என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Velmurugan"
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் மீது சுங்கச் சாவடியை தாக்கியதாக ஏற்கனவே வழக்கு உள்ளது. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்த நிலையில் வேல் முருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேல்முருகன் பேசினார்.
அவரது பேச்சை அடிப்படையாக வைத்தே திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 3 சட்ட பிரிவுகளின் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
நாகர்கோவில்:
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கில் ஜாமீன் பெற்று நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். இன்று 5-வது நாளாக அவர் கையெழுத்து போட்டார். அப்போது அவரை வெளிமாவட்ட கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அதன்பின் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தல் ரீதியாக மக்களை சந்திப்பதற்கு தமிழக அரசு பயப்படுகிறது. இந்த ஆட்சியில் மீனவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் விரோத ஆட்சியாக தற்போதுள்ள ஆட்சி நடைபெறுகிறது.
மோடி அரசின் சூப்பர் முதல்வராக தமிழக கவர்னர் ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காது. சட்டசபைக்கு தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். தேர்தல் வந்தால் எந்த சாதனையை கூறி அவர்களால் ஓட்டு கேட்க முடியும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, டெல்டா விவசாயிகள் தற்கொலை, ஒகி புயலால் மீனவர்கள், விவசாயிகள் பாதிப்புபோன்றவற்றை அவர்களால் சாதனைகளாக சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த லாபமும் இல்லை. பெரும் பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தான் லாபம் அடைந்துள்ளன.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு துரோகம் செய்து விட்டது. இதன் காரணமாக ஏ.டி.எம்.களில் காத்து கிடந்த பலர் உயிரை விட்டனர்.
தமிழகத்தில் சொந்த நாட்டிலேயே மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எங்கும் மக்களின் அழுகுரல், கூக்குரல் தான் கேட்கிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி 150 அமைப்புகளை ஒருங்கிணைந்து செயல்படுகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #velmurugan #tngovernor #tnchiefminister
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சியினரும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தினர். இதில் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்டது தொடர்பாக வேல்முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுபோல நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாகவும் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் போலீசார் அவரை கைது செய்து சென்னை ஜெயிலில் அடைத்தனர்.
ஜெயிலில் இருந்த வேல்முருகனுக்கு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் நாகர்கோவிலில் தங்கி கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து வேல்முருகன் நாகர்கோவில் வந்தார். கோட்டார் போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜராகி கையெழுத்திட்டார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எங்கள் கட்சியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது எனக்கு அந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டது.
அதன்பிறகு 4 நாட்களுக்கு பிறகு என்னை கைது செய்தனர். தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்த என்னை விமான நிலையத்தில் தடுத்து கைது செய்தனர். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் துவண்டுவிட மாட்டேன். பொதுமக்களுக்காக என்னுடைய போராட்டம் தொடரும்.
நான் ஜெயிலில் இருந்த போது திண்டுக்கல்லில் நடந்த டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது வாகனம் ஒன்று எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜெயிலில் இருந்த என் மீது வழக்கு போடப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டு என்னை கைது செய்ய தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் போராட்டம் நடத்தும் பாரதிராஜா, சீமான், டைரக்டர் கவுதமன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது ஏற்புடையது அல்ல.
சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள், விவசாயிகள் ஆதரவு தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அங்கு 99.99 சதவீதம் மக்கள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதாகத்தான் கூறுவார்கள். ஆனால் முதல்-அமைச்சர் முழு யானையையே சோற்றில் மறைக்கிறார்.
இப்போது முதல்-அமைச்சராக இருப்பதால் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் வருகிறார். பதவி இழந்தால் இவர் மக்களை சந்திக்க வர வேண்டும். தேர்தல் வரும் போதும் மக்களிடம்தான் வர வேண்டும். அப்போது மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது தெரிய வரும்.
கவர்னர் அவரது அதிகாரத்தை மீறி ஆய்வு நடத்தி வருகிறார். இதை தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தைரியமானவர்கள். எத்தகைய சவால்களையும் சந்திக்கும் மன வலிமை கொண்டவர்கள். கவர்னரின் மிரட்டலையும் அவர்கள் எதிர்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடந்தது.
அப்போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை (என்.எல்.சி.யை) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து நெய்வேலி அனல் மின்நிலையம் போலீசார் வேல்முருகன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீது இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை சிலர் தாக்கினர்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த இரு வழக்குகளில் வேல்முருகன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சார்பில் ஜாமீன் கேட்டு உளுந்தூர்பேட்டை கோர்ட்டிலும், கடலூர் கோர்ட்டிலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வேல்முருகன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி நெய்வேலி அனல்மின் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #Velmurugan #HighCourt
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், சுங்க சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கசாவடியை அடித்து நொறுக்கினர்.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கடந்த 26-ந் தேதி கைது செய்து திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி வேல்முருகன் சார்பில் விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை நேற்று நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சரோஜினிதேவி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் வேல்முருகனின் 15 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்தது. இதையடுத்து அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சென்னை புழல் சிறையில் இருந்து விழுப்புரத்துக்கு தனி வேனில்பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்.
