கலசப்பாக்கத்தில் பயணிகள் நிழற்குடை

ரூ.20 லட்சத்தில் கட்டப்படுகிறது சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு
கலசப்பாக்கத்தில் பயணிகள் நிழற்குடை
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கலசப்பாக்கம் தாலுக்கா எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் கலசப்பாக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தி.சரவணன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க கூறினார்.

அப்போது கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், பி.டி.ஓ. சத்தியமூர்த்தி ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார் நகர செயலாளர் சவுந்தர்ராஜன் ஒன்றிய கவுன்சிலர் செண்பகவல்லி ஊராட்சி மன்ற தலைவர் வித்யாபிரசன்னா உட்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com