ரூ.7 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை

ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
ரூ.7 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை
Published on

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட் பட்ட பாட்டிக்குளம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நகர தலைவர் கோபால், நகராட்சி துணைத் தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு பயணிகள் நிழற் குடையை ரிப்பன் வெட்டியும், கல்வெட்டை திறந்து வைத் தும், குத்துவிளக்கு ஏற்றினார்.

தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், காங் கிரஸ் மாவட்ட செயலாளர் கல்பனா, வழக்கறிஞர் தனசேக ரன், மாவட்ட பிரதிநிதி ஷாஷிக்குமார், நகராட்சி பொறியா ளர் ஆசிர்வாதம், துப்புரவு ஆய்வாளர் வடிவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com