search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passenger shade"

    • பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
    • காளிமுத்து, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நெல்மடூர் கிராமத்தில் எம்.எல்.ஏ. நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதீப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ், பரமக்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு, கிளைச் செயலாளர் முருகவேல், காளிமுத்து, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைப் பணிக்காக இடிக்கப்பட்டது
    • பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையொட்டி காவேரிப்பாக்கம் பேரூராட்சி அமைந்துள்ளது.

    இப்பகுதியில் இருந்து சென்னை, அரக்கோணம், ஸ்ரீபெரும்புத்தூர், ஓசூர், பெங்களூர், சித்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல காவேரிப்பாக்கம், அத்திப்பட்டு, திருப்பாற்கடல், ராமாபுரம், கடப்பேரி, கட்டளை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள், முதியோர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பஸ் நிலையத்திற்கு வருகின்றனர்.

    இதன் காரணமாக காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் பகுதியில் மக்கள் கூட்டம் பரப்பரப்பாக காணப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக பயணியர் நிழற்குடை இடிக்கப்பட்டது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்ப டவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்த பகுதி முக்கிய வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிற்கும் சந்திப்பாக இருப்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து நிழற்குடையை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட் பட்ட பாட்டிக்குளம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நகர தலைவர் கோபால், நகராட்சி துணைத் தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு பயணிகள் நிழற் குடையை ரிப்பன் வெட்டியும், கல்வெட்டை திறந்து வைத் தும், குத்துவிளக்கு ஏற்றினார்.

    தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், காங் கிரஸ் மாவட்ட செயலாளர் கல்பனா, வழக்கறிஞர் தனசேக ரன், மாவட்ட பிரதிநிதி ஷாஷிக்குமார், நகராட்சி பொறியா ளர் ஆசிர்வாதம், துப்புரவு ஆய்வாளர் வடிவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அருகே பயணிகள் நிழற்குடை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-சிவகங்கை மெயின்ரோட்டில் இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் ஊராட்சி ஒன்றியம் வண்ணாம்பாறைபட்டி ஊராட்சியில் பொது நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-சிவகங்கை மெயின்ரோட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதை பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    இதில் மேலூர் யூனியன் தலைவர் பொன்னுசாமி, வண்ணாம்பாறைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூமாரி மகாராஜன், துணைத் தலைவர் சின்ன கருப்பு, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், ஜெயபாலன், யூனியன் பொறியாளர்கள் மணிமாறன், நெடுஞ்செழியன், உறங்கான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வெள்ளலூர் இளங்கண்ணன், கோட்டநத்தம்பட்டி கந்தப்பன், கிடாரிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஆய்வு
    • ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது

    செய்யாறு:

    செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அருகில் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிழற்குடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆற்காடு சாலையில் கல்லூரி அருகில் நிழற்குடம் கட்ட இடத்தை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெ.கே. சீனிவாசன், ஞானவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகில் பயணிகள் நிழற்குடையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை அருகில் பொதுமக்களின் நலன்கருதி ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

    அதேபோல் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி பஸ் பராமரிப்பு மைதா னத்திற்கு பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டது. இவற்றின் திறப்பு விழா நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடை யையும், பேவர் பிளாக் தளத்தையும் திறந்து வைத்தார்.

    அப்போது எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து துறை மூலம் பெண்களுக்கு கட்டண மில்லா பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்து சிறப்பான சேவை செய்துள்ளார். இந்த சேவையை பெண்கள் போற்றி வருகின்றனர். அதுபோல் ராஜபா ளையம் தொகுதியில் அரசின் வழிகாட்டுதலின்படி 2 டிப்போ மேலாளர்களும் பஸ் சேவையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்' என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் மாரியப்பன், பொது மேலாளர் சிவலிங்கம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், துறை மேலாளார் மாரி முத்து, ஜீவா, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கமல கண்ணன், தவம், கவுன்சிலர் ஜான்கென்னடி, வார்டு செயலாளர் குருசாமி, முனியராஜ், நாகேசுவரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அங்கன்வாடி மைய கட்டிடத்தை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • அம்பல் ஊராட்சியில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகத்தை திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, அம்பல் ஊராட்சியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் மற்றும் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதி புரத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் ஆகியவற்றையும் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் ஒன்றியக் குழு தலைவர் இரா.இராதாகிருட்டிணன், வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், ஒன்றிய குழு உறுப்பினர் பெரியமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், முருகன், சீதளா பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.20 லட்சத்தில் கட்டப்படுகிறது
    • சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலசப்பாக்கம் தாலுக்கா எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் கலசப்பாக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தி.சரவணன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க கூறினார்.

    அப்போது கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், பி.டி.ஓ. சத்தியமூர்த்தி ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார் நகர செயலாளர் சவுந்தர்ராஜன் ஒன்றிய கவுன்சிலர் செண்பகவல்லி ஊராட்சி மன்ற தலைவர் வித்யாபிரசன்னா உட்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×