இன்று மதியம் 12 மணிக்கு வேல்முருகனை விழுப்புரம் கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் நீதிபதி லதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேல்முருகனை சென்னைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடைய வேல்முருகனை விழுப்புரம் கோர்ட்டுக்கு அழைத்து வரும் தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் கோர்ட் முன்பு திரண்டனர். வேல்முருகனை விடுதலை செய்ய கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். #velmurugan
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
பின்னர் சுங்கச்சாவடியை அவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்தி குமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 28-ந் தேதி மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #Velmurugan
சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை, அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழர் பேரவை சார்பில் பழ.நெடுமாறன், தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை அறிந்து தீக்குளித்து இறந்த ஜெகன்சிங் உருவ படத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
தமிழகத்தின் நலன் காக்க அறவழியில் போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகமாகும். தமிழர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய தமிழக அரசு அறவழியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கொன்றுள்ளது. ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், இந்தி திணிப்பு போன்ற தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு குறியாக உள்ளது. இதற்கு துணையாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மாசுகட்டுப்பாட்டு வாரிய உத்தரவை வைத்து தான் தமிழக அரசு மூடியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, சட்டமன்றத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை பொய் வழக்குகளில் கைது செய்து புழல் சிறையில் தமிழக அரசு அடைத்துள்ளது. அவர் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட புதிய வழக்குகள் புனையப்பட்டுள்ளன. இதை வன்மையாக கண்டிக்கிறோம். வேல்முருகன் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்பப்பெறவேண்டும்.
காவிரி பிரச்சினையில் முதல்-அமைச்சர் உள்பட தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்துக்காக வாதாடிய வக்கீல் நபாதேவும் ‘மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது’ என்று குற்றம்சாட்டிய நிலையில் காவிரி பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்துப் பேசினார் என்பதற்காக வேல்முருகன் மீது மட்டும் தேசவிரோத வழக்கு போடப்பட்டிருப்பது ஏன்? தமிழக அரசு இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளை கைவிட்டு ஜனநாயக பண்போடு நடந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #thirumavalavan #velmurugan
உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை கடந்த 25-ந்தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சிறையில் வேல்முருகன் உண்ணாவிரதம் இருந்தார். கடந்த 28-ந்தேதி அவரை வைகோ சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினார்.
இதையடுத்து வேல்முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். எனினும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி நெய்வேலியில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வேல்முருகன் மீது நெய்வேலி தெர்மல் நகர் போலீசார் திடீரென தற்போது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே இன்று காலை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வேல்முருகன் திடீரென புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது தேச துரோக வழக்கை கண்டித்து மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக சென்றபோது என்னை கைது செய்தனர். என் மீதான கைது நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்.
நேற்று இரவு நெய்வேலி போலீசார் தேசதுரோக வழக்கில் என்னை கைது செய்திருப்பதாக கூறினார்கள். அது முதல் நான் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளேன். உணவு, மருந்து, டிரிப்ஸ் எடுக்கவில்லை.
இலங்கையில் ராணுவ அடக்கு முறையை கணடித்து திலீபன் உண்ணாவிரதம் இருந்தது போல் நானும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன்.
மத்திய, மாநில அரசுகளின் அழுத்தத்தின் காரணமாகவே டீனை கட்டாயப்படுத்தி அவசர சிகிச்சை பிரிவில் இருந்த என்னை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள்.
பல்வேறு தமிழ் அமைப்பினர் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கி சூட்டை கண்டித்தும் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதுபோல், துப்பாக்கி சூட்டில் பலியான என் உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.
தூத்துக்குடியில் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி கூறி உள்ளார். அவர்தான் தனது படங்களில் மது குடிப்பது மற்றும் புகை பிடிப்பது போன்று காட்சிகள் அமைத்து இளைய தலைமுறை தம்பி, தங்கைகளை தவறான பாதைக்கு அழைத்து சென்று உள்ளார்.
அறவழியில் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறிய ரஜினியை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து வேல்முருகனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதியம் 12 மணி அளவில் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். #Velmurugan
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின்போது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்திகுமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 28-ந் தேதி மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி (பொறுப்பு) திருமகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த ஜாமீன்மனு விசாரணையை வருகிற ஜூன் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #VelMurugan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்