search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chepauk"

    • சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
    • டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், சேப்பக்கத்தில் நடைபெறும் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. மற்றும் எல்.எஸ்.ஜி. அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளை ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10.40 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டிக்கெட்டுகளின் விலை ரூ. 1700, ரூ. 2 ஆயிரத்து 500, ரூ. 3 ஆயிரத்து 500, ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ. 6 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • 15.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே லக்னோ எடுத்திருந்தது.
    • சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்டாய்னிஸ் 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது.

    டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னிலும், இஷான் கிஷன் 15 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.

    இந்த சரிவுக்குப் பின் கேமரான் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது.

    11வது ஓவரில் அணியின் ஸ்கோர் 104 ஆக இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேமரான் கிரீன் அவுட் ஆனார்.

    அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 41 ரன்கள் விளாசினார். திலக் வர்மா 26 ரன்களிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், கிறிஸ் ஜோர்டான் 4 ரன்னிலும், நேஹல் வதேரா 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யஷ் தாகூர் 3 விக்கெட்டுகள், மோஷின் கான் ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில், 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனார். 

    தொடர்ந்து, மயேர்ஸ் 18 ரன்களிலும், குருணல் பாண்டியா 8 ரன்களிலும், பிரேராக் மாங்கட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 ரன்களிலும், கிருஷ்ணப்பா கவுதம் 2 ரன்களிலும், ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். நிக்கோலஸ் பூரன் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

    தீபக் ஹூடாவும், கிருஷ்ணப்பா கவுதமும் சொர்ப்ப ரன்னில் ரன் அவுட் ஆகினர். அடுத்தடுத்து 3 ரன் அவுட் லக்னோவிற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது.

    15.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே லக்னோ எடுத்திருந்தது. 31 பந்துகளில் 83 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் லக்னோ தொடர்ந்து விளையாடியது.

    நவீன் உல் அக் மற்றும் மோஹ்சின் கான் களமிறங்கினர். இதில், நவீன் உல் அக் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மோஹ்சின் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளும், கிரிஷ் ஜோர்டான் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 101ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது. இதனால், லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறுகிறது.

    நேற்று பிளே ஆப் சுற்றில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் குவாலிபையர் 2-ல் மும்பை அணி எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2023-ம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் இந்தியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகள் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.
    • சேப்பாக்கத்தில் மார்ச் 22-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

    மும்பை:

    2023-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    இதில் இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

    இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியிலும் விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள்போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இலங்கைக்கு எதிரான தொடர்:

    முதல் டி20 போட்டி : ஜனவரி 3, மும்பை

    2-வது டி20 போட்டி : ஜனவரி 5, புனே

    3-வது டி20 போட்டி : ஜனவரி 7, ராஜ்கோட் .

    முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 10, கவுகாத்தி

    2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 12, கொல்கத்தா

    3-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 15, திருவனந்தபுரம் .

    நியூசிலாந்துக்கு எதிரான தொடர்:

    முதல் டி20 போட்டி: ஜனவரி 18 , ஹைதராபாத்

    2-வது டி20 போட்டி: ஜனவரி 21, ராய்பூர்

    3-வது டி20 போட்டி: ஜனவரி 24, இந்தூர்

    முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 27, ராஞ்சி

    2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 29, லக்னோ

    3-வது ஒருநாள்: பிப்ரவரி 1, அகமதாபாத்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்:

    முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13, நாக்பூர்

    2-வது டெஸ்ட்: பிப்ரவரி 17-21,டெல்லி

    3-வது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா

    4-வது டெஸ்ட்: மார்ச் 9-13, அகமதாபாத்

    முதல் ஒருநாள்: மார்ச் 17, மும்பை

    2-வது ஒருநாள்: மார்ச் 19, விசாகப்பட்டினம்

    3-வது ஒருநாள்: மார்ச் 22, சென்னை .

    ஐபிஎல் சீசன் 2019 கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடியும் 2-வது இடத்தை பிடித்த சென்னை அணிக்கு 12.5 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
    ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதல் இடத்தை பிடித்து கோப்பையை தட்டி சென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 12.5 கோடி வழங்கப்பட்டது.  
    சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று 4- வது முறையாக கோப்பையை வென்றது.
    ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன் கொடுத்தார். அடுத்த ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில்  டி காக் மூன்று சிக்ஸ் விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 3 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது.

    டி காக் விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைக்கையில், சர்துல் தாகூர் வீசிய ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 4 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா எம்எஸ் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 45 ரன்களாக இருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். தொடக்க ஜோடி ஆட்டமிழந்ததும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது. அந்த அணி 7 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், இஷான் கிஷன் 23 ரன்னிலும், குருணால் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மும்பை 14.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.  3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷன் ஜோடி 36 பந்தில் 37 ரன்களே எடுத்தது.

