search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமருகல் ஒன்றியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் அங்கன் வாடி மைய கட்டிடம் - பயணிகள் நிழலகம்
    X

    புதிய கட்டிடங்களை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    திருமருகல் ஒன்றியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் அங்கன் வாடி மைய கட்டிடம் - பயணிகள் நிழலகம்

    • அங்கன்வாடி மைய கட்டிடத்தை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • அம்பல் ஊராட்சியில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகத்தை திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, அம்பல் ஊராட்சியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் மற்றும் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதி புரத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் ஆகியவற்றையும் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் ஒன்றியக் குழு தலைவர் இரா.இராதாகிருட்டிணன், வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், ஒன்றிய குழு உறுப்பினர் பெரியமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், முருகன், சீதளா பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×