 - க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர் - பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியல் துறை மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பு இணைந்து 3 நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தியது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.

    இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார். முதல்வர் விஷ்ணுராம் துவக்க உரையாற்றினார். டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக கோவை என்த்து டெக்னாலஜி சொலுசன்ஸ் நிறுவனத்தின் டெக்னிக்கல் லீட் முனைவர் கே.சுப்பிரமணியன் பங்கேற்றார். அவர் பேசுகையில், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இணையதளத்தின் பயன்பாடுகளையும் இந்த துறையில் தற்போது நடைபெற்று வரும் ஆராய்ச்சிகளையும் எடுத்துரைத்தார் .

    மேட் லேப் மென்பொருள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயல்முறை பயிற்சிகள் அளித்த அவர், அதில் உள்ள ஆராய்ச்சிக்கான தகவல்களையும் எடுத்துரைத்தார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 50 - க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பா

    ளர்களான கார்த்திகேயன், தனம் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    ×