    6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். அப்போது 14.4 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

    பொல்லார்டு அவ்வப்போது சிக்ஸ் தூக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 18-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸ் தூக்கினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது பந்தில் சாஹர் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்திலும் சாஹர் ரன் விட்டுக்கொடுக்கவில்லை.

    கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.  பொல்லார்டு 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

    151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி களமிறங்கியது.  வாட்சன், டு பிளிசிஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். டு பிளிசிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் குர்ணால் பாண்டியா ஓவரில் ஸ்டேம்பிங் என்ற முறையில் வெளியேறினார். அடுத்த வந்த ரெய்னா 14 பந்துகளில் 8 ரன்களும் ராயுடு 1 ரன்களிலும் டோனி 2 ரன்களிலும் வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. மலிங்கா வீசிய 16 ஓவரில் பிராவோ ஒரு சிக்சர் வாட்சன் 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 16 ஓவரில் 108 ரன்கள் குவித்தது. வாட்சனுக்கு 3 கேட்சகளை தவற விட்டனர் மும்பை இந்தியன்ஸ் அணி.

    சென்னை அணிக்கு 18 பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்டது. குர்ணால் பாண்டியா வீசிய 17-வது ஓவரில் வாட்சன் 3 சிக்ஸ் விளாசினார். இதனால் சென்னை அணிக்கு 12 பந்துகளில் 18 மட்டுமே தேவைப்பட்டது. 

    கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரின் 3-வது பந்தில் வாட்சன் ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி 2 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது சர்துல் தாகூர் 2 ரன்கள் அடிக்க கடைசி பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது சர்துல் தாகூர் அவுட் ஆனார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #IPL2019 #MIvCSK
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே அடைந்த தோல்விக்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இன்னும் 13 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே இதுவரை ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்திருக்கிறது.

    இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.



    சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ‘நம்பர் ஒன்’ இடத்தை வலுப்படுத்துவதில் சென்னை அணி தீவிரம் காட்டி வருகிறது.

    தொடக்க வரிசை வீரர்களின் பேட்டிங் தான் சென்னை அணிக்கு கவலைக்குரியதாக இருந்தது. அந்த குறையை போக்கிய ஷேன் வாட்சன் முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசி அசத்தினார். கேப்டன் டோனி, ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோரும் பார்மில் இருப்பது சென்னை அணிக்கு உற்சாகம் தருகிறது. பந்து வீச்சில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    அது மட்டுமின்றி உள்ளூரில் ஆடுவது சென்னை அணிக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கக்கூடிய விஷயமாகும். இந்த சீசனில் இங்கு நடந்த 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ள சென்னை அணி, உள்ளூரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையோடு பயணிக்கிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அவர்களது இடத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு சென்னை அணி வஞ்சம் தீர்த்துக் கொள்ளுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

    ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற எஞ்சிய 4 ஆட்டங்களில் 2-ல் அந்த அணி வெற்றி பெற்றாக வேண்டும். 5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் காணும் மும்பை அணியும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

    மும்பை: குயின்டான் டி காக், ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், பென் கட்டிங், குருணல் பாண்ட்யா, ராஹல் சாஹர், பும்ரா, மலிங்கா, மயங்க் மார்கண்டே.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    ஐ.பி.எல். போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #IPL2019 #CSK #RCB
    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    ஐ.பி.எல். போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்கள் 4 அடுக்கு பாதுகாப்பை கடந்த பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    நுழைவு வாயில் இருந்து ஸ்டேடியத்தில் உள்ள இருக்கை வரை இந்த 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    கமாண்டோ உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் மைதானத்தை சுற்றிலும் சிறப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது காவிரி போராட்டம் காரணமாக மைதான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து ஐ.பி.எல். போட்டி புனேக்கு மாற்றப்பட்டது.


    கடந்த முறையை போல தற்போது எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஸ்டேடியத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சேப்பாக்கம் ஸ்டேடியத்தை சுற்றிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு நிபுணர்களும் மோப்பநாயும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ரசிகர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.



    வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல்களுக்கும் கூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல போலீசாருடன் தனியார் தன்னார்வ தொண்டர்களும் இணைந்து பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். போட்டி முடிந்து ரசிகர்கள் செல்வதற்கு வசதிக்காக இந்த ரெயில்கள் இயக்கப்படுகிறது. #IPL2019 #CSK #RCB 
    சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தை பார்க்க 12 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர். #IPL2019 #CSK
    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதனால் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

    23-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் 5-ந்தேதிவரை இரண்டு வார காலத்துக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது. ஐ.பி.எல். போட்டிக்கான முழு அட்டவணை விவரம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பயிற்சியில் ஈடுபட்டு வந்த வீரர்கள் நேற்று இரவு காட்சிப் போட்டியில் ஆடினார்கள். சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து 20 ஓவர் ஆட்டம் விளையாடினார்கள்.

    ரெய்னா

    ரெய்னா, முரளி விஜய், அம்பதிராயுடு, தீபக் சாஹர், ஹர்சல் தாகூர், ஹர்பஜன்சிங், கரண் சர்மா உள்ளிட்ட வீரர்கள் விளையாடினார்கள்.

