search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.எஸ்.ஆர். கல்லூரி: மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
    X

    மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

    பி.எஸ்.ஆர். கல்லூரி: மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

    • பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மதுரை சமூகப்பணித்துறையைச் சேர்ந்த 23 மாணவர்களும் கலந்து கொண்டு களப்பணியாற்றினர் .

    சிவகாசி

    இயற்கை வளங்களை பேணிகாக்கும் விதமாகவும், மழைபெறுவதற்கும், வளாகத்தை பசுமையாக மாற்றும் விதமாக, விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மாவட்ட வருமானவரித்துறை, மதுரை விஷ்டு ஹெல்ப் அறக்கட்டளை மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி விழாவை தொடங்கி வைத்தார்.இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை, கூடுதல் ஆணையாளர் ரங்கராஜன், வருமானவரித்துறை ஆய்வாளர் மலையப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர். டீன் மாரிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 400 நாட்டு மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன.

    இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 70 மாணவர்களும், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மதுரை சமூகப்பணித்துறையைச் சேர்ந்த 23 மாணவர்களும் கலந்து கொண்டு களப்பணியாற்றினர் .

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், விருதுநகர், மதுரை மாவட்ட வருமானவரித்துறை அலுவலர் பணியாளர் குழு, மதுரை விஷ்டு ஹெல்ப் அறக்கட்டளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்-பேராசிரியர் துர்க்கை ஈஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×