செய்யாறில் பயணியர் நிழற்குடை

ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஆய்வு ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது
செய்யாறு அரசு கல்லூரி அருகில் நிழற்குடை அமைப்பதற்கான இடத்தை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த போது எடுத்த படம்.
செய்யாறு அரசு கல்லூரி அருகில் நிழற்குடை அமைப்பதற்கான இடத்தை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த போது எடுத்த படம்.
Published on

செய்யாறு:

செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அருகில் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிழற்குடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆற்காடு சாலையில் கல்லூரி அருகில் நிழற்குடம் கட்ட இடத்தை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெ.கே. சீனிவாசன், ஞானவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com