    டோனி நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டதால் காட்சிப் போட்டியில் ஆடவில்லை.

    இந்த காட்சியை பார்க்க ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். சி.டி. மற்றும் இ ஸ்டாண்டின் கேலரிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். காட்சி போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. 12 ஆயிரம் ரசிகர்கள் இந்தப் போட்டியை ரசித்து உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் முதல் ஆட்டத்துக்காக டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. #IPL2019 #CSK
    பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க கோரி சென்னையில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்-வியாபாரிகள் த.வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்க கோரியும் சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் நாடு வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் சங்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், த.மா.கா பொருளாளர் கோவை தங்கம், வில்லிவாக்கம் ரவிச்சந்திரன், ராம்குமார், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், ஆர்.எஸ்.முத்து, விருகை முத்து, தாமோதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் த.வெள்ளையன் பேசியதாவது:-

    தமிழக அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

    பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை தொழிலை ஒழுங்கு படுத்தி பிளாஸ்டிக் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் பல லட்சம் பிளாஸ்டிக் தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்வி குறியாகும் நிலையை தடுக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலையை கருத்தில் கொண்டு தடை உத்தரவை விலக்கிகொள்ள முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிளாஸ்டிக் தடையை கண்டித்து சேப்பாக்கத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர் ஜி.சங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் தமிழக சட்டசபையில் 5.6.2018 அன்று 110-வது விதியின் கீழ் எந்தவித விவாதமும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் 1.1.2019 முதல் தமிழகத்தில் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    சுற்றுச்சூழலை காப்பாற்ற இந்த தடையாணை பிறப்பிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சிறு, குறு பிளாஸ்டிக் தொழில் முனைவோர்கள் தயாரிக்கும், விற்பனை செய்யும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் தடை செய்யப்படுகிறது.

    ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய பெரு முதலாளிகளும் தயாரிக்கும், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதுவும் தடை கிடையாது என்ற வி‌ஷயம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிந்தது.

    தமிழக அரசின் இந்த தடையால் பதிவு பெற்ற சிறு, குறு நிறுவனங்கள் 10 ஆயிரமும், பதிவு பெறாத சிறு, குறு நிறுவனங்கள் 15 ஆயிரமும் பாதிக்கப்படும். இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், மூன்று லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை இழப்பார்கள்.

    பிளாஸ்டிக் தடைஇல்லாத ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் இதர மாநிலங்களுக்கு தமிழக பிளாஸ்டிக் சந்தை முழுவதுமாக திறந்து விடப்படும்.

    தமிழகத்தின் ஜி.எஸ்.டி. வரி வருவாய் மற்றும் தமிழ்நாடு, மின்சார வாரியத்துக்கும் சேர்த்து சுமார் 2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.

    மேலும் இந்த தடையால் எங்கள் தொழில் எவ்வாறு பாதிக்கும் என்பதை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக முறையில் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

    வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மற்றும் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தெழில் சங்க தலைவர் அன்புராஜனும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

    நாளை தமிழகம் மற்றும் பாண்டியில் உள்ள அனைத்து பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் அனைத்தையும் கதவு அடைப்பு செய்து விட்டு பிளாஸ்டிக் தொழிலை நடத்தி வரும் சிறு, குறு தொழில் முனைவோர்களும், தொழிலாளர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    மத்திய அரசு பிளாஸ்டிக் தொழில் சம்பந்தமாக ஒரு இறுதி கொள்கை முடிவு எடுத்து இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும் வரை தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை முதல்-அமைச்சர் தள்ளி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கடந்த மாதம் 26-ந்தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக வேல்முருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
    சென்னை:

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் மீது சுங்கச் சாவடியை தாக்கியதாக ஏற்கனவே வழக்கு உள்ளது. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

    இந்த நிலையில் வேல் முருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேல்முருகன் பேசினார்.

    அவரது பேச்சை அடிப்படையாக வைத்தே திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 3 சட்ட பிரிவுகளின் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
    சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற நினைவேந்தல் பேரணியில் பங்கேற்க வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். #Marina #Police #Arrest
    சென்னை:

    இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 13 இயக்கங்கள் இன்று பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன.

    ஆனால், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் அனுமதி கொடுப்பது கிடையாது. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நினைவேந்தல் நிகழ்ச்சி எனும் பெயரில் தடையை மீறி ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. 

    இதற்கிடையே, மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மெரினாவில் பல்வேறு அமைப்பினர் நுழையாமல் இருக்க போலீசார் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் பாரதி சாலை முதல் கண்ணகி சாலை வரை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் பேரணியாக செல்ல வந்தனர். இந்த பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி மற்றும் தெலகான் பாகவி ஆகியோரும் பங்கேற்றனர்.

    நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை கைதாகுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, தடையை மீறி மெரினா செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். #Marina #Police #Arrest
    ×